பொழுதுபோக்கை மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சி, இன்று நம் அனைவரின் வாழ்விலும் தொலைந்து போன காட்சிகளைத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள் அதிக கவனம் செலுத்துவதாகவும், தமிழகத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 6.5 எபிசோடுகளைப் பார்ப்பதாகவும், அதிலும் குறிப்பிட்ட 3 சானல்களை 54 சதவீதம் பேர் பார்ப்பதாகவும் தனியார் நிறுவனம் ஒன்றின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கேரளத்தில் இது 4 எபிசோடுகளாக உள்ளதாகவும், பிற்பகலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் கேரளம், கர்நாடகத்தை விட தமிழகமும், ஆந்திரமும் தான் முன்னணியில் உள்ளதாகவும், அதிலும் முன்னணியில் இருப்பவர்கள் பெண்கள் என்றும் அந்தப் புள்ளிவிவரம் மேலும் தெரிவிக்கிறது.
தொலைக்காட்சிகளால் நம்மவர்கள் அடைந்த பயன்தான் என்ன? பக்கத்து வீடுகளுடனான தொடர்பும், சச்சரவுகளும் குறைந்துள்ளது. கொலையும், கொள்ளைகளும், வீடுகளில் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன என்பது தான் பதில். பெண்களையும், தொடர்களையும் மையமாக வைத்தே இன்றைய டிவி சேனல்கள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கொலைக்காட்சிகளாகத்தான் இருக்கின்றன என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.
நல்ல நிகழ்ச்சிகளை வழங்கும் டிவி சேனல்களுக்கு நம்மிடையே பெரிய அளவில் வரவேற்பில்லை என்பதும், இந்த தொலைக்காட்சி தொடர்களின் ஆதிக்கத்துக்குக் காரணம். பெண்களை மட்டுமன்றி குழந்தைகளையும் கவரக்கூடிய வகையில் ஏராளமான டிவி சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பதாகத்தான் உள்ளன.
சிறுவயதிலேயே டிவிக்கு அடிமையாகும் குழந்தைகள் கண்பார்வைக் குறைபாடுகளுக்கு உள்ளாவதாகவும், மனரீதியான பாதிப்புக்குள்ளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை வீதியில் கொண்டாடிய காலம் போய் இன்று டிவியில் பார்த்து ரசிக்கிற காலத்தில் இருக்கிறோம். பண்டிகைக் காலங்களில் கோயில்களுக்குச் செல்வது, உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வருவது போன்ற பழக்க வழக்கங்கள் எல்லாம் இன்று நம்மிடம் இருந்து மறைந்து போய்விட்டது (மறந்து போய்விட்டது) என்றே சொல்லலாம்.
ஓடி விளையாடு பாப்பா என்று சொன்ன கவிஞர் பாரதி வாழ்ந்த நாட்டில், இன்று நாம் டிவி முன் கூடி வாழ பழகிவிட்டோம். டிவி சேனல்கள், இணையத்தின் வருகையால் இன்றைக்கு மைதானங்களில் விளையாடுவோரின் எண்ணிக்கையும், தெருமுனைகளில் கதை பேசுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக இன்று ஏராளமானோரை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருப்பது இணையதளம். தொலைக்காட்சியின் பரிணாம வளர்ச்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது இணையதளம்.
அதன் விளைவு தான் மழைக்கு முளைத்த காளான்களைப் போன்று தோன்றியிருக்கும் தெருமுனை பிரவுஸிங் சென்டர்கள். தொலைக்காட்சியால் சமூகத்தில் மாற்றங்களும், இணையத்தால் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளன என்பதை ஒத்துக்கொள்ளும் அதே வேளையில் அதனால் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
மணிக்கணக்காக டிவி மற்றும் இணையதளங்களின் முன் அமரும் பெரும்பாலன இளைஞர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும், தவறான வழிகளில் செல்வதாகவும், சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சுற்றத்தோடும், உறவுகளோடும் வாழ்ந்தவர்கள் அக்கால மனிதர்கள். தொலைக்காட்சியோடும், இணையத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் இக்கால மனிதர்கள். இன்றைய இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதைவிட, அதைப் பார்த்து ரசிப்பதைத்தான் விரும்புகின்றனர். இதன்விளைவு கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளில் மெச்சுகின்ற அளவுக்கு இந்தியர் யாரும் இல்லை. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியின் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரியது.
உலக வரைபடத்தில் ஒளிந்திருக்கும் நாடுகள் கூட ஒலிம்பிக்கில் கோப்பையை வென்ற நாடுகளின் பட்டியலில் ஒளிர்கிறது. ஆனால் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவின் நிலையோ வெற்றிப்பட்டியலில் தேடும் நிலையில் தான் இருக்கிறது.
Thursday, December 17, 2009
Wednesday, December 9, 2009
!தெலங்கானா தனி மாநிலம்: மத்திய அரசு கொள்கை அளவில் சம்மதம்
தெலங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது என காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இத் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் புதன்கிழமை இரவு நடந்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது இதை தெரிவித்தார்.
இரண்டு சுற்றுகளாக நடந்த ஆலோசனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் மற்றும் ஆந்திர முதல்வர் ரோசய்யா ஆகியோர் பங்கேற்றனர்.
ஆந்திரத்தில் பற்றி எரியும் தெலங்கானா நெருப்பை அணைக்கும் முயற்சியாக காங்கிரஸ் மேலிடம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தனி மாநிலம் அமைப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முறையான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார்.
சட்டப்பேரவையில் தீர்மானம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற விவரத்தை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரசேகர ராவின் உடல் நலனில் மத்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. அவர் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தெலங்கானா போராட்டம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறுமாறு மாநில முதல்வர் ரோசய்யாவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.
மாணவர்களும் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சந்திரசேகர ராவின் உடல் நிலை குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் மீரா குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தெலங்கானா பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று கோரி மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. சந்திரசேகர ராவுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசே பொறுப்பு என்று பாஜக குற்றம்சாட்டியது.
தெலங்கானா பகுதி எம்.பி.க்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோரும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நிலைமையின் தீவிரத்தை எடுத்துக் கூறினர். தெலங்கானா போராட்டம் ஆந்திரத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னையாக மாறி உள்ளது. எனவே உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். சந்திரசேகர ராவின் உடல் நிலை குறித்து அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார் பிரதமர்.
மத்திய அரசின் முடிவை அடுத்து தெலங்கானா தனி மாநிலம் தொடர்பான அனைத்து போராட்டங்களும் கைவிடப்படும் என்று தெரிகிறது.
உண்ணாவிரதம் வாபஸ்
மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து கடந்த 11 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை சந்திரசேகர ராவ் புதன்கிழமை நள்ளிரவு கைவிட்டார். இதையடுத்து கடந்த 11 நாள்களாக ஆந்திரத்தை உலுக்கிய போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.
தொண்டர்கள் மகிழ்ச்சி
தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தொண்டர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சி தெரிவித்தனர். தெலங்கானா பிராந்தியத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர். காங்கிரஸ் கட்சியின் முடிவை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவிடம் தெரிவிப்பதற்காக தில்லியிலிருந்து புதன்கிழமை இரவே ஆந்திர முதல்வர் ரோசய்யா ஹைதராபாத் திரும்பினார்.நீண்ட நாள்களாக உள்ள தெலங்கானா தனி மாநில கோரிக்கை நிறைவேற சந்திரசேகர ராவின் உண்ணாவிரதப் போராட்டம் அடிப்படையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
"இது போதாது"
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. தனி மாநிலத்துக்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமாராவ் கூறினார்.
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது என காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இத் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் புதன்கிழமை இரவு நடந்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது இதை தெரிவித்தார்.
இரண்டு சுற்றுகளாக நடந்த ஆலோசனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் மற்றும் ஆந்திர முதல்வர் ரோசய்யா ஆகியோர் பங்கேற்றனர்.
ஆந்திரத்தில் பற்றி எரியும் தெலங்கானா நெருப்பை அணைக்கும் முயற்சியாக காங்கிரஸ் மேலிடம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தனி மாநிலம் அமைப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முறையான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார்.
சட்டப்பேரவையில் தீர்மானம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற விவரத்தை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரசேகர ராவின் உடல் நலனில் மத்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. அவர் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தெலங்கானா போராட்டம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறுமாறு மாநில முதல்வர் ரோசய்யாவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.
மாணவர்களும் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சந்திரசேகர ராவின் உடல் நிலை குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் மீரா குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தெலங்கானா பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று கோரி மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. சந்திரசேகர ராவுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசே பொறுப்பு என்று பாஜக குற்றம்சாட்டியது.
தெலங்கானா பகுதி எம்.பி.க்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோரும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நிலைமையின் தீவிரத்தை எடுத்துக் கூறினர். தெலங்கானா போராட்டம் ஆந்திரத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னையாக மாறி உள்ளது. எனவே உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். சந்திரசேகர ராவின் உடல் நிலை குறித்து அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார் பிரதமர்.
மத்திய அரசின் முடிவை அடுத்து தெலங்கானா தனி மாநிலம் தொடர்பான அனைத்து போராட்டங்களும் கைவிடப்படும் என்று தெரிகிறது.
உண்ணாவிரதம் வாபஸ்
மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து கடந்த 11 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை சந்திரசேகர ராவ் புதன்கிழமை நள்ளிரவு கைவிட்டார். இதையடுத்து கடந்த 11 நாள்களாக ஆந்திரத்தை உலுக்கிய போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.
தொண்டர்கள் மகிழ்ச்சி
தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தொண்டர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சி தெரிவித்தனர். தெலங்கானா பிராந்தியத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர். காங்கிரஸ் கட்சியின் முடிவை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவிடம் தெரிவிப்பதற்காக தில்லியிலிருந்து புதன்கிழமை இரவே ஆந்திர முதல்வர் ரோசய்யா ஹைதராபாத் திரும்பினார்.நீண்ட நாள்களாக உள்ள தெலங்கானா தனி மாநில கோரிக்கை நிறைவேற சந்திரசேகர ராவின் உண்ணாவிரதப் போராட்டம் அடிப்படையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
"இது போதாது"
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. தனி மாநிலத்துக்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமாராவ் கூறினார்.
Wednesday, December 2, 2009
புதிய விக்கிரமாதித்தன், வேதாளமும் பழைய காதையும்
தனது அதிகாரத்தை ஏற்காமல், விடுதலைக்காகப் போராடிய தனது நாட்டு மக்களையே துரத்தியடித்து அழித்து, அதனையே ஒரு மாபெரும் வெற்றியாக கொண்டாடிய வேதாளம், இலங்கை ஆரண்யத்தில் தனது காட்டாட்சியை நீட்டித்துக் கொள்ள தேர்தலை எதிர்நோக்கியிருந்த நிலையில், தனக்கு கீழிருந்த பிசாசே தன்னை எதிர்த்து நிற்க முடிவெடுத்ததால் ஆடிப்போயுள்ள வேளையில், அதற்கு ஆதரவாக விக்கிரமாதித்தன் களமிறங்கியுள்ளது கொழும்புக் கதையில் ஒரு சுவராஸ்யமான திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை வெளியான நெம்பர் ஒன் தேசிய நாளிதழில் விக்கிரமாதித்தன் எழுதிய தலையங்கக் கதையை விவரம் அறியாதவர் யார் படித்தாலும், விக்கிரமாதித்தனின் 'அக்கறை' புரியாமல் குழம்பியிருப்பார்கள். அப்படிக் குழம்பியிருப்போரை தெளிவுபடுத்துவது விக்கிரமாதித்தனை நன்கு அறிந்த நமது கடமையல்லவா?
வேதாளம் எழுப்பிய எத்தனையோ கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த விக்கிரமாதித்தனைப் பற்றி, அதுவும் அவன் எழுதியுள்ள தலையங்கத்தைப் பற்றி, சில கேள்விகள் எழுப்பாமல் விட்டால், புரியாத கதை படித்த குறை ஏற்படும் அல்லவா?
இலங்கை ஆரண்யத்தை தொடர்ந்து ஆள முடிவு செய்த வேதாளத்தை எதிர்த்து, அதனோடு இணைந்து தமிழர்களை பங்கு போட்டுச் சாகடித்த பிசாசு, தேர்தலில் நிற்பது என்றால், அதுவும் அதற்கு மற்ற எதிர்க்கட்சிக் காட்டேரிகள் ஆதரவு தெரிவிப்பது என்றால் என்ன அர்த்தம்? அப்பட்டமான சந்தர்ப்பாவாதமல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் விக்கிரமாதித்தன்!
அந்த அளவோடு விக்கிரமாதித்தன் நின்றுவிடவில்லை. தனது சிங்களப் பெளத்த பேரினவாதப் பிடியில் இருந்து விடுதலைப் பெற போராடிய தனது நாட்டு மக்களை, அக்கம்பக்கத்து ஆரண்யங்களில் இருந்து ஆயுதங்களைப் பெற்று, கண்மூடித்தனமாக வேதாளம் அழித்தபோது, அதன் கட்டளையை ஏற்றுக் கொன்று குவித்த பிசாசு என்ன பேசியது என்பதை விக்கிரமாதித்தான் இப்போது நினைவுப்படுத்தி காட்டுகிறார்.
“இந்த நாடு சிங்களவர்களுக்கு உரியதே என்று நான் ஆழமாக நம்புகிறேன், தமிழர்கள் தாங்கள் சிறுபான்மையினர் என்பதை உணர்ந்து எங்களோடு வாழலாம். ஆனால் சிறுபான்மை என்ற காரணத்தைக் காட்டி தங்களுக்கு உரிமையற்ற எதையும் கேட்கக்கூடாது” என்று இன அழிப்பு உச்சக்கட்டத்தில் நடந்தபோது பிசாசு பேசியதைச் சுட்டிக்காட்டி, இப்படி தனது சிங்கள இன வெறியை அம்பலப்படுத்திய பிசாசு, இன்று அப்படியே மாற்றிப் பேசுகிறது என்று அங்கலாய்க்கிறார் விக்கிரமாதித்தன்.
என்னே விநோதம்! அன்றைக்கு ஏன் இந்த இனவெறி பேச்சைக் கண்டித்து விக்கிரமாதித்தன் தலையங்கம் தீட்டவில்லை என்று கேட்கத் தோன்றுகிறதா? அப்படி உங்கள் மனதில் கேள்வி எழுந்தால் விக்கிரமாதித்தனை இன்னும் நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள்.
இன்னும் ஒரு படி மேலே சென்று அன்று அந்த பிசாசு கூறிய மற்றோன்றையும் விக்கிரமாதித்தன் நினைவுப்படுத்திக்காட்டுகிறார். தனது கதைகளைப் படிக்கும் வாசகர்கள் மறந்திருப்பார்கள் அல்லவா? நினைவுப்படுத்த வேண்டாமா? “தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் ஜோக்கர்கள்” என்று பிசாசு கூறியதையும் சுட்டிக் காட்டுகிறார். அதற்காகத் தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவர்களே கூட பெரிதாக கோபித்துக் கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டாத விக்கிரமாதித்தன், இவ்வாறு கூறி வேதாள அரசிற்கு ஒரு இராஜரீதியான சங்கடத்தை ஏற்படுத்தினார் என்று கசிந்துருகுகிறார் இப்போது.
அதுமட்டுமல்ல, சுதந்திரப் வேங்கைகளை முழுமையாக வீழத்தி வெற்றிகண்டுள்ள நிலையில், 75 விழுக்காடு சிங்களவர்களுக்கும், மீதமுள்ள தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நிலையற்ற உறவை, அதிகாரப் பகிர்வு, சமத்துவம், நீதி ஆகிய அடிப்படைகளில் மறுவரையறை செய்ய வேண்டிய வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிசாசு தனக்கு எதிராக களத்தில் குதித்திருப்பதால் வேதாளம் சற்றும் மனந்தளரவில்லை என்று அதன் பெருமையைக் கூறி புளங்காகிதம் அடைகிறார் விக்கிரமாதித்தன்.
தனது பதவிக் காலம் இன்னுமும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையிலும், எதற்காகத் தேர்தலை உடனே நடத்த வேதாளம் முன்வந்துள்ளது தெரியுமா? வடக்கில் வாழும் மக்களுக்கு வேங்கைகளால் பறிக்கப்பட்ட வாக்குச் சுதந்திரத்தை மீண்டும் அளிப்பதற்குத்தானாம்! யே..அப்பா, எவ்வளவு பெரிய தியாகத்தை செய்கிறது வேதாளம்! மெய் சிலிர்க்க வைக்கிறார் விக்கிரமாதித்தன். வடக்கில் வாழும் மக்கள் வாக்குச் சுதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டுமே என்பதற்காகவே தேர்தலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடத்துகிறதாம் வேதாளம். ஆஹா..ஆஹா...வேதாளத்தின் கருணையே கருணை.
வடக்கில் வாழும் மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் குண்டுகள் வீசப்பட்டதா? பீரங்கியால் சுட்டால் மட்டும் போதாது என்பதற்காக, விமானங்களில் இருந்தும் குண்டுகள் பொழிப்பட்டதா? வன்னியில் ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் வரை அவர்களை துரத்தித் துரத்திக் கொன்றது வாக்குரிமை அளிக்கத்தானா? ‘எல்லாம் முடிந்த’ப் பிறகும் அவர்களை வன்னி முகாம்களில் சோறு தண்ணிக் காட்டாமல் முள்வேலிகளுக்குள் முடக்கி வைத்ததும், இன்னமும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேரை அடைத்து வைத்திருப்பதும் வாக்குரிமை சுதந்திரத்திற்குத்தானா? அவர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் சிங்களர்களை குடியேற்றம் செய்வது கூட, வடக்கு மக்களுக்கு வாக்குரிமை வழங்கத்தானா? அடேயப்பா... இவ்வளவு விவரங்களையும் இத்தனை நாள் விக்கரமாதித்தன் தெரிவிக்காமல் மறைத்துதான் ஏனோ? இது புரியாமல் தமிழர்களும், உலக நாடுகளும் என்னவெல்லாம் பேசிவருகின்றன... சே!
வேதாளத்தின் நோக்கமென்ன? அதிகாரப் பகிர்வு, சமத்துவம், நீதி! சொல்கிறார் விக்கிரமாதித்தன். இதெல்லாம் தான் எடுத்த பேட்டியில் வேதாளம் சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள், அதெல்லாம் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கில் கேட்கப்படாமலோ அல்லது சொல்லப்படாமலோ விடப்பட்டிருக்கலாம். வேதாளத்தின் நோக்கம் சமத்துவமே! நம்புங்கள், ஏனென்றால் இப்படிப்பட்ட கதைகளை அந்த வாசகர்கள் நம்புவதால்தானே அது நெம்பர் ஒன் தேசிய நாளிதழாக திகழ்கிறது!
அது சரி, அடுத்தக் காட்டு அரசியல் விவகாரத்தில் விக்கிரமாதித்தனுக்கு என்ன இவ்வளவு அக்கரை என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு கேள்வி எழலாம், ஆனால் விடை அவ்வளவு சாதாரணமானதல்ல. இதில் மிகப் பெரிய பன்னாட்டு அரசியல் அடங்கியுள்ளது, இல்லையென்றால், விக்கிரமாதித்தன் கூந்தல் இந்த அளவிற்கு ஆடுமா?
இலங்கை ஆரண்யத்தை, அதன் ஆட்சியை தனது பிடிக்குள் கொண்டுவந்துள்ளது பரத நாட்டின் வடக்கே ஆட்சி செய்யும் சிகப்புச் சாத்தான். அதில் விக்கிரமாதித்தன் உபகாரம் மிகவும் அதிகம். இலங்கை ஆரண்யத்தை சிகப்புச் சாத்தான் பிடியில் இருந்து தனது பிடிக்குள் கொண்டு வர உலகப் பெரும் ராட்ஷசன் முயன்று வருகிறது. அதன் ஆதரவு பெற்ற குட்டி அரசியல் காட்டேரிகளின் ஆதரவுடன்தான் பிசாசு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் பரத நாட்டின் நிலை என்ன என்பதில் வேதாளத்திற்குச் சந்தேகம். அதனைத் தீர்க்கத்தான் பரத நாட்டு அமைச்சனின் இலங்கை ஆரண்ய விஜயம் நடந்தது. இருந்தாலும் சந்தேகம் தீரவில்லை, காரணம்: ராட்ஷசன் பரதநாடுடன் கொண்டுள்ள ஸ்ட்ராஜிக் ரிலேசன்ஷிப்.
இந்தச் சூழலில், பிசாசு வெற்றி பெற்றால் இலங்கை ஆரண்யம் ராட்ஷசன் கைக்குப் போய்விடுமே என்பதுதான் விக்கிரமாத்தித்தனின் கவலை. கடந்த பல ஆண்டுகளாக கொழும்பு ஆரண்யத்திற்குச் சென்று வேதாளத்தை அடிக்கடி சந்தித்ததால் ஏற்பட்ட நல்லுறவு எங்கே பயன்றறுப் போய்விடுமோ என்ற விசனம் விக்கிரமாதித்தனுக்கு. அதனால் விளைந்த எழுத்தோவியம்தான் இன்று காலையில் நாம் படித்தது. இதில் மக்கள் நலனோ அல்லது உலக நலனோ உள்ளது என்று யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது.
இன்று காலை வெளியான நெம்பர் ஒன் தேசிய நாளிதழில் விக்கிரமாதித்தன் எழுதிய தலையங்கக் கதையை விவரம் அறியாதவர் யார் படித்தாலும், விக்கிரமாதித்தனின் 'அக்கறை' புரியாமல் குழம்பியிருப்பார்கள். அப்படிக் குழம்பியிருப்போரை தெளிவுபடுத்துவது விக்கிரமாதித்தனை நன்கு அறிந்த நமது கடமையல்லவா?
வேதாளம் எழுப்பிய எத்தனையோ கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த விக்கிரமாதித்தனைப் பற்றி, அதுவும் அவன் எழுதியுள்ள தலையங்கத்தைப் பற்றி, சில கேள்விகள் எழுப்பாமல் விட்டால், புரியாத கதை படித்த குறை ஏற்படும் அல்லவா?
இலங்கை ஆரண்யத்தை தொடர்ந்து ஆள முடிவு செய்த வேதாளத்தை எதிர்த்து, அதனோடு இணைந்து தமிழர்களை பங்கு போட்டுச் சாகடித்த பிசாசு, தேர்தலில் நிற்பது என்றால், அதுவும் அதற்கு மற்ற எதிர்க்கட்சிக் காட்டேரிகள் ஆதரவு தெரிவிப்பது என்றால் என்ன அர்த்தம்? அப்பட்டமான சந்தர்ப்பாவாதமல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் விக்கிரமாதித்தன்!
அந்த அளவோடு விக்கிரமாதித்தன் நின்றுவிடவில்லை. தனது சிங்களப் பெளத்த பேரினவாதப் பிடியில் இருந்து விடுதலைப் பெற போராடிய தனது நாட்டு மக்களை, அக்கம்பக்கத்து ஆரண்யங்களில் இருந்து ஆயுதங்களைப் பெற்று, கண்மூடித்தனமாக வேதாளம் அழித்தபோது, அதன் கட்டளையை ஏற்றுக் கொன்று குவித்த பிசாசு என்ன பேசியது என்பதை விக்கிரமாதித்தான் இப்போது நினைவுப்படுத்தி காட்டுகிறார்.
“இந்த நாடு சிங்களவர்களுக்கு உரியதே என்று நான் ஆழமாக நம்புகிறேன், தமிழர்கள் தாங்கள் சிறுபான்மையினர் என்பதை உணர்ந்து எங்களோடு வாழலாம். ஆனால் சிறுபான்மை என்ற காரணத்தைக் காட்டி தங்களுக்கு உரிமையற்ற எதையும் கேட்கக்கூடாது” என்று இன அழிப்பு உச்சக்கட்டத்தில் நடந்தபோது பிசாசு பேசியதைச் சுட்டிக்காட்டி, இப்படி தனது சிங்கள இன வெறியை அம்பலப்படுத்திய பிசாசு, இன்று அப்படியே மாற்றிப் பேசுகிறது என்று அங்கலாய்க்கிறார் விக்கிரமாதித்தன்.
என்னே விநோதம்! அன்றைக்கு ஏன் இந்த இனவெறி பேச்சைக் கண்டித்து விக்கிரமாதித்தன் தலையங்கம் தீட்டவில்லை என்று கேட்கத் தோன்றுகிறதா? அப்படி உங்கள் மனதில் கேள்வி எழுந்தால் விக்கிரமாதித்தனை இன்னும் நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள்.
இன்னும் ஒரு படி மேலே சென்று அன்று அந்த பிசாசு கூறிய மற்றோன்றையும் விக்கிரமாதித்தன் நினைவுப்படுத்திக்காட்டுகிறார். தனது கதைகளைப் படிக்கும் வாசகர்கள் மறந்திருப்பார்கள் அல்லவா? நினைவுப்படுத்த வேண்டாமா? “தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் ஜோக்கர்கள்” என்று பிசாசு கூறியதையும் சுட்டிக் காட்டுகிறார். அதற்காகத் தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவர்களே கூட பெரிதாக கோபித்துக் கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டாத விக்கிரமாதித்தன், இவ்வாறு கூறி வேதாள அரசிற்கு ஒரு இராஜரீதியான சங்கடத்தை ஏற்படுத்தினார் என்று கசிந்துருகுகிறார் இப்போது.
அதுமட்டுமல்ல, சுதந்திரப் வேங்கைகளை முழுமையாக வீழத்தி வெற்றிகண்டுள்ள நிலையில், 75 விழுக்காடு சிங்களவர்களுக்கும், மீதமுள்ள தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நிலையற்ற உறவை, அதிகாரப் பகிர்வு, சமத்துவம், நீதி ஆகிய அடிப்படைகளில் மறுவரையறை செய்ய வேண்டிய வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிசாசு தனக்கு எதிராக களத்தில் குதித்திருப்பதால் வேதாளம் சற்றும் மனந்தளரவில்லை என்று அதன் பெருமையைக் கூறி புளங்காகிதம் அடைகிறார் விக்கிரமாதித்தன்.
தனது பதவிக் காலம் இன்னுமும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையிலும், எதற்காகத் தேர்தலை உடனே நடத்த வேதாளம் முன்வந்துள்ளது தெரியுமா? வடக்கில் வாழும் மக்களுக்கு வேங்கைகளால் பறிக்கப்பட்ட வாக்குச் சுதந்திரத்தை மீண்டும் அளிப்பதற்குத்தானாம்! யே..அப்பா, எவ்வளவு பெரிய தியாகத்தை செய்கிறது வேதாளம்! மெய் சிலிர்க்க வைக்கிறார் விக்கிரமாதித்தன். வடக்கில் வாழும் மக்கள் வாக்குச் சுதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டுமே என்பதற்காகவே தேர்தலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடத்துகிறதாம் வேதாளம். ஆஹா..ஆஹா...வேதாளத்தின் கருணையே கருணை.
வடக்கில் வாழும் மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் குண்டுகள் வீசப்பட்டதா? பீரங்கியால் சுட்டால் மட்டும் போதாது என்பதற்காக, விமானங்களில் இருந்தும் குண்டுகள் பொழிப்பட்டதா? வன்னியில் ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் வரை அவர்களை துரத்தித் துரத்திக் கொன்றது வாக்குரிமை அளிக்கத்தானா? ‘எல்லாம் முடிந்த’ப் பிறகும் அவர்களை வன்னி முகாம்களில் சோறு தண்ணிக் காட்டாமல் முள்வேலிகளுக்குள் முடக்கி வைத்ததும், இன்னமும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேரை அடைத்து வைத்திருப்பதும் வாக்குரிமை சுதந்திரத்திற்குத்தானா? அவர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் சிங்களர்களை குடியேற்றம் செய்வது கூட, வடக்கு மக்களுக்கு வாக்குரிமை வழங்கத்தானா? அடேயப்பா... இவ்வளவு விவரங்களையும் இத்தனை நாள் விக்கரமாதித்தன் தெரிவிக்காமல் மறைத்துதான் ஏனோ? இது புரியாமல் தமிழர்களும், உலக நாடுகளும் என்னவெல்லாம் பேசிவருகின்றன... சே!
வேதாளத்தின் நோக்கமென்ன? அதிகாரப் பகிர்வு, சமத்துவம், நீதி! சொல்கிறார் விக்கிரமாதித்தன். இதெல்லாம் தான் எடுத்த பேட்டியில் வேதாளம் சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள், அதெல்லாம் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கில் கேட்கப்படாமலோ அல்லது சொல்லப்படாமலோ விடப்பட்டிருக்கலாம். வேதாளத்தின் நோக்கம் சமத்துவமே! நம்புங்கள், ஏனென்றால் இப்படிப்பட்ட கதைகளை அந்த வாசகர்கள் நம்புவதால்தானே அது நெம்பர் ஒன் தேசிய நாளிதழாக திகழ்கிறது!
அது சரி, அடுத்தக் காட்டு அரசியல் விவகாரத்தில் விக்கிரமாதித்தனுக்கு என்ன இவ்வளவு அக்கரை என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு கேள்வி எழலாம், ஆனால் விடை அவ்வளவு சாதாரணமானதல்ல. இதில் மிகப் பெரிய பன்னாட்டு அரசியல் அடங்கியுள்ளது, இல்லையென்றால், விக்கிரமாதித்தன் கூந்தல் இந்த அளவிற்கு ஆடுமா?
இலங்கை ஆரண்யத்தை, அதன் ஆட்சியை தனது பிடிக்குள் கொண்டுவந்துள்ளது பரத நாட்டின் வடக்கே ஆட்சி செய்யும் சிகப்புச் சாத்தான். அதில் விக்கிரமாதித்தன் உபகாரம் மிகவும் அதிகம். இலங்கை ஆரண்யத்தை சிகப்புச் சாத்தான் பிடியில் இருந்து தனது பிடிக்குள் கொண்டு வர உலகப் பெரும் ராட்ஷசன் முயன்று வருகிறது. அதன் ஆதரவு பெற்ற குட்டி அரசியல் காட்டேரிகளின் ஆதரவுடன்தான் பிசாசு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் பரத நாட்டின் நிலை என்ன என்பதில் வேதாளத்திற்குச் சந்தேகம். அதனைத் தீர்க்கத்தான் பரத நாட்டு அமைச்சனின் இலங்கை ஆரண்ய விஜயம் நடந்தது. இருந்தாலும் சந்தேகம் தீரவில்லை, காரணம்: ராட்ஷசன் பரதநாடுடன் கொண்டுள்ள ஸ்ட்ராஜிக் ரிலேசன்ஷிப்.
இந்தச் சூழலில், பிசாசு வெற்றி பெற்றால் இலங்கை ஆரண்யம் ராட்ஷசன் கைக்குப் போய்விடுமே என்பதுதான் விக்கிரமாத்தித்தனின் கவலை. கடந்த பல ஆண்டுகளாக கொழும்பு ஆரண்யத்திற்குச் சென்று வேதாளத்தை அடிக்கடி சந்தித்ததால் ஏற்பட்ட நல்லுறவு எங்கே பயன்றறுப் போய்விடுமோ என்ற விசனம் விக்கிரமாதித்தனுக்கு. அதனால் விளைந்த எழுத்தோவியம்தான் இன்று காலையில் நாம் படித்தது. இதில் மக்கள் நலனோ அல்லது உலக நலனோ உள்ளது என்று யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது.
Wednesday, November 18, 2009
தமிழ் சினிமா Vs. மலையாள சினிமா!!!
தமிழ் சினிமாவில் மாறாதவை என்று சில உண்டு. சேட்டுகள் சரளமாக தமிழ் பேசக் கற்று பல காலம் ஆகிறது. ஆனால் இந்த சேதி இன்னும் தமிழ் சினிமாவைப் போய்ச் சேரவில்லை.
தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட். மலையாளிகள் குறித்த சித்திரம் இன்னும் விசேஷம். ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் உதட்டை அழுத்தி, புட்டு வேணுமா என்று கேட்கும் டயலாக் கண்டிப்பாக உண்டு.
தமிழர்களுக்கு அரசியல் பார்வை சிறிது மங்கல் என்பதால், திருமதி நாயரின் முண்டோடும், மாராப்பு இல்லாத ஜாக்கெட்டோடும் தங்களது சித்தரிப்பை நிறுத்திக் கொண்டார்கள்.
மலையாளிகள் அப்படி அல்லவே! என்ன இருந்தாலும் கேரளா சோஷலிச பூமி. தத்துவங்கள் செழித்து வளர்ந்த நாடு. அரசியல் அறிவோ வெகு விசேஷம். மலையாளப் படங்களில் தமிழர் குறித்த சித்தரிப்பு, நம்மைப் போல், முண்டு ஜாக்கெட் என ஆடையோடு முடிந்து விடும் ஒரு படித்தானது அல்ல. காளி கையிலிருக்கும் சூலம் மாதிரி பல்முனைகள் கொண்டது! (குத்தினால் ஆள் குளோஸ்)
மலையாள திரைப்படங்களில் தமிழர்களை குறிக்கும் விசேஷ பெயர், பாண்டி! மூன்றெழுத்துப் பெயர் என்றாலும் பாண்டிக்கு அர்த்தங்கள் முன்நூறு. குளிக்காதவன்...இப்படி! ஏதாவது ஒரு மலையாளியை, பாண்டி மாதிரி இருக்கிறியே என்றால் போதும்; லாரியில் அடிபட்ட மாதிரி சிதறிப் போவான்.
அக்கரை அக்கரை அக்கரை என்றொரு படம். ப்ரியதர்ஷன் இயக்கியது. கடத்தல்காரன் ஒருவனை கண்டுபிடிக்க அமெரிக்கா செல்லும் மோகன்லால், அங்குள்ள உயரமான கட்டடங்களைப் பார்த்து பிரமித்தவாறு, அருகிலிருக்கும் சீனிவாசனிடம் இப்படிச் சொல்வார்; ''எல்.ஐ.சி. பில்டிங்கைப் பார்த்து வாய் பிளக்கும் தமிழர்கள், இதைப் பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்திடுவான்களே!''
முன்பு சென்னை வரும் மலையாளிகளின் முக்கிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக எல்.ஐ.சி. இருந்தது. அண்ணாந்து பார்க்க எஸ்.ஐ.சி. போலொரு கட்டடம் அன்று கேரளாவில் இல்லை. அந்த பொச்செரிச்சலில் அவலை நினைத்து இடித்த உரல்தான் மேலே உள்ள மோகன் லாலின் பேச்சு.
மற்றொரு படம், சுரேஷ் கோபி நடித்தது. பெரிய பீர் போத்தல் போலிருக்கும் நடிகர் ராஜூ போலீஸ் அதிகாரி. வழக்கம் போல ஒரு தமிழ் அடிபொடி வில்லன். அடிபொடி ராஜூவை பார்த்து கேட்பார்; ''நீ பொன்னுசாமி இல்லையா?'' தெரியாமல் சாணியை மிதித்த தொணியில் ராஜூ சொல்வார்; ''என்னது... பொன்னுச்சாமியா? நான் நல்ல ஐயங்கார் குடும்பத்துல பிறந்தவனாக்கும்.''
தமிழ்ப் பெயர்களான குப்புசாமி, பொன்னுசாமியெல்லாம் மலையாளிகளைப் பொறுத்தவரை தரக்குறைவானவை. முருகன், செல்வம் முதலான பெயர்களை வைக்க முன்பு தலித்துகளுக்கு அனுமதியில்லை. மீறி வைத்தார்கள் ஆதிக்கச் சாதியினரால் தண்டிக்கப்பட்டனர். மாடன், இருளன் போன்ற பெயர்களே அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ராஜூவின் பேச்சில் ஒலிப்பதும் அந்த ஆதிக்கச் சாதியினரின் மனோ நிலைதான்.
திரைப்படங்களில் நாம் மறந்தும் அரசியலை தொடுவதில்லை. முதலமைச்சர் கனவுடன் திரியும் நடிகர்களும், அரசியல் வேறு சினிமா வேறு என்று இரண்டையும் உஷாராக பிரித்தே வைத்திருக்கிறார்கள். நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டுக் கொண்டே, மகளிர் முன்னேற்றம் குறித்துப் பேச இதுவொரு செளகரியம்.
மலையாளிகள் வேறுமாதிரி. திரைப்படங்களில் அரசியல் பேசுவது அவர்களுக்கு கப்பையும், கள்ளும், கருமீனும் ஒன்றாக கிடைத்த மாதிரி. அதுவும் முல்லைப் பெரியாறு என்றால் கொள்ளை இன்பம், கூத்தாடி விடுவார்கள்!
மோகன்லாலின் உடையோன் படத்தின் வில்லன் சலீம்கெளஸ் ஒரு தமிழன். தமிழன் சொல்வான், ''தமிழ்நாட்டுல மழை பெஞ்சா உங்க கிணத்துல தண்ணி'' லாலுக்கு நக்கல் அதிகம். அவர் சொல்வார், '' அதுக்கு உங்க ஊர்ல மழை பெஞ்சாதானே!'' இன்னொரு காட்சி. தமிழ் வில்லன் சொல்வார், ''தமிழ்நாட்டு கரும்பு சாப்பிடுங்க, தேன் மாதிரி.'' பதிலடி பின்னாலேயே வரும். ''எங்க ஊர் தண்ணியே தேன் மாதிரிதான்!''
மலையாளிகளுக்கு தங்களது நீர் வளம் குறித்து செருக்கு உண்டு. தமிழ்நாட்டின் நீர் பற்றாக்குறை மீது வெறுப்பு உண்டு. தமிழ்நாடு ஒரு பொட்டல்காடு. கேரளா இயற்கை வளம் கொழிக்கும் கடவுளின் சொந்த தேசம்.
உண்மை என்னவென்றால், மூன்று நாள் நாம் தொடர்ச்சியாக பந்த் நடத்தினால், ஒட்டுமொத்த கேரளாவும் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதுதான். அரிசி முதல் பருப்பு வரை எல்லாமே இங்கிருந்துதான் கேரளா செல்கிறது.
இது பரவாயில்லை. தமிழனால் கேரளாவுக்கு குலநாசம் என்றொரு மனப்பிராந்தி மலையாளிகளுக்கு உண்டு. பல திரைப்படங்களில் இந்தப் பயங்கர கற்பனை தான் பாடுபொருள்.
இதுவும் மோகன்லால் படம். அவரது அண்ணன் நெடுமுடிவேணு. அக்மார்க் சுதேசியான அவர் கோக், பெப்சி முதலான சுதேசி தயாரிப்புகள் ஊரில் நுழையாமல் தடுத்தாட் கொள்பவர். அவரது சுதேசி கனவை தகர்க்கும், அயல்நாட்டுப் பொருட்களின் விற்பனையாளராக வருகிறவர் ஒரு தமிழர். சில பல சண்டைகளுக்குப் பிறகு தமிழனை துரத்தியடித்து கடவுளின் சொந்த தேசத்தின் கலாச்சாரத்தை மீட்டெடுப்பார் மோகன்லால்.
நரன் படத்திலும் மோகன்லாலுக்கு ஏறக்குறைய இதே கலாச்சார காப்பாளர் வேடம்தான். தமிழில் பெயர்ப் பலகை வைப்பதை எதிர்ப்பார் லால். அப்படி வைத்தால் கடைக்கு தமிழன் வருவான். கடையே கண்றாவியாகிவிடும். லாலின் பேச்சை கேட்காமல் ஒருவர் தமிழில் பெயர்ப் பலகை வைப்பார். அதிசயம்! அடுத்தக் காட்சியில் கடைக்கு வரும் தமிழர்கள் காசு தராமல் கடைக்காரனையே இழுத்துப் போட்டு மிதிப்பார்கள்
உலகமெல்லாம் உதைபடும் தமிழர்கள் இப்படி மலையாள சினிமாவில் மட்டும் அப்பாவி மலையாளிகளை உதைத்துக் கொண்டிருப்பார்கள். (இறுதியில் மோகன்லால் தனியாளாக அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்வது வேறு விஷயம்)
தமிழர்கள் குறித்த மலையாள சினிமாவின் இந்தப் 'பயங்கர கற்பனை' நடைமுறையிலும் உயிர்ப்புடன் இயங்குகிறது. பிழைப்புக்காக கேரளா செல்லும் தமிழர்களை எதிரிகளாகக் கருதி, தொழிற்சங்கங்களில் சேர்த்துக் கொள்ளாமல் பட்டினியில் தவிக்கவிடும் சம்பவங்கள் கேரளா முழுவதும் அரங்கேறும் தினசரி நிகழ்வுகள்.
மெத்த படித்த, அரசியலில் கரை கண்ட மலையாளிகளின் அரசியல் விழிப்புணர்வின் விளைச்சல் இது! நடிகர்களை நாடாள வைப்பவர்கள் என அவர்களால் இகழப்படும் தமிழர்களும், அவர்களைப் போல் 'அரசியல் விழிப்புணர்வு' பெற்றால், கொஞ்சம் கற்பனைதான் செய்து பார்ப்போம். சேட்டன்கள் டீ கடைகளை மூடி வாரிச் சுருட்டி ரயிலேற வேண்டியதுதான். அவர்களுடன் தமிழகத்தின் இட நெருக்கடியும், ஜன நெரிசலும் ரயிலேறி விடும். ஆக, தமிழர்கள் மலையாளிகள் அளவுக்கு அரசியல் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது, அவர்களது சுக வாழ்வுக்கும், ஆரோக்கியத்திற்குமே நல்லது.
சொல்லும் போது எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். தமிழர்களை முன்னிறுத்தி மலையாளிகளை கிண்டல் செய்யும் படங்களும் உண்டு. அதெல்லாம் அத்தி பூத்தார் போல. ஒரு அத்தி சத்தியன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா. பஞ்சாயத்து அளவிலேயே வெடிகுண்டு வீசுவது கேரள அரசியலில் ஓர் அங்கம். அப்படியொரு வெடிகுண்டு ஸ்பெஷலிஸ்ட் கம்யூனிஸ்டான இன்னசென்ட்.
தமிழ்நாட்டிலிருந்து வரும் பார்த்திபனை விரட்ட இன்னசென்ட் ஒரு பாம் வீசுவார். பார்த்திபன் அவரது காதைத் திருகி, இதுவா பாம்? எங்க ஊர்ல இது தீபாவளிக்கு வெடிக்கிறதுடா என்று தோப்புக்கரணம் போட வைப்பார். ஒவ்வொரு தோப்புக்கரணத்துக்கும், தமிழனும் மலையாளியும் ஒன்று என்று இன்னசென்ட் சொல்ல வேண்டும்.
யதார்த்தத்தில் காதைத் திருகியோ, தோப்புக்கரணம் போட வைத்தோ யாரையும் திருத்த முடியாது. தமிழ் சினிமா சேச்சிகளின் முண்டையும், ஜாக்கெட்டையும் கடந்து வரவேண்டும். மலையாள திரைப்படங்கள் தமிழர் குறித்த பயங்கர கற்பனையிலிருந்து மீள வேண்டும்.
இரு கையும் தட்டினால்தானே ஓசை?
தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட். மலையாளிகள் குறித்த சித்திரம் இன்னும் விசேஷம். ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் உதட்டை அழுத்தி, புட்டு வேணுமா என்று கேட்கும் டயலாக் கண்டிப்பாக உண்டு.
தமிழர்களுக்கு அரசியல் பார்வை சிறிது மங்கல் என்பதால், திருமதி நாயரின் முண்டோடும், மாராப்பு இல்லாத ஜாக்கெட்டோடும் தங்களது சித்தரிப்பை நிறுத்திக் கொண்டார்கள்.
மலையாளிகள் அப்படி அல்லவே! என்ன இருந்தாலும் கேரளா சோஷலிச பூமி. தத்துவங்கள் செழித்து வளர்ந்த நாடு. அரசியல் அறிவோ வெகு விசேஷம். மலையாளப் படங்களில் தமிழர் குறித்த சித்தரிப்பு, நம்மைப் போல், முண்டு ஜாக்கெட் என ஆடையோடு முடிந்து விடும் ஒரு படித்தானது அல்ல. காளி கையிலிருக்கும் சூலம் மாதிரி பல்முனைகள் கொண்டது! (குத்தினால் ஆள் குளோஸ்)
மலையாள திரைப்படங்களில் தமிழர்களை குறிக்கும் விசேஷ பெயர், பாண்டி! மூன்றெழுத்துப் பெயர் என்றாலும் பாண்டிக்கு அர்த்தங்கள் முன்நூறு. குளிக்காதவன்...இப்படி! ஏதாவது ஒரு மலையாளியை, பாண்டி மாதிரி இருக்கிறியே என்றால் போதும்; லாரியில் அடிபட்ட மாதிரி சிதறிப் போவான்.
அக்கரை அக்கரை அக்கரை என்றொரு படம். ப்ரியதர்ஷன் இயக்கியது. கடத்தல்காரன் ஒருவனை கண்டுபிடிக்க அமெரிக்கா செல்லும் மோகன்லால், அங்குள்ள உயரமான கட்டடங்களைப் பார்த்து பிரமித்தவாறு, அருகிலிருக்கும் சீனிவாசனிடம் இப்படிச் சொல்வார்; ''எல்.ஐ.சி. பில்டிங்கைப் பார்த்து வாய் பிளக்கும் தமிழர்கள், இதைப் பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்திடுவான்களே!''
முன்பு சென்னை வரும் மலையாளிகளின் முக்கிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக எல்.ஐ.சி. இருந்தது. அண்ணாந்து பார்க்க எஸ்.ஐ.சி. போலொரு கட்டடம் அன்று கேரளாவில் இல்லை. அந்த பொச்செரிச்சலில் அவலை நினைத்து இடித்த உரல்தான் மேலே உள்ள மோகன் லாலின் பேச்சு.
மற்றொரு படம், சுரேஷ் கோபி நடித்தது. பெரிய பீர் போத்தல் போலிருக்கும் நடிகர் ராஜூ போலீஸ் அதிகாரி. வழக்கம் போல ஒரு தமிழ் அடிபொடி வில்லன். அடிபொடி ராஜூவை பார்த்து கேட்பார்; ''நீ பொன்னுசாமி இல்லையா?'' தெரியாமல் சாணியை மிதித்த தொணியில் ராஜூ சொல்வார்; ''என்னது... பொன்னுச்சாமியா? நான் நல்ல ஐயங்கார் குடும்பத்துல பிறந்தவனாக்கும்.''
தமிழ்ப் பெயர்களான குப்புசாமி, பொன்னுசாமியெல்லாம் மலையாளிகளைப் பொறுத்தவரை தரக்குறைவானவை. முருகன், செல்வம் முதலான பெயர்களை வைக்க முன்பு தலித்துகளுக்கு அனுமதியில்லை. மீறி வைத்தார்கள் ஆதிக்கச் சாதியினரால் தண்டிக்கப்பட்டனர். மாடன், இருளன் போன்ற பெயர்களே அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ராஜூவின் பேச்சில் ஒலிப்பதும் அந்த ஆதிக்கச் சாதியினரின் மனோ நிலைதான்.
திரைப்படங்களில் நாம் மறந்தும் அரசியலை தொடுவதில்லை. முதலமைச்சர் கனவுடன் திரியும் நடிகர்களும், அரசியல் வேறு சினிமா வேறு என்று இரண்டையும் உஷாராக பிரித்தே வைத்திருக்கிறார்கள். நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டுக் கொண்டே, மகளிர் முன்னேற்றம் குறித்துப் பேச இதுவொரு செளகரியம்.
மலையாளிகள் வேறுமாதிரி. திரைப்படங்களில் அரசியல் பேசுவது அவர்களுக்கு கப்பையும், கள்ளும், கருமீனும் ஒன்றாக கிடைத்த மாதிரி. அதுவும் முல்லைப் பெரியாறு என்றால் கொள்ளை இன்பம், கூத்தாடி விடுவார்கள்!
மோகன்லாலின் உடையோன் படத்தின் வில்லன் சலீம்கெளஸ் ஒரு தமிழன். தமிழன் சொல்வான், ''தமிழ்நாட்டுல மழை பெஞ்சா உங்க கிணத்துல தண்ணி'' லாலுக்கு நக்கல் அதிகம். அவர் சொல்வார், '' அதுக்கு உங்க ஊர்ல மழை பெஞ்சாதானே!'' இன்னொரு காட்சி. தமிழ் வில்லன் சொல்வார், ''தமிழ்நாட்டு கரும்பு சாப்பிடுங்க, தேன் மாதிரி.'' பதிலடி பின்னாலேயே வரும். ''எங்க ஊர் தண்ணியே தேன் மாதிரிதான்!''
மலையாளிகளுக்கு தங்களது நீர் வளம் குறித்து செருக்கு உண்டு. தமிழ்நாட்டின் நீர் பற்றாக்குறை மீது வெறுப்பு உண்டு. தமிழ்நாடு ஒரு பொட்டல்காடு. கேரளா இயற்கை வளம் கொழிக்கும் கடவுளின் சொந்த தேசம்.
உண்மை என்னவென்றால், மூன்று நாள் நாம் தொடர்ச்சியாக பந்த் நடத்தினால், ஒட்டுமொத்த கேரளாவும் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதுதான். அரிசி முதல் பருப்பு வரை எல்லாமே இங்கிருந்துதான் கேரளா செல்கிறது.
இது பரவாயில்லை. தமிழனால் கேரளாவுக்கு குலநாசம் என்றொரு மனப்பிராந்தி மலையாளிகளுக்கு உண்டு. பல திரைப்படங்களில் இந்தப் பயங்கர கற்பனை தான் பாடுபொருள்.
இதுவும் மோகன்லால் படம். அவரது அண்ணன் நெடுமுடிவேணு. அக்மார்க் சுதேசியான அவர் கோக், பெப்சி முதலான சுதேசி தயாரிப்புகள் ஊரில் நுழையாமல் தடுத்தாட் கொள்பவர். அவரது சுதேசி கனவை தகர்க்கும், அயல்நாட்டுப் பொருட்களின் விற்பனையாளராக வருகிறவர் ஒரு தமிழர். சில பல சண்டைகளுக்குப் பிறகு தமிழனை துரத்தியடித்து கடவுளின் சொந்த தேசத்தின் கலாச்சாரத்தை மீட்டெடுப்பார் மோகன்லால்.
நரன் படத்திலும் மோகன்லாலுக்கு ஏறக்குறைய இதே கலாச்சார காப்பாளர் வேடம்தான். தமிழில் பெயர்ப் பலகை வைப்பதை எதிர்ப்பார் லால். அப்படி வைத்தால் கடைக்கு தமிழன் வருவான். கடையே கண்றாவியாகிவிடும். லாலின் பேச்சை கேட்காமல் ஒருவர் தமிழில் பெயர்ப் பலகை வைப்பார். அதிசயம்! அடுத்தக் காட்சியில் கடைக்கு வரும் தமிழர்கள் காசு தராமல் கடைக்காரனையே இழுத்துப் போட்டு மிதிப்பார்கள்
உலகமெல்லாம் உதைபடும் தமிழர்கள் இப்படி மலையாள சினிமாவில் மட்டும் அப்பாவி மலையாளிகளை உதைத்துக் கொண்டிருப்பார்கள். (இறுதியில் மோகன்லால் தனியாளாக அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்வது வேறு விஷயம்)
தமிழர்கள் குறித்த மலையாள சினிமாவின் இந்தப் 'பயங்கர கற்பனை' நடைமுறையிலும் உயிர்ப்புடன் இயங்குகிறது. பிழைப்புக்காக கேரளா செல்லும் தமிழர்களை எதிரிகளாகக் கருதி, தொழிற்சங்கங்களில் சேர்த்துக் கொள்ளாமல் பட்டினியில் தவிக்கவிடும் சம்பவங்கள் கேரளா முழுவதும் அரங்கேறும் தினசரி நிகழ்வுகள்.
மெத்த படித்த, அரசியலில் கரை கண்ட மலையாளிகளின் அரசியல் விழிப்புணர்வின் விளைச்சல் இது! நடிகர்களை நாடாள வைப்பவர்கள் என அவர்களால் இகழப்படும் தமிழர்களும், அவர்களைப் போல் 'அரசியல் விழிப்புணர்வு' பெற்றால், கொஞ்சம் கற்பனைதான் செய்து பார்ப்போம். சேட்டன்கள் டீ கடைகளை மூடி வாரிச் சுருட்டி ரயிலேற வேண்டியதுதான். அவர்களுடன் தமிழகத்தின் இட நெருக்கடியும், ஜன நெரிசலும் ரயிலேறி விடும். ஆக, தமிழர்கள் மலையாளிகள் அளவுக்கு அரசியல் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது, அவர்களது சுக வாழ்வுக்கும், ஆரோக்கியத்திற்குமே நல்லது.
சொல்லும் போது எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். தமிழர்களை முன்னிறுத்தி மலையாளிகளை கிண்டல் செய்யும் படங்களும் உண்டு. அதெல்லாம் அத்தி பூத்தார் போல. ஒரு அத்தி சத்தியன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா. பஞ்சாயத்து அளவிலேயே வெடிகுண்டு வீசுவது கேரள அரசியலில் ஓர் அங்கம். அப்படியொரு வெடிகுண்டு ஸ்பெஷலிஸ்ட் கம்யூனிஸ்டான இன்னசென்ட்.
தமிழ்நாட்டிலிருந்து வரும் பார்த்திபனை விரட்ட இன்னசென்ட் ஒரு பாம் வீசுவார். பார்த்திபன் அவரது காதைத் திருகி, இதுவா பாம்? எங்க ஊர்ல இது தீபாவளிக்கு வெடிக்கிறதுடா என்று தோப்புக்கரணம் போட வைப்பார். ஒவ்வொரு தோப்புக்கரணத்துக்கும், தமிழனும் மலையாளியும் ஒன்று என்று இன்னசென்ட் சொல்ல வேண்டும்.
யதார்த்தத்தில் காதைத் திருகியோ, தோப்புக்கரணம் போட வைத்தோ யாரையும் திருத்த முடியாது. தமிழ் சினிமா சேச்சிகளின் முண்டையும், ஜாக்கெட்டையும் கடந்து வரவேண்டும். மலையாள திரைப்படங்கள் தமிழர் குறித்த பயங்கர கற்பனையிலிருந்து மீள வேண்டும்.
இரு கையும் தட்டினால்தானே ஓசை?
Wednesday, October 7, 2009
தப்பான தாளங்கள் - சிறுகதை
பச்சை பசேல் நிலச் சதுக்கம், மத்தியில் சிறந்த கட்டடக் கலை நுணுக்கங்களைப் பின்பற்றி கட்டிய கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் தன் அறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு மடிக்கணினியில் மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதவன். அவன் அப்பா, அமெரிக்காவிலிருந்து தகவல் அனுப்பியிருந்தார்.
"ஆதவா என் நண்பன் சேஷூவின் மகன் பாரதி பணி நிமித்தமாக சென்னை வருகிறான். நட்பு ரீதியாக அவனைச் சந்தித்து, அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்" என்று எழுதியிருந்தார்.
அவர் சொன்ன தேதியில், ஆதவனும் பாரதியைப் பார்க்க 'கொரொல்லோவில்' ஏறிப் புறப்பட்டான். தனக்குப் பிரியமான இசையைக் கேட்டுக்கொண்டே பயணித்ததில் தூரமே தெரியவில்லை அவனுக்கு. அந்த வீட்டு வாசலில் அழைப்பு மணி பொத்தானை அழுத்தினான். கதவு லேசாக திறந்தது. ஓர் இளம் பெண் எட்டிப் பார்த்தாள், அவளது பாதி முகமும், சுருண்ட கூந்தலும் தான் தெரிந்தது. கண்களாலே கபடி விளையாடினாள். என்ன? என்பது போல் பார்வையாலேயே கேட்டாள்.. ஆதவனுக்கு ஒன்றும் புரியவில்லை... வியர்த்துப் போனான்.. அலுவலகத்தில் சகட்டுமேனிக்கு எல்லோரையும் அதட்டுபவனுக்கு வார்த்தை வெளியே வராமல் தவித்தான். அவள் அழகில் மூர்ச்சையுற்றான். சுதாரித்துக்கொண்டு "பா.......ர.....தி" என்று இழுத்தான்.
மறுபடியும் அவள் கண்களாலேயே மேலே என்று புருவத்தை உயர்த்திப் பதில் கூறிவிட்டு, கதவை அறைந்து சாத்தினாள். மேலே சென்று பாரதியுடன் அமர்ந்திருந்தாலும் அவன் மனம் மட்டும் கீழேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. யார் அந்தப் பெண், கதவோரத்தில் வெண்ணிலாவாய். எப்படி அவளைக் காண்பது, அவளிடம் பேசுவது... இருப்புக் கொள்ளாமல் தவித்தான் ஆதவன்...
அன்று முதல் காலை நடைப் பயணம், மாலை நடைப் பயணம், மதிய உணவு என எல்லாம் அந்தக் குடியிருப்பைச் சுற்றியே அமைத்துக்கொண்டான். எந்த வேளையில் அவள் வெளியில் வருவாளோ...! எப்படியாவது அவளிடம் ஒரு முறையாவது பேசிவிட வேண்டும் என்று துடித்தான். அவளது பாதி தெரிந்த முகமே இவ்வளவு அழகென்றால்.. என்று நினைக்கும்போதெல்லாம், உடம்பில் ஜிவ்வென்று மின்சாரம் பாய்ந்தது. அவனது நெடுநாள் தவத்திற்கு அன்று பலன் கிடைத்தது. பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி புவனேஷ்வரி அந்த வீட்டை விட்டு வெளியே வந்தாள். மிதிவண்டி எடுத்துக்கொண்டு தெருவில் ஓட்டலானாள். மெல்ல அவளருகில் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பின்பு அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தான்.
புவனேஷ்வரி சிரித்துக்கொண்டே அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். உள்ளே செல்லும் போதே 'மம்மி யாரோ ஒரு அங்கிள் வந்திருக்காங்க' என்று அழைத்தாள். ஆதவனும் சரி அந்தப் பெண்ணின் அம்மாவிடமே விஷயத்தைச் சொல்லிச் சம்மதம் பெறுவோம் என்று தயாரானான். ஓர் அறையிலிருந்து கதவை மெல்லத் திறந்துக்கொண்டு அதே போல் அவள் பாதிமுகம் தெரிய எட்டிப் பார்த்தாள். அந்த பட்டாம்பூச்சிக் கண்களைக் கண்ட ஆதவன், தன்னை மறந்து விண்ணில் பறந்தான். அவள் மெல்ல அருகில் வர ஆரம்பித்தாள். உட்காரும் படி கண்களாலேயே சைகை காட்டினாள்.
நாற்காலியில் அமரும் வேளையில் எதிரே சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். புகைப்படத்தில் அந்தப் பெண், அந்தச் புவனேஷ்வரி, ஓர் ஆண் என்று குடும்பமாகச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் புரிந்தது அவனுக்கு, அந்த வெண்ணிலாவுக்கு உரிய சூரியன் அந்தப் புகைப்படத்தில் உள்ள ஆண் என்று.
"ஐயோ அவள் திருமணமானவளா? அந்தச் புவனேஷ்வரி அவள் மகளா? சே! எப்படி எப்படி தவறு செய்தேன்? பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்பவரைப் பைத்தியக்காரர்கள் என்று ஏளனம் செய்யும் நானா இந்த மாதிரி விழுந்துவிட்டேன்? அழகானவள் என்றாலே அவள் திருமணம் ஆகாதவளாய்த்தான் இருக்க வேண்டுமா? என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான்.
இப்பொழுது அவளிடம் என்ன சொல்வது, என்று விழித்தான். அவள் அருகில் வந்து "யார் நீங்க? என்ன வேணும்?" என்று வினவினாள்
ஆதவன் சுதாரித்துக்கொண்டு "மேல் வீட்டுப் பாரதியின் நண்பன் நான். அவன் வீட்டில் இல்லை போல. அவன் வந்தால் ஆதவன் வந்து சென்றான் என்று சொல்லி விடுங்கள்" என்று கூறினான். அவளும் சிரித்துக்கொண்டே சரி என்று சொன்னாள். அவன் மனமொடிந்து எழுந்து சென்றான்.
புவனேஷ்வரி ஓடிவந்து அந்த பெண்ணைப் பார்த்து, "அக்கா யாரந்த அங்கிள்?, நம்ம அண்ணாவோட ஃப்ரெண்டா? என்று அந்தப் படத்தில் உள்ள தங்கள் அண்ணனைக் காட்டி கேட்டாள்.
"ஆதவா என் நண்பன் சேஷூவின் மகன் பாரதி பணி நிமித்தமாக சென்னை வருகிறான். நட்பு ரீதியாக அவனைச் சந்தித்து, அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்" என்று எழுதியிருந்தார்.
அவர் சொன்ன தேதியில், ஆதவனும் பாரதியைப் பார்க்க 'கொரொல்லோவில்' ஏறிப் புறப்பட்டான். தனக்குப் பிரியமான இசையைக் கேட்டுக்கொண்டே பயணித்ததில் தூரமே தெரியவில்லை அவனுக்கு. அந்த வீட்டு வாசலில் அழைப்பு மணி பொத்தானை அழுத்தினான். கதவு லேசாக திறந்தது. ஓர் இளம் பெண் எட்டிப் பார்த்தாள், அவளது பாதி முகமும், சுருண்ட கூந்தலும் தான் தெரிந்தது. கண்களாலே கபடி விளையாடினாள். என்ன? என்பது போல் பார்வையாலேயே கேட்டாள்.. ஆதவனுக்கு ஒன்றும் புரியவில்லை... வியர்த்துப் போனான்.. அலுவலகத்தில் சகட்டுமேனிக்கு எல்லோரையும் அதட்டுபவனுக்கு வார்த்தை வெளியே வராமல் தவித்தான். அவள் அழகில் மூர்ச்சையுற்றான். சுதாரித்துக்கொண்டு "பா.......ர.....தி" என்று இழுத்தான்.
மறுபடியும் அவள் கண்களாலேயே மேலே என்று புருவத்தை உயர்த்திப் பதில் கூறிவிட்டு, கதவை அறைந்து சாத்தினாள். மேலே சென்று பாரதியுடன் அமர்ந்திருந்தாலும் அவன் மனம் மட்டும் கீழேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. யார் அந்தப் பெண், கதவோரத்தில் வெண்ணிலாவாய். எப்படி அவளைக் காண்பது, அவளிடம் பேசுவது... இருப்புக் கொள்ளாமல் தவித்தான் ஆதவன்...
அன்று முதல் காலை நடைப் பயணம், மாலை நடைப் பயணம், மதிய உணவு என எல்லாம் அந்தக் குடியிருப்பைச் சுற்றியே அமைத்துக்கொண்டான். எந்த வேளையில் அவள் வெளியில் வருவாளோ...! எப்படியாவது அவளிடம் ஒரு முறையாவது பேசிவிட வேண்டும் என்று துடித்தான். அவளது பாதி தெரிந்த முகமே இவ்வளவு அழகென்றால்.. என்று நினைக்கும்போதெல்லாம், உடம்பில் ஜிவ்வென்று மின்சாரம் பாய்ந்தது. அவனது நெடுநாள் தவத்திற்கு அன்று பலன் கிடைத்தது. பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி புவனேஷ்வரி அந்த வீட்டை விட்டு வெளியே வந்தாள். மிதிவண்டி எடுத்துக்கொண்டு தெருவில் ஓட்டலானாள். மெல்ல அவளருகில் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பின்பு அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தான்.
புவனேஷ்வரி சிரித்துக்கொண்டே அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். உள்ளே செல்லும் போதே 'மம்மி யாரோ ஒரு அங்கிள் வந்திருக்காங்க' என்று அழைத்தாள். ஆதவனும் சரி அந்தப் பெண்ணின் அம்மாவிடமே விஷயத்தைச் சொல்லிச் சம்மதம் பெறுவோம் என்று தயாரானான். ஓர் அறையிலிருந்து கதவை மெல்லத் திறந்துக்கொண்டு அதே போல் அவள் பாதிமுகம் தெரிய எட்டிப் பார்த்தாள். அந்த பட்டாம்பூச்சிக் கண்களைக் கண்ட ஆதவன், தன்னை மறந்து விண்ணில் பறந்தான். அவள் மெல்ல அருகில் வர ஆரம்பித்தாள். உட்காரும் படி கண்களாலேயே சைகை காட்டினாள்.
நாற்காலியில் அமரும் வேளையில் எதிரே சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். புகைப்படத்தில் அந்தப் பெண், அந்தச் புவனேஷ்வரி, ஓர் ஆண் என்று குடும்பமாகச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் புரிந்தது அவனுக்கு, அந்த வெண்ணிலாவுக்கு உரிய சூரியன் அந்தப் புகைப்படத்தில் உள்ள ஆண் என்று.
"ஐயோ அவள் திருமணமானவளா? அந்தச் புவனேஷ்வரி அவள் மகளா? சே! எப்படி எப்படி தவறு செய்தேன்? பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்பவரைப் பைத்தியக்காரர்கள் என்று ஏளனம் செய்யும் நானா இந்த மாதிரி விழுந்துவிட்டேன்? அழகானவள் என்றாலே அவள் திருமணம் ஆகாதவளாய்த்தான் இருக்க வேண்டுமா? என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான்.
இப்பொழுது அவளிடம் என்ன சொல்வது, என்று விழித்தான். அவள் அருகில் வந்து "யார் நீங்க? என்ன வேணும்?" என்று வினவினாள்
ஆதவன் சுதாரித்துக்கொண்டு "மேல் வீட்டுப் பாரதியின் நண்பன் நான். அவன் வீட்டில் இல்லை போல. அவன் வந்தால் ஆதவன் வந்து சென்றான் என்று சொல்லி விடுங்கள்" என்று கூறினான். அவளும் சிரித்துக்கொண்டே சரி என்று சொன்னாள். அவன் மனமொடிந்து எழுந்து சென்றான்.
புவனேஷ்வரி ஓடிவந்து அந்த பெண்ணைப் பார்த்து, "அக்கா யாரந்த அங்கிள்?, நம்ம அண்ணாவோட ஃப்ரெண்டா? என்று அந்தப் படத்தில் உள்ள தங்கள் அண்ணனைக் காட்டி கேட்டாள்.
Friday, October 2, 2009
பிளாஸ்டிக் வரமா? சாபமா?? ஓர் அலசல்....
பெட்ரோலியக் கச்சா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் பல உப பொருள்களில் ஒன்றுதான் பிளாஸ்டிக் என்பதுகூட நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம். இந்த பிளாஸ்டிக் கண்டுபிடித்தபோது, மனிதன் இயற்கையை வென்றுவிட்டான் என்றும், பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டதால் இயற்கை நமக்கு அளிக்கும் தாதுப் பொருள்களான இரும்பு, செம்பு, தகரம், அலுமினியம் போன்றவை மேலும் பல காலத்துக்குக் கிடைக்கும் என்றும் மனித இனமே பெருமைப்பட்டது. சணலுக்கும் காகிதப் பைகளுக்கும் வேலை இல்லாமல் போவதால், காடுகள் அழிக்கப்படுவது தடுக்கப்படும் என்று மகிழ்ந்தவர்களும் ஏராளம்.
இந்த மகிழ்ச்சி எல்லாம் அரை நூற்றாண்டு காலத்தில் மறைந்து, பிளாஸ்டிக் மனித இனத்துக்கு மட்டுமன்றி, உலகில் வாழும் உயிரினங்களுக்கும் ஏன் உலகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டிருக்கிறது. இறைவனின் படைப்பில் உலகிலுள்ள அத்தனை பொருள்களுமே மண்ணில் மக்கிவிடும் தன்மையன. அதனால் கழிவுகள் மலைபோலக் குவிந்துவிடாமல் உலகம் காப்பாற்றப்படுகிறது.
பிளாஸ்டிக் பொருள்கள் மக்கும் தன்மை இல்லாதவையாய் இருப்பதுடன், நிலத்தடி நீர் முறையாகச் சேகரிக்கப்பட முடியாமல் தடுக்கவும் செய்கின்றன. சராசரியாக ஒரு பிளாஸ்டிக் பை மக்குவதற்குக் குறைந்தது 1000 ஆண்டுகள்கூட ஆகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பயமுறுத்துகிறார்கள். இந்த பிளாஸ்டிக் எரிக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவரும் வாயு புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கிறது எனகிறார்கள்.
பிளாஸ்டிக்கால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கடல்வாழ் உயிரினங்கள்தான். நீர்நிலைகள், கழிவுநீர் ஓடைகள், ஆற்றுப்படுகைகள், கடற்கரைகள் என்று எங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்து நிற்கும் பிளாஸ்டிக்கினால், உலகம் முழுவதுமே பாலைவனமாக மாறிவிடும் அபாயமும் இருப்பதாக விஞ்ஞானிகளே எச்சரிக்கை விடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். வளர்ச்சி பெற்ற நாடுகளில் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்பதுடன் பலரும் தனிப்பட்ட முறையில் பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்கவும் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, தில்லி, சண்டிகர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உதகமண்டலத்தைத் தொடர்ந்து கோயம்புத்தூரிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு முழுமூச்சாக பிளாஸ்டிக் தவிர்ப்பு மக்கள் இயக்கமாக்கப்படுகிறது. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றமேகூட 60 மைக்ரானுக்கும் கீழேயுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைந்திருக்கிறது.
பிளாஸ்டிக்கை முழுமையாகத் தவிர்த்து விடுவதோ தடை செய்வதோ சாத்தியமானதல்ல. மனித இனத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று தெரிந்தே இன்னும் பல பொருள்கள் பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பிளாஸ்டிக், கழிவுநீர் ஓடைகளை அடைக்காமல், கண்ட இடங்களில் வீசி எறியப்பட்டு நிலத்தடி நீருக்குத் தடையாக இருக்காமல், கடலில் கலந்துவிடாமல் பாதுகாக்க முடியும். மக்கள் மனது வைத்தால், பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்பதுடன், பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிமைப்படுத்தி நகராட்சி அமைப்புகளுக்கு உதவ முடியும்.
சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள் தடை செய்யப்பட்டு 40 தினங்களாகிவிட்டன. மாநகராட்சியின் இந்த முயற்சி ஓரளவுக்கு வெற்றி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த விஷயத்தில் நீலகிரி மாவட்டம்தான் தமிழகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது. சுப்ரியா சாஹு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது பிளாஸ்டிக்கின் கோரப் பிடியிலிருந்து சுற்றுலாத் தலமான ஊட்டியை முற்றிலுமாக விடுவித்து, தமிழகத்துக்கே அவர் வழிகாட்டினார் என்பதைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
சென்னையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன. உலக அளவில் எடுத்துக்கொண்டால் நூறாயிரம் கோடி டன் எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, ஒவ்வொரு நிமிடமும் பத்து லட்சம் டன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் பைகள் அடுத்த சில நிமிடங்களிலோ, மணித்துளிகளிலோ குப்பைத் தொட்டியில் வீசி எறியப்படும் என்பது தெளிவு.
சென்னையை எடுத்துக்கொண்டால், மாநகரத்தின் மொத்த கழிவுப் பொருள்களில் 8 சதவீதம் முதல் 15 சதவீதம் குப்பை பிளாஸ்டிக் பைகள். சட்டப்படி, 20 மைக்ரான்களுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகளைத் தயாரிப்பதேகூட குற்றம். ஆனால், இந்தச் சட்டத்தை யாரும் பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. நடைமுறைப்படுத்துவதாகவும் தெரியவில்லை.
ஒரு பலசரக்குக் கடையிலோ, காய்கறிக் கடையிலோ, வெற்றிலை பாக்குக் கடையிலோ இதுபோன்ற 20 மைக்ரானுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள் தரப்பட்டால், பொதுமக்கள் யாரிடம் போய் புகார் செய்வது என்று யாருக்காவது தெரியுமா? அந்தப் புகாரை காவல்துறை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது. அரசாவது இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறதா, மக்களுக்குத் தெளிவான வழிமுறைகளை முன்வைக்கிறதா என்றால் கிடையாது. இந்த விழிப்புணர்வை அரசுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. நமக்கும் சமுதாயக் கடமை இருக்கிறது என்று நாம் ஒவ்வொருவரும் முயன்றால்...?
இந்த மகிழ்ச்சி எல்லாம் அரை நூற்றாண்டு காலத்தில் மறைந்து, பிளாஸ்டிக் மனித இனத்துக்கு மட்டுமன்றி, உலகில் வாழும் உயிரினங்களுக்கும் ஏன் உலகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டிருக்கிறது. இறைவனின் படைப்பில் உலகிலுள்ள அத்தனை பொருள்களுமே மண்ணில் மக்கிவிடும் தன்மையன. அதனால் கழிவுகள் மலைபோலக் குவிந்துவிடாமல் உலகம் காப்பாற்றப்படுகிறது.
பிளாஸ்டிக் பொருள்கள் மக்கும் தன்மை இல்லாதவையாய் இருப்பதுடன், நிலத்தடி நீர் முறையாகச் சேகரிக்கப்பட முடியாமல் தடுக்கவும் செய்கின்றன. சராசரியாக ஒரு பிளாஸ்டிக் பை மக்குவதற்குக் குறைந்தது 1000 ஆண்டுகள்கூட ஆகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பயமுறுத்துகிறார்கள். இந்த பிளாஸ்டிக் எரிக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவரும் வாயு புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கிறது எனகிறார்கள்.
பிளாஸ்டிக்கால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கடல்வாழ் உயிரினங்கள்தான். நீர்நிலைகள், கழிவுநீர் ஓடைகள், ஆற்றுப்படுகைகள், கடற்கரைகள் என்று எங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்து நிற்கும் பிளாஸ்டிக்கினால், உலகம் முழுவதுமே பாலைவனமாக மாறிவிடும் அபாயமும் இருப்பதாக விஞ்ஞானிகளே எச்சரிக்கை விடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். வளர்ச்சி பெற்ற நாடுகளில் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்பதுடன் பலரும் தனிப்பட்ட முறையில் பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்கவும் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, தில்லி, சண்டிகர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உதகமண்டலத்தைத் தொடர்ந்து கோயம்புத்தூரிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு முழுமூச்சாக பிளாஸ்டிக் தவிர்ப்பு மக்கள் இயக்கமாக்கப்படுகிறது. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றமேகூட 60 மைக்ரானுக்கும் கீழேயுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைந்திருக்கிறது.
பிளாஸ்டிக்கை முழுமையாகத் தவிர்த்து விடுவதோ தடை செய்வதோ சாத்தியமானதல்ல. மனித இனத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று தெரிந்தே இன்னும் பல பொருள்கள் பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பிளாஸ்டிக், கழிவுநீர் ஓடைகளை அடைக்காமல், கண்ட இடங்களில் வீசி எறியப்பட்டு நிலத்தடி நீருக்குத் தடையாக இருக்காமல், கடலில் கலந்துவிடாமல் பாதுகாக்க முடியும். மக்கள் மனது வைத்தால், பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்பதுடன், பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிமைப்படுத்தி நகராட்சி அமைப்புகளுக்கு உதவ முடியும்.
சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள் தடை செய்யப்பட்டு 40 தினங்களாகிவிட்டன. மாநகராட்சியின் இந்த முயற்சி ஓரளவுக்கு வெற்றி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த விஷயத்தில் நீலகிரி மாவட்டம்தான் தமிழகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது. சுப்ரியா சாஹு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது பிளாஸ்டிக்கின் கோரப் பிடியிலிருந்து சுற்றுலாத் தலமான ஊட்டியை முற்றிலுமாக விடுவித்து, தமிழகத்துக்கே அவர் வழிகாட்டினார் என்பதைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
சென்னையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன. உலக அளவில் எடுத்துக்கொண்டால் நூறாயிரம் கோடி டன் எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, ஒவ்வொரு நிமிடமும் பத்து லட்சம் டன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் பைகள் அடுத்த சில நிமிடங்களிலோ, மணித்துளிகளிலோ குப்பைத் தொட்டியில் வீசி எறியப்படும் என்பது தெளிவு.
சென்னையை எடுத்துக்கொண்டால், மாநகரத்தின் மொத்த கழிவுப் பொருள்களில் 8 சதவீதம் முதல் 15 சதவீதம் குப்பை பிளாஸ்டிக் பைகள். சட்டப்படி, 20 மைக்ரான்களுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகளைத் தயாரிப்பதேகூட குற்றம். ஆனால், இந்தச் சட்டத்தை யாரும் பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. நடைமுறைப்படுத்துவதாகவும் தெரியவில்லை.
ஒரு பலசரக்குக் கடையிலோ, காய்கறிக் கடையிலோ, வெற்றிலை பாக்குக் கடையிலோ இதுபோன்ற 20 மைக்ரானுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள் தரப்பட்டால், பொதுமக்கள் யாரிடம் போய் புகார் செய்வது என்று யாருக்காவது தெரியுமா? அந்தப் புகாரை காவல்துறை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது. அரசாவது இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறதா, மக்களுக்குத் தெளிவான வழிமுறைகளை முன்வைக்கிறதா என்றால் கிடையாது. இந்த விழிப்புணர்வை அரசுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. நமக்கும் சமுதாயக் கடமை இருக்கிறது என்று நாம் ஒவ்வொருவரும் முயன்றால்...?
Thursday, October 1, 2009
முல்லைப்பெரியாறு - கருணாநிதி தட்டிக்கேட்காதது ஏன்!
முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை முதலமைச்சர் கருணாநிதி தட்டிக்கேட்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டு அதை தட்டிக்கேட்காததன் மூலம் கருணாநிதி தமிழகத்துக்கு துரோகம் செய்கிறார் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு பதில் அளித்த கருணாநிதி, “முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை மத்திய அரசு அறியும். எனவே, கேரள அரசுக்கு இதைப்போன்ற அனுமதியை கொடுத்திருக்காது என்று தான் நம்புகிறோம்'' என்று தெரிவித்தார்.
இந்தப் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் ராசா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷை சந்தித்துப் பேசியதாகவும், அப்போது கேரள அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவிடுவதாக ராசாவிடம் மத்திய அமைச்சர் உத்தரவாதம் அளித்ததாகவும் செய்திகள் வெளியாயின.
இந்தச் சூழ்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயராம் ரமேஷ், முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கேரள அரசுக்கு அனுமதி அளித்துள்ளதை உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கேரள அரசின் இந்தத்திட்டம் முடக்கப்படும் என்ற அளவில் தமிழ்நாட்டிற்கு உறுதிமொழி கொடுத்திருப்பதாக வந்துள்ள செய்தியையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதன் காரணமாக, எதிர்காலத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இது எனது ஆட்சிக்காலத்தில் உள்ள நிலைமை! கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இந்த நிலை மாறி, கேரள அரசு புதிய அணை கட்டிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. அதாவது 2006ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சாதகமாக இருந்த சூழ்நிலை, 2009 ஆம் ஆண்டு கேரளாவிற்கு சாதகமாக மாறிவிட்டது! இதுதான் கருணாநிதியினுடைய நிர்வாகத் திறமை!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, ஏற்கனவே இது குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல், அதற்கு முற்றிலும் நேர்மாறான செயலை செய்ய மத்திய அரசு எப்படி முன் வந்தது? இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? மத்திய அரசின் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு முறையிட்டதா? மத்திய அரசின் அனுமதிக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற தி.மு.க. அரசு முயற்சிக்க வேண்டாமா?
மத்திய அரசில் அங்கம் வகிக்காத கேரள அரசு மத்திய அரசிடம் இருந்து அனுமதியை பெறுகின்றபோது, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி, அந்த அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க முடியாதா? தமிழகத்தின் நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசில் ஒட்டிக் கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக தெரியவில்லையா? மத்திய அமைச்சரான தன் மகன் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமை குறித்தே அக்கறை செலுத்தாதவர் கருணாநிதி! தனக்கு வர வேண்டியது வந்தால் போதும் என்று நினைக்கிறார் போலும்!
நான் முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பைக்காரா புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்தார் கருணாநிதி! அதாவது தமிழகத்தின் முதலமைச்சராக இல்லாமலேயே தமிழகத்திற்கு துரோகம் செய்தார். இன்று கருணாநிதியே தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார். அவருடைய கட்சி மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறது. அப்படி இருந்தும், உச்ச நீதிமன்ற ஆணையை மீறி கேரள அரசுக்கு மத்திய அரசு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த அனுமதி அளிக்கிறது. முதலமைச்சராக இருந்து கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார்! கருணாநிதியால் தமிழகத்திற்கு துரோகம் தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியாது'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு பதில் அளித்த கருணாநிதி, “முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை மத்திய அரசு அறியும். எனவே, கேரள அரசுக்கு இதைப்போன்ற அனுமதியை கொடுத்திருக்காது என்று தான் நம்புகிறோம்'' என்று தெரிவித்தார்.
இந்தப் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் ராசா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷை சந்தித்துப் பேசியதாகவும், அப்போது கேரள அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவிடுவதாக ராசாவிடம் மத்திய அமைச்சர் உத்தரவாதம் அளித்ததாகவும் செய்திகள் வெளியாயின.
இந்தச் சூழ்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயராம் ரமேஷ், முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கேரள அரசுக்கு அனுமதி அளித்துள்ளதை உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கேரள அரசின் இந்தத்திட்டம் முடக்கப்படும் என்ற அளவில் தமிழ்நாட்டிற்கு உறுதிமொழி கொடுத்திருப்பதாக வந்துள்ள செய்தியையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதன் காரணமாக, எதிர்காலத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இது எனது ஆட்சிக்காலத்தில் உள்ள நிலைமை! கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இந்த நிலை மாறி, கேரள அரசு புதிய அணை கட்டிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. அதாவது 2006ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சாதகமாக இருந்த சூழ்நிலை, 2009 ஆம் ஆண்டு கேரளாவிற்கு சாதகமாக மாறிவிட்டது! இதுதான் கருணாநிதியினுடைய நிர்வாகத் திறமை!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, ஏற்கனவே இது குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல், அதற்கு முற்றிலும் நேர்மாறான செயலை செய்ய மத்திய அரசு எப்படி முன் வந்தது? இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? மத்திய அரசின் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு முறையிட்டதா? மத்திய அரசின் அனுமதிக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற தி.மு.க. அரசு முயற்சிக்க வேண்டாமா?
மத்திய அரசில் அங்கம் வகிக்காத கேரள அரசு மத்திய அரசிடம் இருந்து அனுமதியை பெறுகின்றபோது, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி, அந்த அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க முடியாதா? தமிழகத்தின் நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசில் ஒட்டிக் கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக தெரியவில்லையா? மத்திய அமைச்சரான தன் மகன் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமை குறித்தே அக்கறை செலுத்தாதவர் கருணாநிதி! தனக்கு வர வேண்டியது வந்தால் போதும் என்று நினைக்கிறார் போலும்!
நான் முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பைக்காரா புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்தார் கருணாநிதி! அதாவது தமிழகத்தின் முதலமைச்சராக இல்லாமலேயே தமிழகத்திற்கு துரோகம் செய்தார். இன்று கருணாநிதியே தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார். அவருடைய கட்சி மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறது. அப்படி இருந்தும், உச்ச நீதிமன்ற ஆணையை மீறி கேரள அரசுக்கு மத்திய அரசு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த அனுமதி அளிக்கிறது. முதலமைச்சராக இருந்து கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார்! கருணாநிதியால் தமிழகத்திற்கு துரோகம் தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியாது'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
Friday, September 18, 2009
சாம்பியன்ஸ் கோப்பை - ஓர் அலசல்
தென் ஆப்பிரிக்காவில் அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமையன்று (செப்டம்பர் 22ஆம் தேதி) அனைவரும் ஆவலுடன் எதிர்பாக்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்குகின்றன. செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியுடன் செஞ்சூரியன் மைதானத்தில் (பகலிரவு ஆட்டத்தில்) மோதுகிறது.
செப்டம்பர் 22ஆம் தேதி துவக்க போட்டியில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இரண்டு அணிகளான தென் ஆப்பிரிக்காவும், இலங்கையும், செஞ்சூரியன் மைதானத்தில் பகலிரவு போட்டியில் மோதுகிறது.
செப்டம்பர் 28ஆம் தேதி இந்தியா மீண்டும் பலமான ஆஸ்ட்ரேலியாவை செஞ்சூரியம் மைதானத்தில் பகலிரவு ஆட்டத்தில் சந்திக்கிறது. பிறகு 30ஆம் தேதி இந்தியாவும் மேற்கிந்திய தீவுகளும் ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் மீண்டும் பகலிரவு ஆட்டத்தில் மோதுகிறது.
இந்திய அணி பிரிவு ஏ-யில் மிகவும் பலமான அணிகளுடன் மோதவுள்ளதால் அதுவும் ஒரு முறை மட்டுமே மோதவுள்ளதால், அன்றைய தினத்தில் திறமையை கூடுதலாக வெளிப்படுத்தும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இது போன்ற வடிவத்தில் ஒரு போட்டியில் தோற்றால் கூட பிரச்சனைதான். இந்த முறை மேற்கிந்திய அணியின் மூத்த வீரர்கள் கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் மேற்கொண்டுள்ளதால் அவர்களை நீக்கி விட்டு அனுபவமற்ற இரண்டாம் நிலை அணியை சாம்பியன்ஸ் கோப்பைக்கு அனுப்புகிறது மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம். இதே அணி வங்கதேசத்திடம் 3 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வி தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்திய அணிக்கு மட்டுமல்ல மற்ற அணிகளுக்கும் மேற்கிந்திய அணி மட்டுமே சற்றே எளிதானது. மற்ற இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற கடும் போட்டி நிலவும். இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்ட்ரேலியா மூன்று அணிகளுமே மேற்கிந்திய அணியை வென்று விடும் பட்சத்தில் 3 அணிகளும் ஒரு போட்டியில் தோல்வி அடைகிறது என்றால் மூன்று அணிகளும் புள்ளிகள் கணக்கில் சமமாக திகழும். அப்போது நிகர ரன் விகித அடிப்படையில் முதலிரண்டு இடங்கள் முடிவு செய்யப்படும்.
இதனால் கணக்கீட்டு சவால்களையும் எதிர்கொள்ளவேண்டி வரும்.
2006ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐ.சி.சி.சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா இந்த சிரமங்களை அமைப்பாளர்களுக்கு கொடுக்கவில்லை. இங்கிலாந்தை தடுமாறி வென்று, பிறகு ஆஸ்ட்ரேலியாவிடமும், மேற்கிந்திய அணியிடமும் தோல்வி தழுவியது. இதனால் வெளியேறியது.
இந்திய அணிக்கு 'உலக மகா' கிரெக் சாப்பல் பயிற்சியாளர். அப்போது திராவிட் அணியின் கேப்டன்.
இந்த முறை இந்திய அணியின் முக்கிய பலவீனம் சாம்பியன் கோப்பை போட்டிகளில் 72 ரன் என்ற அதிகபட்ச சராசரி வைத்துள்ள சௌரவ் கங்கூலி இல்லாதது. அனைத்திற்கும் மேலாக அதிரடி துவக்கம் தந்து எதிரணியினரை கதி கலங்கச் செய்யும் சேவாக் இல்லாதது நிச்சயம் அனைவராலும் உணரப்படும். அதே போல் ஜாகீர் கான் காயமடைவதற்கு முன்னால் வீசி வந்த அபார பந்து வீச்சும் இந்திய அணிக்கு இந்த முறை இல்லை. கடந்த சாம்பியன் கோப்பை போட்டியின் போது திருவாளர் கிரெக் சாப்பலின் கைங்கரியத்தால் ஜாகீர் கான் அணியிலேயே இல்லை!
தற்போதுள்ள இந்திய அணியில் சாம்பியன் கோப்பையில் அதிக சராசரி வைத்திருப்பவர் திராவிட் மட்டுமே, இவர் 49.02 என்ற சராசரியை பராமரித்து வருகிறார்.
ஒரு நாள் போட்டிகளில் தற்போது அதிக சராசரி வைத்திருப்பவர் தோனி, மேலும் அவர் ஐ.சி.சி. தர வரிசையில் நீண்ட காலமாக முதலிடத்தை தக்கவைத்து வருகிறார்!
சச்சின், யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் மட்டுமே தற்போதைய அணியில் சாம்பியன் கோப்பை போட்டிகளில் அதிகம் பங்கேற்ற அனுபவம் மிக்க வீரர்கள். மற்றபடி இந்த அணி புதிய அணியே.
இந்திய அணியில் இந்த முறை திராவிடின் வருகை புதிய பலம் சேர்த்தாலும், அதிக ரன்களைத் துரத்த நேரிடும்போது அவரது பங்கு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
பீல்டிங்கே பிரச்சனை!
இலங்கையில் நடைபெற்ற காம்பேக் கோப்பை இறுதிப் போட்டியில் சச்சினுடன், திராவிடை துவக்கத்தில் களமிறக்கிய தோனி, திராவிடை பயன்படுத்துவதில் ஒரு புதிய அணுகுமுறையை கடைபிடித்தார். ஆனால் கம்பீர் உள்ளே வருகிறார் என்றால் திராவிட் மீண்டும் 3ஆம் நிலையில் களமிறங்கவே வாய்ப்பிருக்கிறது.
தற்போது இந்திய அணியின் பிரச்சனை என்னவெனில். மோசமான பந்து வீச்சு மற்றும் மோசமான ஃபீல்டிங்.
இதனால் ஒரு நல்ல அணியை தேர்வு செய்வதில், அதாவது ஒரு சமத்திறனான அணியைத் தேர்வு செய்வதுதான் தோனியின் திறமைக்கு உள்ள சவால்.
உதாரணமாக, சச்சின், கம்பீர், திராவிட், ரெய்னா, யுவ்ராஜ். தோனி என்று 6 பேட்ஸ்மென்களையும், ஹர்பஜன்சிங், இஷாந்த் ஷர்மா, ஆஷிஷ் நெஹ்ரா, ஆர்.பி.சிங் மற்றும் கூடுதல் ஸ்பின்னராக அமித் மிஷ்ரா என்ற அணிச் சேர்க்கை பலனளிக்கும்.
ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களில் யாரேனும் ஒருவர் சொதப்பும்போதும் 4 மற்ற முக்கிய வீச்சாளர்கள் பக்க பலமாக இருப்பர். சொதப்பும் பந்து வீச்சாளரின் மீதி ஓவர்களை யுவ்ராஜ் சிங், ரைனா ஆகியோரை வைத்து ஓரளவிற்கு சமாளிக்கலாம்.
இந்த அணிச் சேர்க்கையல்லாது 7 பேட்ஸ்மென்கள் என்று வைத்துக் கொண்டால், அணியில் ஒன்று யூசுஃப் பத்தான் இடம்பெற வேண்டும் அல்லது மும்பை அதிரடி மன்னன் அபிஷேக் நாயர் இடம்பெறவேண்டும். இருவரும் ஆல் ரவுண்டர்கள் என்றாலும் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது.
4 முறையான பந்து வீச்சாளர்கள் யார் யார்? இஷாந்த் ஷர்மா, ஆஷிஷ் நெஹ்ரா, ஆர்.பி.சிங், ஹர்பஜன் சிங் என்று வைத்துக் கொண்டால். வேகப்பந்து வீச்சாளர் ஒருவரோ அல்லது இருவரோ மோசமாக வீசுகிறார் என்றால், 20 ஓவர்களை பகுதி நேர பந்து வீச்சாளர்களை வைத்து ஈடு கட்ட முடியாது. ஏதோ ஒரு போட்டியில் இது பயனளிக்கலாம் ஆனால் நிரந்தர தீர்வாகாது.
எனவே 6 பேட்ஸ்மென்கள், 5 முறையான பந்து வீச்சாளர்களை அணியில் வைத்துக் கொண்டு இதில் ஒரு பந்து வீச்சாளர் சரியாக வீசவில்லையெனில் அடுத்த போட்டிக்குன் யூசுப் பத்தானையோ, அபிஷேக் நாயரையோ ஆல்ரவுண்டர் என்ற முறையில் அணியில் சேர்த்துக் கொள்ளலாம். எனவே இந்திய அணி இந்த இரண்டு அணிச் சேர்க்கையில் எதை தேர்வு செய்கிறது என்பது வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கும்.
போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதால், பந்து வீச்சிற்கு ஓரளவிற்கு சாதகமான ஆட்டக்களம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த இடத்தில் தினேஷ் கார்த்திக்கை அணியில் தேர்வு செய்திருப்பது தேவையற்ற ஒரு தேர்வாக படுகிறது.
அந்த இடத்தில் இர்ஃபான் பத்தான், முனாஃப் படேல் அல்லது பிராக்யன் ஓஜா ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்திருக்கலாம். ஏனெனில் பிராக்யன் ஓஜா தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக பந்து வீசினார். அவர் விக்கெட் வீழ்த்தும் பந்து வீச்சாளர். ரன்களைக் கட்டுப்படுத்தும் வீச்சாளர் மட்டுமல்ல.
அதே போல் தோனி தொடர்ந்து ஆர்.பி.சிங்கிற்கு அளித்து வரும் முக்கியத்துவமும் கேள்வி எழுப்புவதாயுள்ளது. பிரவீண் குமாரை பயன்படுத்த தயங்குகிறார். பிரவீண் குமார்தான் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் இறுதி போட்டியில் இரண்டு முறை அதிரடி மன்னன் கில்கிறிஸ்டை வீழ்த்தினார்.
அதன் பிறகு இலங்கையில் ஜெயசூரியாவை தொடர்ந்து வீழ்த்தினார். ஆனால் இலங்கையில் அவருக்கு வாய்ப்பு அளிக்காமல் தொடர்ந்து ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றாத ஆர்.பி.சிங்கிற்கு வாய்ப்பளிக்கிறார் தோனி.
இந்திய அணியின் பேட்டிங் பிரமாதமாக உள்ளது. இந்தியா ஏதாவது போட்டியை வெல்கிறது என்றால் அது பேட்டிங்கினால்தான் இருக்கும் என்ற அளவுக்கு பலமான பேட்டிங் வரிசை உள்ளது. கங்கூலியின் தலைமையிலும் இப்படித்தான் இருந்தது.
ஆஸ்ட்ரேலியாவும் பாகிஸ்தானும் அன்றைய தினத்தில் என்ன செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. பாகிஸ்தான் அணித் தலைவர் யூனிஸ் கான் இந்தியாவை வீழ்த்துவதுதான் சாம்பியன் கோப்பையை வெல்வதை விட மிக முக்கியமானது என்று பேசி வருகிறார்.
உமர் குல் அச்சுறுத்தல்!
மியாண்டட், இந்திய கிரிக்கெட் வாரியம் எவ்வாறு பாகிஸ்தானை தொடர்ந்து சர்வதேச கிரிகெட்டிலிருந்து ஒழித்து வருகிறது என்று பாகிஸ்தான் வீரர்களை நிச்சயம் உசுப்பேற்றுவார். இதனால் இந்தியாவை வெல்ல அந்த அணி கடுமையாக திட்டங்களைத் தீட்டும், ஆனால் இதுவே அந்த அணியின் வீழ்ச்சியாகவும் அமைய வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் தோல்வி பயம் தோல்விக்குத்தான் இட்டுச் செல்லும். இதே தோல்வி பயம் இந்திய ரசிகர்களுக்குத்தான் உள்ளது. தற்போதைய இந்திய வீரர்களிடம் இல்லை.
மேலும் பந்து வீச்சில் அஃப்ரீடி, உமர் குல், ஆசிஃப், சயீத் அஜ்மல், ரானா நவேத் என்று அந்த அணி பலமாக உள்ளது. மேலும் இம்ரான் நசீரின் வரவு, உமர் அக்மல் என்ற இளம் அதிரடி வீரரின் சமீபத்திய அபார ஆட்டம், யூனிஸ் கானின் பேட்டிங், அஃப்ரீடியின் சமீபகால பொறுப்பான பேட்டிங் என்று அந்த அணியின் பலம் சிறப்பாகவே உள்ளது.
ஆஸ்ட்ரேலிய அணியில் பிரட் லீ சமீபமாக வீசி வரும் யார்க்கர்கள் ஒரு பெரிய அச்சுறுத்தலே. வாட்சன், மைக்கேல் கிளார்க், கேமரூன் ஒயிட், ரிக்கி பாண்டிங் ஆகியோரது பேட்டிங்கும் அபாரமாக உள்ளது. ஃபீல்டிங்கில் அந்த அணியை அடித்துக் கொள்ள முடியாது.
ஃபீல்டிங் பலவீனம் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கே உரித்தானது. அரையிறுதிக்கு இந்தியா முன்னேறி விட்டால் அதன்பிறகு இந்தியாவின் ஆட்டம் வேறுமாதிரியாக இருக்கும். வெற்றிக்கான புதிய உத்வேகம் அணியை நகர்த்திச் செல்லும்.
அனைத்துப் போட்டிகளும் இந்தியாவிற்கு பகலிரவு ஆட்டமாக இருப்பதால் பூவா தலையா வெற்றி தோல்வியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். எது எப்படியிருந்தாலும் இந்தியாவிற்கு அரையிறுதியில் நுழையவேண்டும் என்ற அழுத்தமும் அதை விட மேலாக பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்ற அழுத்தமும் ஆதிக்கம் செலுத்தலாம்.
இந்த அழுத்தங்களை மன ரீதியாக, ஆட்டத் திறன் ரீதியாக இந்திய வீரர்கள் முறியடித்தால், சாம்பியன் கோப்பையை வெல்வதற்கான அனைத்து தகுதிகளும் உள்ள ஒரு அணி இந்திய அணி என்று உறுதியாக கூற முடியும்.
செப்டம்பர் 22ஆம் தேதி துவக்க போட்டியில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இரண்டு அணிகளான தென் ஆப்பிரிக்காவும், இலங்கையும், செஞ்சூரியன் மைதானத்தில் பகலிரவு போட்டியில் மோதுகிறது.
செப்டம்பர் 28ஆம் தேதி இந்தியா மீண்டும் பலமான ஆஸ்ட்ரேலியாவை செஞ்சூரியம் மைதானத்தில் பகலிரவு ஆட்டத்தில் சந்திக்கிறது. பிறகு 30ஆம் தேதி இந்தியாவும் மேற்கிந்திய தீவுகளும் ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் மீண்டும் பகலிரவு ஆட்டத்தில் மோதுகிறது.
இந்திய அணி பிரிவு ஏ-யில் மிகவும் பலமான அணிகளுடன் மோதவுள்ளதால் அதுவும் ஒரு முறை மட்டுமே மோதவுள்ளதால், அன்றைய தினத்தில் திறமையை கூடுதலாக வெளிப்படுத்தும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இது போன்ற வடிவத்தில் ஒரு போட்டியில் தோற்றால் கூட பிரச்சனைதான். இந்த முறை மேற்கிந்திய அணியின் மூத்த வீரர்கள் கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் மேற்கொண்டுள்ளதால் அவர்களை நீக்கி விட்டு அனுபவமற்ற இரண்டாம் நிலை அணியை சாம்பியன்ஸ் கோப்பைக்கு அனுப்புகிறது மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம். இதே அணி வங்கதேசத்திடம் 3 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வி தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்திய அணிக்கு மட்டுமல்ல மற்ற அணிகளுக்கும் மேற்கிந்திய அணி மட்டுமே சற்றே எளிதானது. மற்ற இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற கடும் போட்டி நிலவும். இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்ட்ரேலியா மூன்று அணிகளுமே மேற்கிந்திய அணியை வென்று விடும் பட்சத்தில் 3 அணிகளும் ஒரு போட்டியில் தோல்வி அடைகிறது என்றால் மூன்று அணிகளும் புள்ளிகள் கணக்கில் சமமாக திகழும். அப்போது நிகர ரன் விகித அடிப்படையில் முதலிரண்டு இடங்கள் முடிவு செய்யப்படும்.
இதனால் கணக்கீட்டு சவால்களையும் எதிர்கொள்ளவேண்டி வரும்.
2006ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐ.சி.சி.சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா இந்த சிரமங்களை அமைப்பாளர்களுக்கு கொடுக்கவில்லை. இங்கிலாந்தை தடுமாறி வென்று, பிறகு ஆஸ்ட்ரேலியாவிடமும், மேற்கிந்திய அணியிடமும் தோல்வி தழுவியது. இதனால் வெளியேறியது.
இந்திய அணிக்கு 'உலக மகா' கிரெக் சாப்பல் பயிற்சியாளர். அப்போது திராவிட் அணியின் கேப்டன்.
இந்த முறை இந்திய அணியின் முக்கிய பலவீனம் சாம்பியன் கோப்பை போட்டிகளில் 72 ரன் என்ற அதிகபட்ச சராசரி வைத்துள்ள சௌரவ் கங்கூலி இல்லாதது. அனைத்திற்கும் மேலாக அதிரடி துவக்கம் தந்து எதிரணியினரை கதி கலங்கச் செய்யும் சேவாக் இல்லாதது நிச்சயம் அனைவராலும் உணரப்படும். அதே போல் ஜாகீர் கான் காயமடைவதற்கு முன்னால் வீசி வந்த அபார பந்து வீச்சும் இந்திய அணிக்கு இந்த முறை இல்லை. கடந்த சாம்பியன் கோப்பை போட்டியின் போது திருவாளர் கிரெக் சாப்பலின் கைங்கரியத்தால் ஜாகீர் கான் அணியிலேயே இல்லை!
தற்போதுள்ள இந்திய அணியில் சாம்பியன் கோப்பையில் அதிக சராசரி வைத்திருப்பவர் திராவிட் மட்டுமே, இவர் 49.02 என்ற சராசரியை பராமரித்து வருகிறார்.
ஒரு நாள் போட்டிகளில் தற்போது அதிக சராசரி வைத்திருப்பவர் தோனி, மேலும் அவர் ஐ.சி.சி. தர வரிசையில் நீண்ட காலமாக முதலிடத்தை தக்கவைத்து வருகிறார்!
சச்சின், யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் மட்டுமே தற்போதைய அணியில் சாம்பியன் கோப்பை போட்டிகளில் அதிகம் பங்கேற்ற அனுபவம் மிக்க வீரர்கள். மற்றபடி இந்த அணி புதிய அணியே.
இந்திய அணியில் இந்த முறை திராவிடின் வருகை புதிய பலம் சேர்த்தாலும், அதிக ரன்களைத் துரத்த நேரிடும்போது அவரது பங்கு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
பீல்டிங்கே பிரச்சனை!
இலங்கையில் நடைபெற்ற காம்பேக் கோப்பை இறுதிப் போட்டியில் சச்சினுடன், திராவிடை துவக்கத்தில் களமிறக்கிய தோனி, திராவிடை பயன்படுத்துவதில் ஒரு புதிய அணுகுமுறையை கடைபிடித்தார். ஆனால் கம்பீர் உள்ளே வருகிறார் என்றால் திராவிட் மீண்டும் 3ஆம் நிலையில் களமிறங்கவே வாய்ப்பிருக்கிறது.
தற்போது இந்திய அணியின் பிரச்சனை என்னவெனில். மோசமான பந்து வீச்சு மற்றும் மோசமான ஃபீல்டிங்.
இதனால் ஒரு நல்ல அணியை தேர்வு செய்வதில், அதாவது ஒரு சமத்திறனான அணியைத் தேர்வு செய்வதுதான் தோனியின் திறமைக்கு உள்ள சவால்.
உதாரணமாக, சச்சின், கம்பீர், திராவிட், ரெய்னா, யுவ்ராஜ். தோனி என்று 6 பேட்ஸ்மென்களையும், ஹர்பஜன்சிங், இஷாந்த் ஷர்மா, ஆஷிஷ் நெஹ்ரா, ஆர்.பி.சிங் மற்றும் கூடுதல் ஸ்பின்னராக அமித் மிஷ்ரா என்ற அணிச் சேர்க்கை பலனளிக்கும்.
ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களில் யாரேனும் ஒருவர் சொதப்பும்போதும் 4 மற்ற முக்கிய வீச்சாளர்கள் பக்க பலமாக இருப்பர். சொதப்பும் பந்து வீச்சாளரின் மீதி ஓவர்களை யுவ்ராஜ் சிங், ரைனா ஆகியோரை வைத்து ஓரளவிற்கு சமாளிக்கலாம்.
இந்த அணிச் சேர்க்கையல்லாது 7 பேட்ஸ்மென்கள் என்று வைத்துக் கொண்டால், அணியில் ஒன்று யூசுஃப் பத்தான் இடம்பெற வேண்டும் அல்லது மும்பை அதிரடி மன்னன் அபிஷேக் நாயர் இடம்பெறவேண்டும். இருவரும் ஆல் ரவுண்டர்கள் என்றாலும் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது.
4 முறையான பந்து வீச்சாளர்கள் யார் யார்? இஷாந்த் ஷர்மா, ஆஷிஷ் நெஹ்ரா, ஆர்.பி.சிங், ஹர்பஜன் சிங் என்று வைத்துக் கொண்டால். வேகப்பந்து வீச்சாளர் ஒருவரோ அல்லது இருவரோ மோசமாக வீசுகிறார் என்றால், 20 ஓவர்களை பகுதி நேர பந்து வீச்சாளர்களை வைத்து ஈடு கட்ட முடியாது. ஏதோ ஒரு போட்டியில் இது பயனளிக்கலாம் ஆனால் நிரந்தர தீர்வாகாது.
எனவே 6 பேட்ஸ்மென்கள், 5 முறையான பந்து வீச்சாளர்களை அணியில் வைத்துக் கொண்டு இதில் ஒரு பந்து வீச்சாளர் சரியாக வீசவில்லையெனில் அடுத்த போட்டிக்குன் யூசுப் பத்தானையோ, அபிஷேக் நாயரையோ ஆல்ரவுண்டர் என்ற முறையில் அணியில் சேர்த்துக் கொள்ளலாம். எனவே இந்திய அணி இந்த இரண்டு அணிச் சேர்க்கையில் எதை தேர்வு செய்கிறது என்பது வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கும்.
போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதால், பந்து வீச்சிற்கு ஓரளவிற்கு சாதகமான ஆட்டக்களம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த இடத்தில் தினேஷ் கார்த்திக்கை அணியில் தேர்வு செய்திருப்பது தேவையற்ற ஒரு தேர்வாக படுகிறது.
அந்த இடத்தில் இர்ஃபான் பத்தான், முனாஃப் படேல் அல்லது பிராக்யன் ஓஜா ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்திருக்கலாம். ஏனெனில் பிராக்யன் ஓஜா தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக பந்து வீசினார். அவர் விக்கெட் வீழ்த்தும் பந்து வீச்சாளர். ரன்களைக் கட்டுப்படுத்தும் வீச்சாளர் மட்டுமல்ல.
அதே போல் தோனி தொடர்ந்து ஆர்.பி.சிங்கிற்கு அளித்து வரும் முக்கியத்துவமும் கேள்வி எழுப்புவதாயுள்ளது. பிரவீண் குமாரை பயன்படுத்த தயங்குகிறார். பிரவீண் குமார்தான் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் இறுதி போட்டியில் இரண்டு முறை அதிரடி மன்னன் கில்கிறிஸ்டை வீழ்த்தினார்.
அதன் பிறகு இலங்கையில் ஜெயசூரியாவை தொடர்ந்து வீழ்த்தினார். ஆனால் இலங்கையில் அவருக்கு வாய்ப்பு அளிக்காமல் தொடர்ந்து ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றாத ஆர்.பி.சிங்கிற்கு வாய்ப்பளிக்கிறார் தோனி.
இந்திய அணியின் பேட்டிங் பிரமாதமாக உள்ளது. இந்தியா ஏதாவது போட்டியை வெல்கிறது என்றால் அது பேட்டிங்கினால்தான் இருக்கும் என்ற அளவுக்கு பலமான பேட்டிங் வரிசை உள்ளது. கங்கூலியின் தலைமையிலும் இப்படித்தான் இருந்தது.
ஆஸ்ட்ரேலியாவும் பாகிஸ்தானும் அன்றைய தினத்தில் என்ன செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. பாகிஸ்தான் அணித் தலைவர் யூனிஸ் கான் இந்தியாவை வீழ்த்துவதுதான் சாம்பியன் கோப்பையை வெல்வதை விட மிக முக்கியமானது என்று பேசி வருகிறார்.
உமர் குல் அச்சுறுத்தல்!
மியாண்டட், இந்திய கிரிக்கெட் வாரியம் எவ்வாறு பாகிஸ்தானை தொடர்ந்து சர்வதேச கிரிகெட்டிலிருந்து ஒழித்து வருகிறது என்று பாகிஸ்தான் வீரர்களை நிச்சயம் உசுப்பேற்றுவார். இதனால் இந்தியாவை வெல்ல அந்த அணி கடுமையாக திட்டங்களைத் தீட்டும், ஆனால் இதுவே அந்த அணியின் வீழ்ச்சியாகவும் அமைய வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் தோல்வி பயம் தோல்விக்குத்தான் இட்டுச் செல்லும். இதே தோல்வி பயம் இந்திய ரசிகர்களுக்குத்தான் உள்ளது. தற்போதைய இந்திய வீரர்களிடம் இல்லை.
மேலும் பந்து வீச்சில் அஃப்ரீடி, உமர் குல், ஆசிஃப், சயீத் அஜ்மல், ரானா நவேத் என்று அந்த அணி பலமாக உள்ளது. மேலும் இம்ரான் நசீரின் வரவு, உமர் அக்மல் என்ற இளம் அதிரடி வீரரின் சமீபத்திய அபார ஆட்டம், யூனிஸ் கானின் பேட்டிங், அஃப்ரீடியின் சமீபகால பொறுப்பான பேட்டிங் என்று அந்த அணியின் பலம் சிறப்பாகவே உள்ளது.
ஆஸ்ட்ரேலிய அணியில் பிரட் லீ சமீபமாக வீசி வரும் யார்க்கர்கள் ஒரு பெரிய அச்சுறுத்தலே. வாட்சன், மைக்கேல் கிளார்க், கேமரூன் ஒயிட், ரிக்கி பாண்டிங் ஆகியோரது பேட்டிங்கும் அபாரமாக உள்ளது. ஃபீல்டிங்கில் அந்த அணியை அடித்துக் கொள்ள முடியாது.
ஃபீல்டிங் பலவீனம் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கே உரித்தானது. அரையிறுதிக்கு இந்தியா முன்னேறி விட்டால் அதன்பிறகு இந்தியாவின் ஆட்டம் வேறுமாதிரியாக இருக்கும். வெற்றிக்கான புதிய உத்வேகம் அணியை நகர்த்திச் செல்லும்.
அனைத்துப் போட்டிகளும் இந்தியாவிற்கு பகலிரவு ஆட்டமாக இருப்பதால் பூவா தலையா வெற்றி தோல்வியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். எது எப்படியிருந்தாலும் இந்தியாவிற்கு அரையிறுதியில் நுழையவேண்டும் என்ற அழுத்தமும் அதை விட மேலாக பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்ற அழுத்தமும் ஆதிக்கம் செலுத்தலாம்.
இந்த அழுத்தங்களை மன ரீதியாக, ஆட்டத் திறன் ரீதியாக இந்திய வீரர்கள் முறியடித்தால், சாம்பியன் கோப்பையை வெல்வதற்கான அனைத்து தகுதிகளும் உள்ள ஒரு அணி இந்திய அணி என்று உறுதியாக கூற முடியும்.
Monday, September 7, 2009
முதியோரை மதிக்காத வீடும் நாடும் என்னவாகும்?
தான் கனவு காணும் இந்தியா குறித்து காந்தி அடிகள் இப்படிச் சொன்னார்: "நாட்டின் கடைக்கோடி ஏழை இந்நாட்டை தன்னுடைய நாடு என்று கருத வேண்டும்; அப்படிப்பட்ட தேசமாக இந்தியா திகழ வேண்டும்"
இந்திய அரசியல்வாதிகளுக்கும் மகாத்மா காந்தியின் கனவுக்கும் சம்பந்தம் ஏதுமில்லை. ஆனாலும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் 45.58 கோடிப் பேர் வாழும் ஒரு தேசத்தில் ஏழைகளைத் தவிர்த்த அரசியல் சாத்தியமானதில்லை என்பதாலேயே இந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றுக்காக ஆண்டுக்கு ரூ. 1.2 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. என்ன பயன்? அரசியல்வாதிகள் அசைந்துகொடுத்தாலும் அதிகார வர்க்கத்தின் சிகப்பு நாடாக்களில் சிக்கிக் கழுத்தறுபடுகின்றன அரசுத் திட்டங்கள்.
நாட்டின் மூத்தகுடிமக்களுக்கு முன்னுரிமை, சலுகைகளை அளிப்பது உலகெங்கும் உள்ள ஒரு நடைமுறை. மக்கள் நல அரசுகளுக்கு அது ஒரு கடப்பாடும்கூட. இந்தியாவில் மூத்தகுடிமக்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவையும்கூட படித்த - ஓரளவுக்கேனும் வசதியுடையவர்கள் அடையக்கூடியவையாகவே இருக்கின்றன.
இந்நிலையில், வறுமை ஒழிப்புத் திட்டங்களில் ஒன்றாக வசதியற்ற மூத்தகுடிமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம். சொத்துகள் ஏதுமற்ற, வருமானத்துக்கு வழியில்லாத 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ரூ. 400 ஓய்வூதியம் பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது.
மாதம் ரூ. 400-ஐ மட்டுமே வருமானமாகக் கொண்டு இந்தக் காலத்தில் ஒருவர் - அதுவும் ஒரு முதியவர் வாழ்க்கையைக் கடத்திவிட முடியுமா என்பது ஒரு பெரிய கேள்விதான். ஆனாலும், நம்முடைய அரசு இந்நாட்டு ஏழைகளுக்கென்று ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கி வைத்திருக்கிறது. ரேஷன் கடைகளில் ரூ. 1 அல்லது ரூ. 2 விலையில் ஒரு கிலோ அரிசி, மலிவு விலை மண்ணெண்ணெய், மளிகைப் பொருள்கள், பண்டிகையையொட்டியோ, அரசியல் தலைவர்கள் பிறந்த நாளையொட்டியோ ஆண்டுக்கொரு முறை வழங்கப்படும் இலவச வேஷ்டி - சேலை, நோய்வாய்ப்பட்டால் அரசு மருத்துவமனை என்று அந்த வாழ்க்கை முறை விதிக்கப்பட்டவர்களுக்கு இன்றைக்கும் ரூ. 400 குறிப்பிடத்தக்க ஒரு தொகையாகவே இருக்கிறது.
தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்திலுள்ள ஒரு நல்ல விஷயம், ஓர் ஊரில் அல்லது ஒரு மாவட்டத்தில் அதிகபட்சம் இத்தனை பேரைத்தான் இத்திட்டத்தில் சேர்க்கலாம் என்ற வரையறை ஏதும் கிடையாது என்பதாகும். ஆகையால், வருமானத்துக்கு வாய்ப்பற்ற 65 வயதைக் கடந்த இந்நாட்டு மூத்தகுடிமக்கள் அனைவருக்குமே இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கலாம். ஆனால், இத்திட்டத்தில் சேர அதிகார வர்க்கம் உருவாக்கியுள்ள நடைமுறை தன்மானமுள்ள எவரையும் தலைகுனியவைப்பதாக அமைந்திருக்கிறது. ஒரு முதியவர் இத்திட்டத்தில் சேர விரும்பினால், அதற்கு விண்ணப்பத்தில் கீழ்காணும் உறுதிகளை அளிக்க நிர்பந்திக்கப்படுகிறார்.
"ஐயா, எனக்கு 65 வயதாகிவிட்டது. நான் ஓர் அனாதை. எனக்குச் சொத்துகள் ஏதுமில்லை. எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது. நான் பிச்சை எடுக்கவில்லை. ஆனால், அதரவற்ற நான், இன்னார் வீட்டுத் திண்ணையில் தங்கி அருகிலிருப்போர் தரும் உணவை உண்டு வாழ்கிறேன். தயவுசெய்து எனக்கு உதவித்தொகை அளியுங்கள்."
அதாவது, "நான் தெருவில் அமர்ந்து பிச்சை எடுக்கவில்லை. ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பிச்சையாகத் தரப்படும் உணவை உண்டு வாழ்கிறேன்" என்று சொல்லாமல் சொல்லச் சொல்கிறார்கள் அதிகாரிகள். தொடர்ந்து, விண்ணப்பிப்பவரின் இந்த வாக்கியங்களையே வருவாய்த் துறை அலுவலர்கள் சான்றாகத் தருவார்கள். அதன் பின்னரே உதவித்தொகை. முரண்பாடுகள் மிக்க, மிக அபத்தமான ஒரு நடைமுறை இது. ஓர் அரசாங்கம் தன்னிடம் உதவி கேட்டு வரும் தன்னுடைய மூத்தகுடிமக்களை இதற்கு மேல் இழிவுபடுத்த முடியுமா என்று தெரியவில்லை.
உண்மையில் இத்திட்டத்தில் சேருவதற்கு அரசு வகுத்திருக்கும் விதிகளின்படி இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு வேலையே இல்லை. ஆனால், பயனாளி வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையைப் பயன்படுத்தி இத்தகைய அவலத்தை அரங்கேற்றி வருகிறார்கள் அதிகாரிகள். இந்தியாவைப் பொறுத்த அளவில் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் பெரும்பான்மையினர் விவசாயக் கூலித் தொழிலாளிகள்தான். நம் நாட்டில் பிச்சை எடுப்பவர்களில் பெரும்பான்மையினரும் இவர்களே. நாட்டுக்கே உணவிட்டவர்கள் ஒரு வேளை சோற்றுக்குக் கையேந்தும் நிலை ஏற்பட்டது நாட்டை வழிநடத்துபவர்கள் செய்யும் தவறுகளால் ஏற்பட்ட விளைவு. இந்தத் தவறுகளில் அதிகார வர்க்கத்துக்கும் பெரும் பங்குண்டு.
குறைந்தபட்சம் இந்தப் பாவத்துக்கான பரிகாரமாகவேனும் அதிகாரிகள் இத்தகைய மோசமான நடைமுறைகளைக் கைவிட வேண்டும். முதியோரை மதிக்காத வீடும் நாடும் என்னவாகும் என்று வரலாற்றையோ, புராணத்தையோ படித்தாவது தெரிந்துகொள்ள வேண்டும்!
இந்திய அரசியல்வாதிகளுக்கும் மகாத்மா காந்தியின் கனவுக்கும் சம்பந்தம் ஏதுமில்லை. ஆனாலும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் 45.58 கோடிப் பேர் வாழும் ஒரு தேசத்தில் ஏழைகளைத் தவிர்த்த அரசியல் சாத்தியமானதில்லை என்பதாலேயே இந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றுக்காக ஆண்டுக்கு ரூ. 1.2 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. என்ன பயன்? அரசியல்வாதிகள் அசைந்துகொடுத்தாலும் அதிகார வர்க்கத்தின் சிகப்பு நாடாக்களில் சிக்கிக் கழுத்தறுபடுகின்றன அரசுத் திட்டங்கள்.
நாட்டின் மூத்தகுடிமக்களுக்கு முன்னுரிமை, சலுகைகளை அளிப்பது உலகெங்கும் உள்ள ஒரு நடைமுறை. மக்கள் நல அரசுகளுக்கு அது ஒரு கடப்பாடும்கூட. இந்தியாவில் மூத்தகுடிமக்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவையும்கூட படித்த - ஓரளவுக்கேனும் வசதியுடையவர்கள் அடையக்கூடியவையாகவே இருக்கின்றன.
இந்நிலையில், வறுமை ஒழிப்புத் திட்டங்களில் ஒன்றாக வசதியற்ற மூத்தகுடிமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம். சொத்துகள் ஏதுமற்ற, வருமானத்துக்கு வழியில்லாத 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ரூ. 400 ஓய்வூதியம் பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது.
மாதம் ரூ. 400-ஐ மட்டுமே வருமானமாகக் கொண்டு இந்தக் காலத்தில் ஒருவர் - அதுவும் ஒரு முதியவர் வாழ்க்கையைக் கடத்திவிட முடியுமா என்பது ஒரு பெரிய கேள்விதான். ஆனாலும், நம்முடைய அரசு இந்நாட்டு ஏழைகளுக்கென்று ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கி வைத்திருக்கிறது. ரேஷன் கடைகளில் ரூ. 1 அல்லது ரூ. 2 விலையில் ஒரு கிலோ அரிசி, மலிவு விலை மண்ணெண்ணெய், மளிகைப் பொருள்கள், பண்டிகையையொட்டியோ, அரசியல் தலைவர்கள் பிறந்த நாளையொட்டியோ ஆண்டுக்கொரு முறை வழங்கப்படும் இலவச வேஷ்டி - சேலை, நோய்வாய்ப்பட்டால் அரசு மருத்துவமனை என்று அந்த வாழ்க்கை முறை விதிக்கப்பட்டவர்களுக்கு இன்றைக்கும் ரூ. 400 குறிப்பிடத்தக்க ஒரு தொகையாகவே இருக்கிறது.
தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்திலுள்ள ஒரு நல்ல விஷயம், ஓர் ஊரில் அல்லது ஒரு மாவட்டத்தில் அதிகபட்சம் இத்தனை பேரைத்தான் இத்திட்டத்தில் சேர்க்கலாம் என்ற வரையறை ஏதும் கிடையாது என்பதாகும். ஆகையால், வருமானத்துக்கு வாய்ப்பற்ற 65 வயதைக் கடந்த இந்நாட்டு மூத்தகுடிமக்கள் அனைவருக்குமே இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கலாம். ஆனால், இத்திட்டத்தில் சேர அதிகார வர்க்கம் உருவாக்கியுள்ள நடைமுறை தன்மானமுள்ள எவரையும் தலைகுனியவைப்பதாக அமைந்திருக்கிறது. ஒரு முதியவர் இத்திட்டத்தில் சேர விரும்பினால், அதற்கு விண்ணப்பத்தில் கீழ்காணும் உறுதிகளை அளிக்க நிர்பந்திக்கப்படுகிறார்.
"ஐயா, எனக்கு 65 வயதாகிவிட்டது. நான் ஓர் அனாதை. எனக்குச் சொத்துகள் ஏதுமில்லை. எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது. நான் பிச்சை எடுக்கவில்லை. ஆனால், அதரவற்ற நான், இன்னார் வீட்டுத் திண்ணையில் தங்கி அருகிலிருப்போர் தரும் உணவை உண்டு வாழ்கிறேன். தயவுசெய்து எனக்கு உதவித்தொகை அளியுங்கள்."
அதாவது, "நான் தெருவில் அமர்ந்து பிச்சை எடுக்கவில்லை. ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பிச்சையாகத் தரப்படும் உணவை உண்டு வாழ்கிறேன்" என்று சொல்லாமல் சொல்லச் சொல்கிறார்கள் அதிகாரிகள். தொடர்ந்து, விண்ணப்பிப்பவரின் இந்த வாக்கியங்களையே வருவாய்த் துறை அலுவலர்கள் சான்றாகத் தருவார்கள். அதன் பின்னரே உதவித்தொகை. முரண்பாடுகள் மிக்க, மிக அபத்தமான ஒரு நடைமுறை இது. ஓர் அரசாங்கம் தன்னிடம் உதவி கேட்டு வரும் தன்னுடைய மூத்தகுடிமக்களை இதற்கு மேல் இழிவுபடுத்த முடியுமா என்று தெரியவில்லை.
உண்மையில் இத்திட்டத்தில் சேருவதற்கு அரசு வகுத்திருக்கும் விதிகளின்படி இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு வேலையே இல்லை. ஆனால், பயனாளி வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையைப் பயன்படுத்தி இத்தகைய அவலத்தை அரங்கேற்றி வருகிறார்கள் அதிகாரிகள். இந்தியாவைப் பொறுத்த அளவில் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் பெரும்பான்மையினர் விவசாயக் கூலித் தொழிலாளிகள்தான். நம் நாட்டில் பிச்சை எடுப்பவர்களில் பெரும்பான்மையினரும் இவர்களே. நாட்டுக்கே உணவிட்டவர்கள் ஒரு வேளை சோற்றுக்குக் கையேந்தும் நிலை ஏற்பட்டது நாட்டை வழிநடத்துபவர்கள் செய்யும் தவறுகளால் ஏற்பட்ட விளைவு. இந்தத் தவறுகளில் அதிகார வர்க்கத்துக்கும் பெரும் பங்குண்டு.
குறைந்தபட்சம் இந்தப் பாவத்துக்கான பரிகாரமாகவேனும் அதிகாரிகள் இத்தகைய மோசமான நடைமுறைகளைக் கைவிட வேண்டும். முதியோரை மதிக்காத வீடும் நாடும் என்னவாகும் என்று வரலாற்றையோ, புராணத்தையோ படித்தாவது தெரிந்துகொள்ள வேண்டும்!
Monday, August 31, 2009
விஜய் காங்கிரசில்??? => பலமுனை எதிர்ப்பு!!
நடிகர் விஜய், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலை டில்லியில் சந்தித்து விட்டு திரும்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள், விஜயை வரவேற்றுள்ளதால், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல்லது ராஜ்யசபா எம்.பி., பதவி அவருக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.விஜய் மீண்டும் ராகுலின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஆனால் விஜய், காங்கிரஸ் கட்சியில் சேர நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி உள்ளது. அடுத்த மாதம் தமிழகம் வரும் ராகுலை சந்திக்கும் போது தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என, காங்கிரஸ் கட்சியில் முன்னணியில் இருந்து வரும் தலைவர்களின் வாரிசுகள் கணக்கு போட்டு காத்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியில் விஜய் சேரும் பட்சத்தில், அவரது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பதவிகள் கொடுக்கப்படும்.
இதனால், பதவியை எதிர் பார்த்துக் காத்திருக்கும் காங்கிரசார் இப்போதே தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.மத்திய அமைச்சர்கள் சிலரை, விஜயின் அப்பா சந்திரசேகர் சந்தித்துப் பேசியுள்ளார். அமைச்சர் வாசன் மூலமாகவே ராகுலை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் விஜய் சேர்வது உறுதியாகி உள்ளது. விஜய் முடிவுக்கு வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் விஜய் மனைவியின் பூர்வீகம் இலங்கை. லண்டன் மற்றும் கனடாவில் அவரின் பெற்றோர்களும், உறவினர்களும் உள்ளனர். இதனால் கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விஜய் ரசிகர்களாக உள்ளனர். இதனால், விஜய் நடித்த படங்கள் வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விஜய், காங்கிரசில் சேர்ந்தால் இந்நாடுகளில் அவரது படங்களைப் புறக்கணிப்போம் என்று கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்தக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் விஜய், மக்கள் இயக்கம் துவங்கி அதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று புதிய அரசியல் கட்சி துவங்கப் போவதாக செய்திகள் வந்தன. இப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாகவும், அவருக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர்களும் குடிமக்கள் என்பதால், அவர்களும் அரசியலில் பங்கு கொள்ள உரிமை உண்டு. ஆனால் விஜய், காங்கிரசில் சேர முன் வந்தால், அதைத் தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள்.மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சியின் போது தான் இலங்கையில் வரலாறு காணாத வகையில் இனப்படுகொலை அரங்கேறியது.காங்கிரஸ் கட்சியில் ராகுலுடன் விஜய் கைகோர்க்க எத்தனித்திருப்பது, இலங் கைத் தமிழர்களுக்கு செய்யக் கூடிய ரெண் டகம். விஜய் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விஜய் படங்கள், நடித்து வெளிவர இருக்கும் புதிய படங்களை உலகளாவிய அளவில் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்' என, கூறப்பட்டுள்ளது.
சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில், விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், விஜய் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதனால், பதவியை எதிர் பார்த்துக் காத்திருக்கும் காங்கிரசார் இப்போதே தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.மத்திய அமைச்சர்கள் சிலரை, விஜயின் அப்பா சந்திரசேகர் சந்தித்துப் பேசியுள்ளார். அமைச்சர் வாசன் மூலமாகவே ராகுலை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் விஜய் சேர்வது உறுதியாகி உள்ளது. விஜய் முடிவுக்கு வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் விஜய் மனைவியின் பூர்வீகம் இலங்கை. லண்டன் மற்றும் கனடாவில் அவரின் பெற்றோர்களும், உறவினர்களும் உள்ளனர். இதனால் கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விஜய் ரசிகர்களாக உள்ளனர். இதனால், விஜய் நடித்த படங்கள் வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விஜய், காங்கிரசில் சேர்ந்தால் இந்நாடுகளில் அவரது படங்களைப் புறக்கணிப்போம் என்று கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்தக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் விஜய், மக்கள் இயக்கம் துவங்கி அதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று புதிய அரசியல் கட்சி துவங்கப் போவதாக செய்திகள் வந்தன. இப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாகவும், அவருக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர்களும் குடிமக்கள் என்பதால், அவர்களும் அரசியலில் பங்கு கொள்ள உரிமை உண்டு. ஆனால் விஜய், காங்கிரசில் சேர முன் வந்தால், அதைத் தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள்.மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சியின் போது தான் இலங்கையில் வரலாறு காணாத வகையில் இனப்படுகொலை அரங்கேறியது.காங்கிரஸ் கட்சியில் ராகுலுடன் விஜய் கைகோர்க்க எத்தனித்திருப்பது, இலங் கைத் தமிழர்களுக்கு செய்யக் கூடிய ரெண் டகம். விஜய் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விஜய் படங்கள், நடித்து வெளிவர இருக்கும் புதிய படங்களை உலகளாவிய அளவில் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்' என, கூறப்பட்டுள்ளது.
சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில், விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், விஜய் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
Sunday, August 30, 2009
வேலையைக் காப்பாத்திக்கோங்க!!
பொருளாதாரத் தேக்கநிலை இன்னமும் சரியாகாத நிலையில் இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதத்திற்குள் ஒரு லட்சத்து 72 ஆயிரம் பேரின் வேலை பறிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் 40 ஆயிரம் ஒப்பந்தப் பணிகள் தோன்றியுள்ளன. எனவே நிகர வேலையிழப்பு ஒரு லட்சத்து 32 ஆயிரமாக உள்ளது. வேலையிழப்புகளுடன் பிற துறைகளில் வருமான இழப்பும் ஏற்பட்டுவருகிறது. ஜெம் மற்றும் நகைத் தொழிலில் மட்டுமே வருமானங்கள் அதிகரித்துள்ளன. டெக்ஸ்டைல், மெட்டல், ஜெம் மற்றும் நகைத் தொழில், போக்குவரத்து, ஐ.டி., பி.பி.ஓ., ஆகிய துறைகளில் நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
மலேசியாவில் மாற்றம்:
மலேசியாவில் தொடர்ந்து வேலையிழப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்கான பெர்மிட்களுக்கு மலேசிய அரசு தடைவிதித்துள்ளது. உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில் வேலையிழந்த அந்த நாட்டு மக்களுக்கு இப் பணிகளைத் தர வேண்டும் என்று மலேசிய அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. மலேசியாவின் ஊழியர் தேவைகளுக்கு அது இந்தியாவையே பெரிதும் நம்பி வந்துள்ளது. கட்டுமானம், பிளான்டேஷன், ரெஸ்டாரண்ட் துறைகளில் இந்தோனேஷியா , வங்கதேசம் நேபாளம் போன்ற நாடுகள் மலேசியாவிற்கு உதவியாக இருந்து வந்துள்ளன.
அமெரிக்காவில் தற்காலிகப் பணி நியமனம்:
அமெரிக்காவில் வெரிடியூட் என்னும் மனித வள மேம்பாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி அமெரிக்காவிலுள்ள 45 சதவீத நிறுவனங்களில் ஐ.டி., மற்றும் புரபஷனல் ஊழியர்கள் தற்காலிகமாகப் பணி நியமனம் செய்யப்படுவர் என கணித்துள்ளது. ஒன்று திரட்டப்பட்டு சேர்ந்து இயங்கவுள்ள 25 சதவீத நிறுவனங்களில் ஐ.டி., மற்றும் புரபஷனல் பணிகளை அதிகரிக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. திறன் வாய்ந்த பணியாளர்களை இப்படி ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகப் பணியிலமர்த்துவதன் மூலமாக பொருளாதார தேக்க நிலையை சமாளிக்க முடிவதோடு செலவுகளையும் குறைக்க முடியும் என்பதாலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
மலேசியாவில் மாற்றம்:
மலேசியாவில் தொடர்ந்து வேலையிழப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்கான பெர்மிட்களுக்கு மலேசிய அரசு தடைவிதித்துள்ளது. உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில் வேலையிழந்த அந்த நாட்டு மக்களுக்கு இப் பணிகளைத் தர வேண்டும் என்று மலேசிய அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. மலேசியாவின் ஊழியர் தேவைகளுக்கு அது இந்தியாவையே பெரிதும் நம்பி வந்துள்ளது. கட்டுமானம், பிளான்டேஷன், ரெஸ்டாரண்ட் துறைகளில் இந்தோனேஷியா , வங்கதேசம் நேபாளம் போன்ற நாடுகள் மலேசியாவிற்கு உதவியாக இருந்து வந்துள்ளன.
அமெரிக்காவில் தற்காலிகப் பணி நியமனம்:
அமெரிக்காவில் வெரிடியூட் என்னும் மனித வள மேம்பாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி அமெரிக்காவிலுள்ள 45 சதவீத நிறுவனங்களில் ஐ.டி., மற்றும் புரபஷனல் ஊழியர்கள் தற்காலிகமாகப் பணி நியமனம் செய்யப்படுவர் என கணித்துள்ளது. ஒன்று திரட்டப்பட்டு சேர்ந்து இயங்கவுள்ள 25 சதவீத நிறுவனங்களில் ஐ.டி., மற்றும் புரபஷனல் பணிகளை அதிகரிக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. திறன் வாய்ந்த பணியாளர்களை இப்படி ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகப் பணியிலமர்த்துவதன் மூலமாக பொருளாதார தேக்க நிலையை சமாளிக்க முடிவதோடு செலவுகளையும் குறைக்க முடியும் என்பதாலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
Friday, August 28, 2009
வி.வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பு வாபஸ் : பட்டியலில் இருந்து 30 பேரை நீக்கியது அரசு!
வி.ஐ.பி.,களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. எக்ஸ் பிரிவு பாதுகாப்பை அனுபவித்து வந்த 30 பேருக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும்.
தற்போது நாடு முழுவதும் உள்ள வி.ஐ.பி.,களுக்கு எக்ஸ், ஒய், இசட் மற்றும் இசட் பிளஸ் என்ற நான்கு பிரிவுகளின் கீழ், மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இதற்காக, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயை அரசு செலவிட்டு வருகிறது. வி.ஐ.பி.,களில் சிலர், தங்களது உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நிலையிலும், தங்களை பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காகவும், போலி அந்தஸ்திற்காகவும் பாதுகாப்பு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சில வி.ஐ.பி.,கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரின் சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற உள்ளதாகவும், அதற்கான பெயர் பட்டியலை உள்துறை அமைச்சகம் தயாரித்து வருவதாகவும், சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.
இதை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் பதவியேற்றதும், "வி.ஐ.பி.,களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து, சிலருக்கு நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். இவ்வாறு வாபஸ் பெறப்படும் பாதுகாப்பு படையினர், பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பிற பணிகளுக்கு பயன்படுத்தப்படுவர். எனக்கும் எந்தவித சிறப்பு பாதுகாப்பும் தேவையில்லை' என கூறியிருந்தார். இதற்கான பணிகள், கடந்த சில மாதங்களாக சத்தமில்லாமல் நடந்து வந்தன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பை நேற்று குறைத்துள்ளது. குறிப்பாக, எக்ஸ் பிரிவு பாதுகாப்பை அனுபவித்து வந்த, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.எஸ்.சபர்வால் உட்பட 30 வி.ஐ.பி.,களுக்கு அந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பை குறைப்பது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் முடிவில், எக்ஸ் பிரிவு பாதுகாப்பு பெறுவோரின் பட்டியலில் இடம் பெற்றிருந்த 30 பேருக்கு, அந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எக்ஸ் பிரிவு பாதுகாப்பை அனுபவிக்கும் பட்டியலில் உள்ள வி.ஐ.பி.,களின் எண்ணிக்கை 20 ஆகக் குறைந்துள்ளது. எக்ஸ் பிரிவு பாதுகாப்பை பெறும் வி.ஐ.பி.,க்கு எட்டு மணி நேரத்துக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி என்ற அடிப்படையில், ஒரு நாளைக்கு மூன்று பேர் பாதுகாப்புக்காக நியமிக்கப்படுவர். இதைப் பின்பற்றி, ஒய், இசட் மற்றும் இசட் பிளஸ் பிரிவுகளிலும், பாதுகாப்பு அளிக்கும் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும். இவ்வாறு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மாதிரி பாதுகாப்பு குறைக்கப்படும் தலைவர்கள் பெயர் பட்டியலில், உ.பி., அரசியல் பிரமுகர் டி.பி.யாதவ், நடிகரும் முன்னாள் எம்.பி.,யுமான கோவிந்தா, பா.ஜ., எம்.பி., வருண், சிவராஜ் பாட்டீல் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாதுகாப்பு குறைப்பு தொடர்பான தகவல் வெளியானதை அடுத்து, ஏராளமான வி.ஐ.பி.,கள், குறிப்பாக அரசியல்வாதிகள், அதிகாரிகளை தொடர்பு கொண்டு, எங்களுக்கான பாதுகாப்பை வாபஸ் பெற வேண்டாம் என வலியுறுத்த துவங்கியுள்ளனர்' என்றார். மேலும், அதிக பாதுகாப்பு இருந்தால், அவர் செல்வாக்கான அரசியல்வாதி என்ற கருத்து பொது மக்களிடம் ஏற்படும் என்று கட்சிகள் கருதுகின்றன. மத்திய அரசில் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, ஆண்டுதோறும் வி.ஐ.பி.,களின் பாதுகாப்புக்காக செலவழித்து வந்த பல கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள வி.ஐ.பி.,களுக்கு எக்ஸ், ஒய், இசட் மற்றும் இசட் பிளஸ் என்ற நான்கு பிரிவுகளின் கீழ், மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இதற்காக, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயை அரசு செலவிட்டு வருகிறது. வி.ஐ.பி.,களில் சிலர், தங்களது உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நிலையிலும், தங்களை பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காகவும், போலி அந்தஸ்திற்காகவும் பாதுகாப்பு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சில வி.ஐ.பி.,கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரின் சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற உள்ளதாகவும், அதற்கான பெயர் பட்டியலை உள்துறை அமைச்சகம் தயாரித்து வருவதாகவும், சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.
இதை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் பதவியேற்றதும், "வி.ஐ.பி.,களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து, சிலருக்கு நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். இவ்வாறு வாபஸ் பெறப்படும் பாதுகாப்பு படையினர், பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பிற பணிகளுக்கு பயன்படுத்தப்படுவர். எனக்கும் எந்தவித சிறப்பு பாதுகாப்பும் தேவையில்லை' என கூறியிருந்தார். இதற்கான பணிகள், கடந்த சில மாதங்களாக சத்தமில்லாமல் நடந்து வந்தன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பை நேற்று குறைத்துள்ளது. குறிப்பாக, எக்ஸ் பிரிவு பாதுகாப்பை அனுபவித்து வந்த, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.எஸ்.சபர்வால் உட்பட 30 வி.ஐ.பி.,களுக்கு அந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பை குறைப்பது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் முடிவில், எக்ஸ் பிரிவு பாதுகாப்பு பெறுவோரின் பட்டியலில் இடம் பெற்றிருந்த 30 பேருக்கு, அந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எக்ஸ் பிரிவு பாதுகாப்பை அனுபவிக்கும் பட்டியலில் உள்ள வி.ஐ.பி.,களின் எண்ணிக்கை 20 ஆகக் குறைந்துள்ளது. எக்ஸ் பிரிவு பாதுகாப்பை பெறும் வி.ஐ.பி.,க்கு எட்டு மணி நேரத்துக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி என்ற அடிப்படையில், ஒரு நாளைக்கு மூன்று பேர் பாதுகாப்புக்காக நியமிக்கப்படுவர். இதைப் பின்பற்றி, ஒய், இசட் மற்றும் இசட் பிளஸ் பிரிவுகளிலும், பாதுகாப்பு அளிக்கும் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும். இவ்வாறு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மாதிரி பாதுகாப்பு குறைக்கப்படும் தலைவர்கள் பெயர் பட்டியலில், உ.பி., அரசியல் பிரமுகர் டி.பி.யாதவ், நடிகரும் முன்னாள் எம்.பி.,யுமான கோவிந்தா, பா.ஜ., எம்.பி., வருண், சிவராஜ் பாட்டீல் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாதுகாப்பு குறைப்பு தொடர்பான தகவல் வெளியானதை அடுத்து, ஏராளமான வி.ஐ.பி.,கள், குறிப்பாக அரசியல்வாதிகள், அதிகாரிகளை தொடர்பு கொண்டு, எங்களுக்கான பாதுகாப்பை வாபஸ் பெற வேண்டாம் என வலியுறுத்த துவங்கியுள்ளனர்' என்றார். மேலும், அதிக பாதுகாப்பு இருந்தால், அவர் செல்வாக்கான அரசியல்வாதி என்ற கருத்து பொது மக்களிடம் ஏற்படும் என்று கட்சிகள் கருதுகின்றன. மத்திய அரசில் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, ஆண்டுதோறும் வி.ஐ.பி.,களின் பாதுகாப்புக்காக செலவழித்து வந்த பல கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
Thursday, August 27, 2009
மனைவி கை செலவுக்காக கிட்னியை விற்கும் வாலிபர்!
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண் சமீபத்தில் தன் கணவரிடம் இருந்து பிரிய கோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழலாம். மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் செலவுக்கு 8 ஆயிரம் ரூபாயை கணவன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து மனைவியிடம் இருந்து விடுதலை பெற்ற அந்த நபர் கடந்த சில மாதங்கள் மட்டுமே மாதம் 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்தார். அதன் பிறகு அவரால் பணம் புரட்ட இயலவில்லை.
3 ஆயிரத்து 600-க்கு மாத சம்பளத்தில் வேலை பார்க்கும், அந்த நபருக்கு 8 ஆயிரம் ரூபாய் புரட்டி முன்னாள் மனைவிக்கு கொடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது.
வேறு வழி தெரியாத அந்த நபர் கடந்த வாரம் சண்டிகார் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த மனுவில், என்னிடம் இருந்து பிரிந்து சென்ற என் மனைவிக்கு கோர்ட்டு உத்தரவுப்படி பணம் கொடுக்கவில்லை.
அவர் கைச் செலவுக்காக பணம் கொடுக்க வேண்டுமானால் என் 2 கிட்னிகளில் ஒன்றை 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்க வேண்டும். சட்டப்பிரிவு 125-வது விதியின் கீழ் எனக்கு இதற்கு அனுமதி தரவேண்டும் என்று கூறினார். இந்த மனு மீதான தீர்ப்பு அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.
இதையடுத்து மனைவியிடம் இருந்து விடுதலை பெற்ற அந்த நபர் கடந்த சில மாதங்கள் மட்டுமே மாதம் 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்தார். அதன் பிறகு அவரால் பணம் புரட்ட இயலவில்லை.
3 ஆயிரத்து 600-க்கு மாத சம்பளத்தில் வேலை பார்க்கும், அந்த நபருக்கு 8 ஆயிரம் ரூபாய் புரட்டி முன்னாள் மனைவிக்கு கொடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது.
வேறு வழி தெரியாத அந்த நபர் கடந்த வாரம் சண்டிகார் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த மனுவில், என்னிடம் இருந்து பிரிந்து சென்ற என் மனைவிக்கு கோர்ட்டு உத்தரவுப்படி பணம் கொடுக்கவில்லை.
அவர் கைச் செலவுக்காக பணம் கொடுக்க வேண்டுமானால் என் 2 கிட்னிகளில் ஒன்றை 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்க வேண்டும். சட்டப்பிரிவு 125-வது விதியின் கீழ் எனக்கு இதற்கு அனுமதி தரவேண்டும் என்று கூறினார். இந்த மனு மீதான தீர்ப்பு அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.
Monday, August 24, 2009
ஸ்வைன் ஃப்ளூவிற்கு எதிராக கொடுக்கப்படும் டாமிஃப்ளூ - ஓர் பார்வை
குழந்தைகளின் வாழ்வை சிறுவயதிலேயே பறிக்கும் போலியோ என்ற முடக்குவாத நோய்க்கு தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்த விஞ்ஞானி ஜோனாஸ் சால்க் தனது கண்டுபிடிப்பை காப்புரிமை செய்ய மறுத்து விட்டார். காரணம், "சூரியனுக்கே காப்புரிமை பெறுவது போன்ற செயல் அது" என்று கூறினார்.
ஆனால் இன்று உலகம் முழுதும் மனிதர்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கும் ஸ்வைன் ஃப்ளூ என்ற காய்ச்சல, கொள்ளை நோயாக பரவி வரும் வேளையில் நாம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பவேண்டிய அறவியல் ரீதியான கட்டாயம் ஏற்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவோ, இந்தியாவோ, சீனாவோ ஸ்வைன் ஃப்ளூவிற்கு எதிராக கொடுக்கப்படும் டாமிஃப்ளூ என்ற வணிக முத்திரையில் விற்கப்படும் ரோச் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் மருந்தின் மூலப்பொருளை உற்பத்தி செய்து அந்த மருந்தை எளிதில் குறைந்த விலைக்கு கிடைக்குமாறு செய்ய ஏன் முடியவில்லை?
ஏனெனில் இந்த மருந்தை கண்டுபிடித்ததாகக் கூறும் ரோச் நிறுவனம் அதன் காப்புரிமையை வைத்துள்ளது. மிகப்பெரிய கொள்ளை நோயாக ஸ்வைன் ஃப்ளூ உருவாகி வரும் வேளையிலும் உலக சுகாதார அமைப்பு இந்த காப்புரிமை என்ற லாப வேட்டைக் குறிக்கோளை தளர்த்த முயலவில்லை.
நாம் வாழும் இன்றைய உலகின் மிகப்பெரிய மோசடி என்னவெனில், உயிரைக் காப்பாற்றக்கூடிய எந்த ஒரு மருந்தையும் ஏழை நாடுகள் தாங்களாகவே தயாரித்து சுய நிறைவு எய்த முடியாது என்பதே.
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள வசதிகளின் படி டாமிஃப்ளூவை இன்று குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் உற்பத்தி செய்யக்கூடாது என்று கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. ஏனெனில் பண்ணாட்டு நிறுவங்களின் காப்புரிமையையும், லாப நோக்கையும் காப்பதுதான் அதன் பணி! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஸ்வைன் ஃப்ளூ ஒரு மக்கள் தொகை அழிப்பு எந்திரமாக உருமாறி வருவதிலிருந்து ஏழை நாடுகள் தப்பிப்பதற்கான மாற்று வழி இருந்தும் அதனை நாம் செய்து மக்களை இந்த கொடிய நோயிலிருந்து காப்பற்ற முடியாச சூழ்நிலையில் வாழ்கிறோம்.
மும்பை, புனே போன்ற பகுதிகளில் டாமிஃப்ளூ கள்ளச்சந்தையில் நாம் கற்பனை செய்ய முடியாத விலைக்கு விற்கப்படுவதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எனவே இதிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகம். அரசு மருத்துவமனையிலிருந்து பேராசை பிடித்த சில சக்திகள் டாமிஃப்ளூவை எடுத்து வெளியில் விற்கும் ஒரு போக்கையே இது காண்பிக்கிறது.
இந்த நிலையில் டாமிஃப்ளூவின் உட்பொருளை அந்தந்த நாடுகளே தயாரித்து அதனை வணிக முத்திரையற்ற மூலப்பெயரில் விற்கும் உரிமையை வலியுறுத்துவது உலக நாடுகளின் கடமையாகும். ஏழை நாடுகளுக்கு ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் பரவி உயிர் பலி பெரிய அளவிற்கு ஏற்படக்கூடும் என்று சில மாதங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்த உலகச் சுகாதார அமைப்பு, ஏன் அதற்கு தீர்வாக அமையும் ஒரு மருந்தினை அந்த நாடுகள் தயாரிக்க அனுமதிக்கவில்லை?
மருந்து ஆராய்ச்சி அல்லது உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான ஆய்வு பெரும்பாலும் வெளி நாடுகளில் அரசு நிதி உதவியுடன் நடைபெறும் பல்கலைக் கழங்களில் நடத்தப்படுகிறது. விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டு ஒரு உயிர் காக்கும் மருந்தை பல ஆண்டு உழைப்பில் கண்டு பிடிப்பதன இறுதித் தறுவாயில் மருந்து நிறுவனம் ஒன்று நுழையும், செலவுகளில் பாதியை கொடுக்கும், அதாவது ராசயனத்திற்கான செலவுகள், பரிசோதனை நடத்துவதற்கான செலவுகள் ஆகியவற்றை ஏற்கும். ஆனால் இறுதிக் கட்டத்திற்கு முந்தைய மிகப்பெரிய செலவுகள் அரசு நிதி உதவியுடன் நடத்தப்படுகிறது. அது மக்கள் வரிப்பணம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த செலவுகளை ஏற்று அந்த குறிப்பிட்ட உயிர் காக்கும் மருந்திற்கான உற்பத்தி மற்றும் விற்பனை உரிமையை தனதாக்கிக் கொண்டு காப்புறுதி என்ற பெயரில் அடுத்தவர்களை நெருங்க விடாமல் லாபங்களை கொள்ளை கொள்ளையாக குவிக்கும். கொள்ளை நோய் என்பதன் இன்னொரு அர்த்தம் இது போண்ற நிறுவனஙளின் கொள்ளை லாப நோய் என்றே கூட நாம் மறுப் பெயரிடலாம்.
தென் ஆப்பிரிக்காவில்தான் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். தன் நாட்டு நோயாளிகளுக்கு தாங்களே மருந்து உறுபத்தி செய்யும் உரிமை அந்த நாட்டிற்கு கிடையாது. எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் அந்த காப்புரிமை பெற்ற மருந்தை தென் ஆப்பிரிக்கா உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது மருந்தின் காப்புரிமை பெற்றிருந்த அந்த நிறுவனம் தென் ஆப்பிரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றது.
ஆண்டொன்றிற்கு நோயாளி ஒருவருக்கு 100 டாலர்களில் முடிய வேண்டிய செலவை, 10,000 டாலர்களுக்கு ஆண்டு தோறும் மருந்தை இறக்குமதி செய்யவைத்தது அந்த நிறுவனம். உயிர்க்கொல்லி நோய்களால் அவதியுறும் ஏழை மக்களை உயிர்காப்பு மருந்துகள் நெருங்க விடாமல் தடுக்கப்படுகின்றன. அப்படியே இந்த மருந்தை இந்தியா போன்ற நாடுகள் உற்பத்தி செய்தாலும் அதன் அதிகாரம் ஒரு நிறுவனத்திற்கே வழங்கப்படும், அந்த நிறுவனம் காப்புரிமை பெற்ற நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை அளிக்கவேண்டி வரும். இதனால் யாரும் இதில் இறங்குவதில்லை.
எந்த ஒரு உயிர்க்கொல்லி நோயும் கொள்ளை நோயாக உலகம் முழுதும் பரவும் போதும் அந்த குறிப்பிட்ட நாடுகள் அந்த மருந்தின் நகலை உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டியது இன்றைய கட்டாயத் தேவையாகும். சந்தைப் பொருளாதாரத்தில் போட்டிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்று கூறும்போது, அங்கு ஒட்டு மொத்த உரிமையை எப்படி ஒரே நிறுவனம் வைத்திருக்க அனுமதிப்பது?
தென் ஆப்பிரிக்க விஷயத்தில் இது பெரிய சலசலப்பை ஏற்படுத்த மிகப்பெரிய பொதுச் சுகாதார நெருக்கடி எழும் போது ஏழை நாடுகள் உயிர்காக்கும் மருந்தின் நகலை உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று நாடுகளிடையே ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த ஒப்புதலின் அடிப்படையில் இன்று இந்தியா டாமிஃப்ளூவின் 'ஜெனிரிக்' வடிவத்தை தயாரித்துக் கொள்ளலாம். அதாவது காப்புரிமை வைத்திருக்கும் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒரே தவணையாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட்டு தயாரித்துக் கொள்வது. ஒரு சில நிறுவனங்களுக்கு இதன் உற்பத்தி உரிமைகளை காப்புரிமை பெற்ற நிறுவனம் அளிக்க முன் வந்தாலும், அதற்கான உரிமம் பெற ஒரு பெரிய தொகையை அளிக்கவேண்டும். இதனால் அதுவும் பயனில்லாமல் போய் விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. அல்லது மருந்து அது தேவைப்படும் அளவிற்கு கிடைக்காமல் போக வாய்புள்ளது.
ஆனால் இந்த பொதுச் சுகாதார நெருக்கடி எது என்பதை உலக சுகாதார அமைப்பே தீர்மானிக்கும். இது போதாதா? ஸ்வைன் ஃப்ளூ பரவல் நெருக்கடி நிலைக்கு உயரவில்லை என்று கூறிக்கொண்டே காலம் கடத்தலாம்.
ஏன் காப்புரிமை வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கிறீர்கள் என்று அந்த நிறுவனங்களிடம் கேட்டால், 'நாங்கள் ஒன்றும் சும்மா இல்லை, ஏகப்பட்ட உயிர்காப்ப்பு மருந்துகளுக்காக நாங்கள் ஆராய்ச்சி செய்து வருகிறோம், அவற்றிற்கு ஆகும் செலவு பயங்கரமானது, எனவே நாங்கள் இதிலிருந்து வரும் வருவாயை மீண்டும் ஆய்விற்குத்தான் பயன்படுத்துகிறோம், நிறைய ஆய்வுகள் சந்தைக்கு கொண்டு செல்லும் மருந்துகளாக முடிவதில்லை. இது ஒரு மிகப்பெரிய நடைமுறை அதிகம் செலவாகும்' என்று கூறுவார்கள்.
ஆனால் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் மருந்துவ இதழில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர் ஒருவர் இது பற்றி முழு விரிவாக ஆய்வு நடத்தியுள்ளார். மருந்து நிறுவனங்களின் பட்ஜெட்டில் 12 முதல் 14 விழுக்காடு வரையே புதிய மருந்து ஆய்விற்கு செலவிடப்படுகிறது, அதுவும் ஆய்வு நடத்துவது வேறு சிலர். அந்த ஆய்வின் இறுதிக் கட்டத்தில் சென்று ஒரு குறைந்த அளவில் செலவை ஏற்றுக் கொள்கின்றன. இந்த நிறுவனங்களின் ஆய்வுகளெல்லாம் ஏற்கனவே உள்ள சாதாரண மருந்துகளில் புதிதாக ஒரு ரசாயனத்தைச் சேர்த்து ஏற்கனவே மலிவு விலையில் கிடைக்கும் மருந்துகள் பயனற்றவை என்று கூறி முழு காப்புரிமையை தன் இந்த புதிய மருந்திற்கு பெறுவதே என்ற அதிரடி உண்மையை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார்.
இதனால் மனித உயிர்களை கொத்துக் கொத்தாக அழிக்கும் எந்த ஒரு நோய்க்கான தீவிர ஆராய்ச்சியையும் சீரியசாக எந்த பன்னாட்டு நிறுவனங்களும் செய்வதில்லை. மலேரியாவிற்கு என்னவெல்லாமோ மருந்துகள் கண்டுபிடித்தும் இன்றும் அது ஒரு உயிர்க்கொல்லி நோயாகவே இருந்து வருகிறது. மலேரியா நோய்க்கான மருந்தை விற்று வரும் நிறுவனங்கள் எவ்வளவு லாபம் பார்த்திருக்கும். ஆனால் மலேரியாவை ஒழிக்க அதில் ஒரு சில விழுக்கட்டுத் தொகையினைக்கூட செலவிடுவதில்லை என்பதுதான் இன்றைய இருண்ட உண்மை.
அமெரிக்காவில் இதனை மாற்றுவதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப் படுவதில்லை. கட்சிகளுக்கு மருந்து நிறுவனங்கள் பெரிய அளவிற்கு நிதி கொடுக்கின்றன. அவர்களது தேர்தல் பிரச்சார செலவுகளை ஏற்றுக் கொள்கிறது. அமெரிக்காவில் கடைசியாக அமல் செய்யப்பட்ட சுகாதார மசோதா 2003ஆம் ஆண்டு. இதனை பெரிதும் வடிவமைத்தவர்கள் மருந்து உற்பத்தி நிறுவன ஆதரவாளர்களே என்று குடியரசுக் கட்சியின் உறுப்பினர் வால்டர் பர்ட்டன் என்பவர் கூறியுள்ளார்.
இது போன்ற ஒரு அழுகிபோன அமைப்பில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை சிறிதும் மாறிவிடக்கூடாது என்பதில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தீவிரமாக இருந்து வருகின்றன. மனித சமூகத்தின் ஆரோக்கியமும், உடல் நலமும் பெரிதல்ல, மருந்து நிறுவனங்களின் ஆரோக்கியமும், நிதி நிலையுமே முக்கியம். எப்போது மாறப்போகிறதோ உலகளாவிய இந்த இழி நிலை?
ஆனால் இன்று உலகம் முழுதும் மனிதர்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கும் ஸ்வைன் ஃப்ளூ என்ற காய்ச்சல, கொள்ளை நோயாக பரவி வரும் வேளையில் நாம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பவேண்டிய அறவியல் ரீதியான கட்டாயம் ஏற்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவோ, இந்தியாவோ, சீனாவோ ஸ்வைன் ஃப்ளூவிற்கு எதிராக கொடுக்கப்படும் டாமிஃப்ளூ என்ற வணிக முத்திரையில் விற்கப்படும் ரோச் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் மருந்தின் மூலப்பொருளை உற்பத்தி செய்து அந்த மருந்தை எளிதில் குறைந்த விலைக்கு கிடைக்குமாறு செய்ய ஏன் முடியவில்லை?
ஏனெனில் இந்த மருந்தை கண்டுபிடித்ததாகக் கூறும் ரோச் நிறுவனம் அதன் காப்புரிமையை வைத்துள்ளது. மிகப்பெரிய கொள்ளை நோயாக ஸ்வைன் ஃப்ளூ உருவாகி வரும் வேளையிலும் உலக சுகாதார அமைப்பு இந்த காப்புரிமை என்ற லாப வேட்டைக் குறிக்கோளை தளர்த்த முயலவில்லை.
நாம் வாழும் இன்றைய உலகின் மிகப்பெரிய மோசடி என்னவெனில், உயிரைக் காப்பாற்றக்கூடிய எந்த ஒரு மருந்தையும் ஏழை நாடுகள் தாங்களாகவே தயாரித்து சுய நிறைவு எய்த முடியாது என்பதே.
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள வசதிகளின் படி டாமிஃப்ளூவை இன்று குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் உற்பத்தி செய்யக்கூடாது என்று கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. ஏனெனில் பண்ணாட்டு நிறுவங்களின் காப்புரிமையையும், லாப நோக்கையும் காப்பதுதான் அதன் பணி! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஸ்வைன் ஃப்ளூ ஒரு மக்கள் தொகை அழிப்பு எந்திரமாக உருமாறி வருவதிலிருந்து ஏழை நாடுகள் தப்பிப்பதற்கான மாற்று வழி இருந்தும் அதனை நாம் செய்து மக்களை இந்த கொடிய நோயிலிருந்து காப்பற்ற முடியாச சூழ்நிலையில் வாழ்கிறோம்.
மும்பை, புனே போன்ற பகுதிகளில் டாமிஃப்ளூ கள்ளச்சந்தையில் நாம் கற்பனை செய்ய முடியாத விலைக்கு விற்கப்படுவதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எனவே இதிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகம். அரசு மருத்துவமனையிலிருந்து பேராசை பிடித்த சில சக்திகள் டாமிஃப்ளூவை எடுத்து வெளியில் விற்கும் ஒரு போக்கையே இது காண்பிக்கிறது.
இந்த நிலையில் டாமிஃப்ளூவின் உட்பொருளை அந்தந்த நாடுகளே தயாரித்து அதனை வணிக முத்திரையற்ற மூலப்பெயரில் விற்கும் உரிமையை வலியுறுத்துவது உலக நாடுகளின் கடமையாகும். ஏழை நாடுகளுக்கு ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் பரவி உயிர் பலி பெரிய அளவிற்கு ஏற்படக்கூடும் என்று சில மாதங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்த உலகச் சுகாதார அமைப்பு, ஏன் அதற்கு தீர்வாக அமையும் ஒரு மருந்தினை அந்த நாடுகள் தயாரிக்க அனுமதிக்கவில்லை?
மருந்து ஆராய்ச்சி அல்லது உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான ஆய்வு பெரும்பாலும் வெளி நாடுகளில் அரசு நிதி உதவியுடன் நடைபெறும் பல்கலைக் கழங்களில் நடத்தப்படுகிறது. விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டு ஒரு உயிர் காக்கும் மருந்தை பல ஆண்டு உழைப்பில் கண்டு பிடிப்பதன இறுதித் தறுவாயில் மருந்து நிறுவனம் ஒன்று நுழையும், செலவுகளில் பாதியை கொடுக்கும், அதாவது ராசயனத்திற்கான செலவுகள், பரிசோதனை நடத்துவதற்கான செலவுகள் ஆகியவற்றை ஏற்கும். ஆனால் இறுதிக் கட்டத்திற்கு முந்தைய மிகப்பெரிய செலவுகள் அரசு நிதி உதவியுடன் நடத்தப்படுகிறது. அது மக்கள் வரிப்பணம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த செலவுகளை ஏற்று அந்த குறிப்பிட்ட உயிர் காக்கும் மருந்திற்கான உற்பத்தி மற்றும் விற்பனை உரிமையை தனதாக்கிக் கொண்டு காப்புறுதி என்ற பெயரில் அடுத்தவர்களை நெருங்க விடாமல் லாபங்களை கொள்ளை கொள்ளையாக குவிக்கும். கொள்ளை நோய் என்பதன் இன்னொரு அர்த்தம் இது போண்ற நிறுவனஙளின் கொள்ளை லாப நோய் என்றே கூட நாம் மறுப் பெயரிடலாம்.
தென் ஆப்பிரிக்காவில்தான் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். தன் நாட்டு நோயாளிகளுக்கு தாங்களே மருந்து உறுபத்தி செய்யும் உரிமை அந்த நாட்டிற்கு கிடையாது. எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் அந்த காப்புரிமை பெற்ற மருந்தை தென் ஆப்பிரிக்கா உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது மருந்தின் காப்புரிமை பெற்றிருந்த அந்த நிறுவனம் தென் ஆப்பிரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றது.
ஆண்டொன்றிற்கு நோயாளி ஒருவருக்கு 100 டாலர்களில் முடிய வேண்டிய செலவை, 10,000 டாலர்களுக்கு ஆண்டு தோறும் மருந்தை இறக்குமதி செய்யவைத்தது அந்த நிறுவனம். உயிர்க்கொல்லி நோய்களால் அவதியுறும் ஏழை மக்களை உயிர்காப்பு மருந்துகள் நெருங்க விடாமல் தடுக்கப்படுகின்றன. அப்படியே இந்த மருந்தை இந்தியா போன்ற நாடுகள் உற்பத்தி செய்தாலும் அதன் அதிகாரம் ஒரு நிறுவனத்திற்கே வழங்கப்படும், அந்த நிறுவனம் காப்புரிமை பெற்ற நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை அளிக்கவேண்டி வரும். இதனால் யாரும் இதில் இறங்குவதில்லை.
எந்த ஒரு உயிர்க்கொல்லி நோயும் கொள்ளை நோயாக உலகம் முழுதும் பரவும் போதும் அந்த குறிப்பிட்ட நாடுகள் அந்த மருந்தின் நகலை உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டியது இன்றைய கட்டாயத் தேவையாகும். சந்தைப் பொருளாதாரத்தில் போட்டிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்று கூறும்போது, அங்கு ஒட்டு மொத்த உரிமையை எப்படி ஒரே நிறுவனம் வைத்திருக்க அனுமதிப்பது?
தென் ஆப்பிரிக்க விஷயத்தில் இது பெரிய சலசலப்பை ஏற்படுத்த மிகப்பெரிய பொதுச் சுகாதார நெருக்கடி எழும் போது ஏழை நாடுகள் உயிர்காக்கும் மருந்தின் நகலை உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று நாடுகளிடையே ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த ஒப்புதலின் அடிப்படையில் இன்று இந்தியா டாமிஃப்ளூவின் 'ஜெனிரிக்' வடிவத்தை தயாரித்துக் கொள்ளலாம். அதாவது காப்புரிமை வைத்திருக்கும் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒரே தவணையாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட்டு தயாரித்துக் கொள்வது. ஒரு சில நிறுவனங்களுக்கு இதன் உற்பத்தி உரிமைகளை காப்புரிமை பெற்ற நிறுவனம் அளிக்க முன் வந்தாலும், அதற்கான உரிமம் பெற ஒரு பெரிய தொகையை அளிக்கவேண்டும். இதனால் அதுவும் பயனில்லாமல் போய் விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. அல்லது மருந்து அது தேவைப்படும் அளவிற்கு கிடைக்காமல் போக வாய்புள்ளது.
ஆனால் இந்த பொதுச் சுகாதார நெருக்கடி எது என்பதை உலக சுகாதார அமைப்பே தீர்மானிக்கும். இது போதாதா? ஸ்வைன் ஃப்ளூ பரவல் நெருக்கடி நிலைக்கு உயரவில்லை என்று கூறிக்கொண்டே காலம் கடத்தலாம்.
ஏன் காப்புரிமை வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கிறீர்கள் என்று அந்த நிறுவனங்களிடம் கேட்டால், 'நாங்கள் ஒன்றும் சும்மா இல்லை, ஏகப்பட்ட உயிர்காப்ப்பு மருந்துகளுக்காக நாங்கள் ஆராய்ச்சி செய்து வருகிறோம், அவற்றிற்கு ஆகும் செலவு பயங்கரமானது, எனவே நாங்கள் இதிலிருந்து வரும் வருவாயை மீண்டும் ஆய்விற்குத்தான் பயன்படுத்துகிறோம், நிறைய ஆய்வுகள் சந்தைக்கு கொண்டு செல்லும் மருந்துகளாக முடிவதில்லை. இது ஒரு மிகப்பெரிய நடைமுறை அதிகம் செலவாகும்' என்று கூறுவார்கள்.
ஆனால் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் மருந்துவ இதழில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர் ஒருவர் இது பற்றி முழு விரிவாக ஆய்வு நடத்தியுள்ளார். மருந்து நிறுவனங்களின் பட்ஜெட்டில் 12 முதல் 14 விழுக்காடு வரையே புதிய மருந்து ஆய்விற்கு செலவிடப்படுகிறது, அதுவும் ஆய்வு நடத்துவது வேறு சிலர். அந்த ஆய்வின் இறுதிக் கட்டத்தில் சென்று ஒரு குறைந்த அளவில் செலவை ஏற்றுக் கொள்கின்றன. இந்த நிறுவனங்களின் ஆய்வுகளெல்லாம் ஏற்கனவே உள்ள சாதாரண மருந்துகளில் புதிதாக ஒரு ரசாயனத்தைச் சேர்த்து ஏற்கனவே மலிவு விலையில் கிடைக்கும் மருந்துகள் பயனற்றவை என்று கூறி முழு காப்புரிமையை தன் இந்த புதிய மருந்திற்கு பெறுவதே என்ற அதிரடி உண்மையை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார்.
இதனால் மனித உயிர்களை கொத்துக் கொத்தாக அழிக்கும் எந்த ஒரு நோய்க்கான தீவிர ஆராய்ச்சியையும் சீரியசாக எந்த பன்னாட்டு நிறுவனங்களும் செய்வதில்லை. மலேரியாவிற்கு என்னவெல்லாமோ மருந்துகள் கண்டுபிடித்தும் இன்றும் அது ஒரு உயிர்க்கொல்லி நோயாகவே இருந்து வருகிறது. மலேரியா நோய்க்கான மருந்தை விற்று வரும் நிறுவனங்கள் எவ்வளவு லாபம் பார்த்திருக்கும். ஆனால் மலேரியாவை ஒழிக்க அதில் ஒரு சில விழுக்கட்டுத் தொகையினைக்கூட செலவிடுவதில்லை என்பதுதான் இன்றைய இருண்ட உண்மை.
அமெரிக்காவில் இதனை மாற்றுவதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப் படுவதில்லை. கட்சிகளுக்கு மருந்து நிறுவனங்கள் பெரிய அளவிற்கு நிதி கொடுக்கின்றன. அவர்களது தேர்தல் பிரச்சார செலவுகளை ஏற்றுக் கொள்கிறது. அமெரிக்காவில் கடைசியாக அமல் செய்யப்பட்ட சுகாதார மசோதா 2003ஆம் ஆண்டு. இதனை பெரிதும் வடிவமைத்தவர்கள் மருந்து உற்பத்தி நிறுவன ஆதரவாளர்களே என்று குடியரசுக் கட்சியின் உறுப்பினர் வால்டர் பர்ட்டன் என்பவர் கூறியுள்ளார்.
இது போன்ற ஒரு அழுகிபோன அமைப்பில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை சிறிதும் மாறிவிடக்கூடாது என்பதில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தீவிரமாக இருந்து வருகின்றன. மனித சமூகத்தின் ஆரோக்கியமும், உடல் நலமும் பெரிதல்ல, மருந்து நிறுவனங்களின் ஆரோக்கியமும், நிதி நிலையுமே முக்கியம். எப்போது மாறப்போகிறதோ உலகளாவிய இந்த இழி நிலை?
Friday, August 14, 2009
எம்எல்ஏக்களுக்கு சென்னையில் இலவசமாக வீட்டுமனை தேவையா?
எம்எல்ஏக்களுக்கு சென்னையில் இலவசமாக வீட்டுமனை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பலமுனைகளில் இருந்து எதிர்ப்புகளை உருவாக்கினாலும், இந்த சட்டப்பேரவையின் காலத்துக்குள் வீட்டுமனை வழங்குவதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகத் தகவல்.
இதற்கிடையே, எம்எல்ஏக்களுக்கு மாதம் ரூ. 50,000 ஊதியம் என்ற உயர்வு அறிவிப்பு வேறு.
இந்த நேரத்தில்தான் காலப் பொருத்தத்துடன் சில தலைவர்களின் செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.
காமராஜர் என்றொருவர் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார்! அவர், தனது சொந்த ஊரான விருதுப்பட்டிக்கு (இப்போதைய விருதுநகர்) செல்லும்போது முன்னால் சுழல் விளக்குடன் சென்ற காவல் துறை வாகனத்தை நிறுத்தி "ஏன் சங்கு ஊதிக் கொண்டே செல்ல வேண்டும்?' எனக் கேட்டார்.
பின்னொரு முறை தனது வீட்டுக்குச் சென்ற அவர், அங்கே புதிய குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அதிகாரிகளை அழைத்து எனது வீட்டுக்குக் குடிநீர்க் குழாயை அமைக்கக் கேட்டது யார்? என வினவினார்.
"ஆயிரக்கணக்கானோர் குடிநீரின்றித் தவிக்கும்போது, முதல்வரின் வீடு என்பதால், வீட்டுக்குக் குடிநீர் இணைப்பை இத்தனை வேகத்தில் கொடுப்பீங்களான்னே?' எனக் கேட்டார்.
காமராஜர் முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஜீவானந்தம். எதிர்க்கட்சியானாலும், அவரது தொகுதிக்குள் ஒரு விழாவில் பங்கேற்க வந்த காமராஜர் "எங்கே ஜீவானந்தம்?' எனக் கேட்டார்.
அவரது குடிசை வீட்டுக்குச் சென்று "வாங்க ஜீவா, விழாவுக்குப் போகலாம்' என்றார் காமராஜர். "இல்லையில்லை, என்னால் வர முடியாது; எனது வேஷ்டியையும், சட்டையையும் துவைத்துக் காய வைத்துள்ளேன். காய்ந்தபிறகு அதை உடுத்திக் கொண்டுதான் வர முடியும்' என்றார் ஜீவானந்தம்.
இப்படி எளிமையாகவும், யதார்த்தமாகவும் வாழ்ந்த பல எம்எல்ஏக்களை, அமைச்சர்களை, முதல்வர்களை, தலைவர்களை இந்தத் தமிழ்ப் பூவுலகம் கண்டுள்ளது.
காமராஜரைப் போல, கக்கனைப் போல, ஜீவாவைப் போல இருங்கள் என்று இப்போதுள்ள தலைவர்களை, மக்கள் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டால் நாம் புத்திபேதலித்தவர்கள். அரசியல் சூழல் வெகுவாக - தலைகீழாக மாறியிருக்கிறது.
ரூ. 50,000 ஊதியம் என்பதில்கூட, கார் பயணம், அலுவலகச் செலவுகள் எல்லாமும் சேர்த்துத்தான் என்று விளக்கமளிக்கிறார்கள். போகட்டும், மக்களுக்காக உழைக்க வந்தவர்கள். ஆனால், சிலவற்றை இந்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ரூ. 50,000 ஊதியம் வாங்கும் எம்எல்ஏக்கள் தவறு செய்யக் கூடாது. இன்னும் வேண்டுமானால், தேவையான ஊக்க- உதவித் தொகைகளை கூடுதலாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், எவரிடமும், எந்தக் காலமும்- அன்பளிப்பாகக் கூட எந்தப் பொருளையும், பணத்தையும், உதவியையும் பெற்றுக் கொள்ளாதவர்களாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும்.
அவ்வாறு பெறுபவர்களை கையும்களவுமாகப் பிடிக்கும் இன்னொரு காவல் துறைப் பிரிவையும் முதல்வர் உருவாக்க வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இல்லாத வகையில், அந்தப் பிரிவுக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
நேர்மையான மக்கள் பிரதிநிதிகளாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ் ஊதிய உயர்வை அங்கீகரிக்கலாம். ஆனால், எல்லா வகையிலும்- எம்எல்ஏக்களுக்கு இலவச வீட்டுமனை என்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.
தொகுதியின், தொகுதி மக்களின் பிரதிநிதியான எம்எல்ஏ, சென்னையில் இடம் கிடைத்துச் சென்றுவிட்டால்? மக்களை விட்டு அவர் விலகி வெகுதொலைவு சென்றுவிடுகிறாரே? அப்புறம் இன்னொன்றையும் செய்யலாம், எம்எல்ஏக்களிடம் மனுக் கொடுக்க சென்னை செல்பவர்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை, தள்ளுபடி விலையில் ரயில் பயண அட்டைகள்...
அடுத்து, எம்எல்ஏக்கள் ஒன்றும் நிரந்தரமானவர்கள் அல்லர். ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே ராஜிநாமா செய்பவர்கள் அதிகரித்து வருவதும், இடைத் தேர்தலின்போது மீண்டும் அவர்களுக்கு போட்டியிட இடம் கிடைக்காததும் தற்போதைய அரசியலில் இயல்பான ஒன்றாகி வருகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது அனைத்துக் கட்சிகளிலும் இப்போது மாறியிருக்கும் வரவேற்கத்தக்க அரசியல் போக்கு.
அப்படியானால், சில பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து கணிசமான எண்ணிக்கையிலான அரசியல்வாதிகளுக்கு "அதிகாரப்பூர்வமாகவே' சென்னையிலும் சில வீடுகள், தனி மாவட்டம்(!?), போலீஸôருக்கு இருப்பதைப் போல தனி ரேஷன் விநியோக முறை, தனியாக குறைதீர் ஆணையம்...
பிறகு, தேர்தலின்போது மட்டும் உள்ளூரில், தொகுதிக்குள் முகாம்- தனி அலுவலகம், சொகுசான வீடு. இப்படியான அக- புற மாற்றங்கள் விளைவுகள் தமிழகத்தில் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.
மக்களின் வாழ்க்கைத் தரத்தில், வாழ்வியல் சூழலில் எந்த மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படாது. இன்னமும், இன்னமும் கீழே இறங்கிச் செல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம்.
இதற்கிடையே, எம்எல்ஏக்களுக்கு மாதம் ரூ. 50,000 ஊதியம் என்ற உயர்வு அறிவிப்பு வேறு.
இந்த நேரத்தில்தான் காலப் பொருத்தத்துடன் சில தலைவர்களின் செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.
காமராஜர் என்றொருவர் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார்! அவர், தனது சொந்த ஊரான விருதுப்பட்டிக்கு (இப்போதைய விருதுநகர்) செல்லும்போது முன்னால் சுழல் விளக்குடன் சென்ற காவல் துறை வாகனத்தை நிறுத்தி "ஏன் சங்கு ஊதிக் கொண்டே செல்ல வேண்டும்?' எனக் கேட்டார்.
பின்னொரு முறை தனது வீட்டுக்குச் சென்ற அவர், அங்கே புதிய குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அதிகாரிகளை அழைத்து எனது வீட்டுக்குக் குடிநீர்க் குழாயை அமைக்கக் கேட்டது யார்? என வினவினார்.
"ஆயிரக்கணக்கானோர் குடிநீரின்றித் தவிக்கும்போது, முதல்வரின் வீடு என்பதால், வீட்டுக்குக் குடிநீர் இணைப்பை இத்தனை வேகத்தில் கொடுப்பீங்களான்னே?' எனக் கேட்டார்.
காமராஜர் முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஜீவானந்தம். எதிர்க்கட்சியானாலும், அவரது தொகுதிக்குள் ஒரு விழாவில் பங்கேற்க வந்த காமராஜர் "எங்கே ஜீவானந்தம்?' எனக் கேட்டார்.
அவரது குடிசை வீட்டுக்குச் சென்று "வாங்க ஜீவா, விழாவுக்குப் போகலாம்' என்றார் காமராஜர். "இல்லையில்லை, என்னால் வர முடியாது; எனது வேஷ்டியையும், சட்டையையும் துவைத்துக் காய வைத்துள்ளேன். காய்ந்தபிறகு அதை உடுத்திக் கொண்டுதான் வர முடியும்' என்றார் ஜீவானந்தம்.
இப்படி எளிமையாகவும், யதார்த்தமாகவும் வாழ்ந்த பல எம்எல்ஏக்களை, அமைச்சர்களை, முதல்வர்களை, தலைவர்களை இந்தத் தமிழ்ப் பூவுலகம் கண்டுள்ளது.
காமராஜரைப் போல, கக்கனைப் போல, ஜீவாவைப் போல இருங்கள் என்று இப்போதுள்ள தலைவர்களை, மக்கள் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டால் நாம் புத்திபேதலித்தவர்கள். அரசியல் சூழல் வெகுவாக - தலைகீழாக மாறியிருக்கிறது.
ரூ. 50,000 ஊதியம் என்பதில்கூட, கார் பயணம், அலுவலகச் செலவுகள் எல்லாமும் சேர்த்துத்தான் என்று விளக்கமளிக்கிறார்கள். போகட்டும், மக்களுக்காக உழைக்க வந்தவர்கள். ஆனால், சிலவற்றை இந்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ரூ. 50,000 ஊதியம் வாங்கும் எம்எல்ஏக்கள் தவறு செய்யக் கூடாது. இன்னும் வேண்டுமானால், தேவையான ஊக்க- உதவித் தொகைகளை கூடுதலாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், எவரிடமும், எந்தக் காலமும்- அன்பளிப்பாகக் கூட எந்தப் பொருளையும், பணத்தையும், உதவியையும் பெற்றுக் கொள்ளாதவர்களாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும்.
அவ்வாறு பெறுபவர்களை கையும்களவுமாகப் பிடிக்கும் இன்னொரு காவல் துறைப் பிரிவையும் முதல்வர் உருவாக்க வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இல்லாத வகையில், அந்தப் பிரிவுக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
நேர்மையான மக்கள் பிரதிநிதிகளாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ் ஊதிய உயர்வை அங்கீகரிக்கலாம். ஆனால், எல்லா வகையிலும்- எம்எல்ஏக்களுக்கு இலவச வீட்டுமனை என்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.
தொகுதியின், தொகுதி மக்களின் பிரதிநிதியான எம்எல்ஏ, சென்னையில் இடம் கிடைத்துச் சென்றுவிட்டால்? மக்களை விட்டு அவர் விலகி வெகுதொலைவு சென்றுவிடுகிறாரே? அப்புறம் இன்னொன்றையும் செய்யலாம், எம்எல்ஏக்களிடம் மனுக் கொடுக்க சென்னை செல்பவர்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை, தள்ளுபடி விலையில் ரயில் பயண அட்டைகள்...
அடுத்து, எம்எல்ஏக்கள் ஒன்றும் நிரந்தரமானவர்கள் அல்லர். ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே ராஜிநாமா செய்பவர்கள் அதிகரித்து வருவதும், இடைத் தேர்தலின்போது மீண்டும் அவர்களுக்கு போட்டியிட இடம் கிடைக்காததும் தற்போதைய அரசியலில் இயல்பான ஒன்றாகி வருகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது அனைத்துக் கட்சிகளிலும் இப்போது மாறியிருக்கும் வரவேற்கத்தக்க அரசியல் போக்கு.
அப்படியானால், சில பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து கணிசமான எண்ணிக்கையிலான அரசியல்வாதிகளுக்கு "அதிகாரப்பூர்வமாகவே' சென்னையிலும் சில வீடுகள், தனி மாவட்டம்(!?), போலீஸôருக்கு இருப்பதைப் போல தனி ரேஷன் விநியோக முறை, தனியாக குறைதீர் ஆணையம்...
பிறகு, தேர்தலின்போது மட்டும் உள்ளூரில், தொகுதிக்குள் முகாம்- தனி அலுவலகம், சொகுசான வீடு. இப்படியான அக- புற மாற்றங்கள் விளைவுகள் தமிழகத்தில் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.
மக்களின் வாழ்க்கைத் தரத்தில், வாழ்வியல் சூழலில் எந்த மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படாது. இன்னமும், இன்னமும் கீழே இறங்கிச் செல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம்.
Tuesday, August 11, 2009
தெற்காசிய நாடுகள் நடத்திய ஆட்கடத்தல்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளரும், தலைமைச் செயலருமான செல்வராசா பத்மநாதன் மலேசிய, சிறிலங்க அரசுகளின் உளவுப் பிரிவுகளின் ‘கூட்டு நடவடிக்கை’யில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, அதனை அழிப்பதாகக் கூறி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்தொழித்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு தெற்காசிய நாடுகள் வழங்கிவரும் கண்மூடித்தனமான ஆதரவின் மற்றுமொறு வெளிப்பாடே இந்த ஆள் கடத்தல் நடவடிக்கையாகும்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகத் தான் மேற்கொண்ட இனப் படுகொலையை வெளிப்படுத்திய பத்திரிக்கையாளர்களையே வெள்ளை வேன்களில் கடத்திப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவின் ‘ஜனநாயக அரசு’, தனது கடத்தல் ஆற்றலை முதல் முறையாக இலங்கைக்கு வெளியே நடத்தியுள்ளது என்பதைத் தவிர அதன் சட்டத்திற்குப் புறம்பான இந்த நடவடிக்கையில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
ஆனால் இதற்கு மலேசிய அரசும், செல்வராசா பத்மநாதன் கடத்தப்பட்டதற்கு ஒத்துழைத்ததாகக் கூறி சிறிலங்க அயலுறவு அமைச்சர் கேகலிய ரம்புக்வெலா பெயர் குறிப்பிடாமல் நன்றி தெரிவித்த மற்ற தெற்காசிய நாடுகளின் ‘ஒத்துழைப்பு’தான் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
ஒரு நாட்டிலோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட நாடுகளிலோ சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டிருக்கும் ஒருவரைக் கைது செய்ய பல்வேறு ஒப்புக் கொள்ளப்பட்ட சர்வதேச சட்ட நடைமுறைகள் உள்ளன. அதன்படி, சர்வதேச காவல் துறையின் (இண்டர்போல்) வாயிலாக எச்சரிக்கை அறிவிக்கை (Red corner notice) விடுக்கப்பட்டு அதன் மூலம் உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று அப்படிப்பட்ட நபரை கைது செய்யும் சட்ட நடைமுறை உள்ளது.
அவ்வாறு இண்டர்போல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகள் மீதான தங்கள் முடிவை அரசுகள் மாற்றிக் கொண்டதும் நடந்துள்ளது (உதாரணத்திற்கு போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கியக் குற்றிவாளி ஒட்டோவியோ குட்ரோக்கி மீது இந்திய அரசின் வற்புறுத்தலால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிக்கை பிறகு இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது).
இண்டர்போல் அறிவிக்கையின்படி கைது செய்யப்படும் நபரை நாடு கடத்துவதற்கும், உலக நாடுகளுக்கு இடையிலான குற்றவாளிகள் பரிமாற்ற (Extradition Treaty) உடன்படிக்கை செய்துகொள்ளும் வழமையும் உள்ளது.
அப்படிப்பட்ட குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாத நிலையில் அந்த நாட்டின் நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்ட நபரை தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்லக் கோரி சம்பந்தப்பட்ட நாட்டின் சார்பாக வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற ஒப்புதலோடு நாடு கடத்தப்பட்டதும் நடந்துள்ளது.
செல்வராசா பத்மநாதனை கடத்த உதவிய மலேசிய நாட்டில்தான் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஒட்டோவியோ குட்ரோக்கி பதுங்கியிருந்தபோது, அவரை இந்தியாவிற்கு கொண்டுவர மலேசிய நீதிமன்றத்தில் இந்தியாவின் மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) மனு செய்து வாதிட்டது. ஆனால், அவருக்கு எதிராக குற்றச்சாற்றிற்கு பலமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த மறுத்தது மலேசிய நீதிமன்றம். மேல் முறையீட்டிலும் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு கிட்டவில்லை.
மற்றொரு உதாரணம்: 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக வழக்குத் தொடரப்பட்ட அபு சலீம். அபு சலீமிற்கு எதிராக சர்வதேச காவல் துறையின் மூலம் எச்சரிக்கை அறிவிக்கை செய்தது மத்திய புலனாய்வுக் கழகம். தனது காதலியான நடிகை மோனிகா பேடியுடன் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்தபோது சர்வதேசக் காவல் துறையால் அபு சலீமும், மோனிகா பேடியும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் உடனடியாக விமானத்தில் ஏற்றி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவில்லை போர்ச்சுகல் அரசு. சர்வதேசக் காவல் துறையும் அப்படிப்பட்ட ‘ரகசிய வேலைகளில்’ ஈடுபடுவதும் இல்லை. இருவரையும் லிஸ்பன் நீதிம்ன்றத்தில் நிறுத்தி நீதிமன்றக் காவலில் வைத்தது போர்ச்சுகல் அரசு.
அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சட்ட ரீதியாக கடும் முயற்சிக்குப் பின்னரே இந்தியாவிற்கு கொண்டு வந்தது ம.பு.க. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சலீமிற்குத் தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை ‘மிகச் சிரமப்பட்டு’க் கொண்டுவந்து தாக்கல் செய்த பின்னரே சில நிபந்தனைகளுடன் சலீமை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சலீம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும் அவருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்றும், விசாரணை நடத்தும் போது சித்ரவதைக்கு ஆட்படுத்தக் கூடாது என்றும் இந்தியா சார்பில் ஒப்புதல் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே சலீமை நாடு கடத்த லிஸ்பன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இப்படி சர்வதேச சட்டங்களும், உடன்படிக்கைகளும் அது சார்ந்த நடைமுறைகளும் உள்ள இன்றைய உலகில், 257 பேர் கொல்லப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட ஒரு தாதாவை நாடு கடத்தவே ஒப்புதல் வாக்குமூலங்களை தாக்கல் செய்து சர்வதேச அளவிலான சட்டப் பூர்வமான வழிமுறைகளை கடைபிடிக்கும் இன்றைய உலகில், ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பொறுப்பாளரை இரண்டு அரசுகள் - மற்ற தெற்காசிய அரசுகளின் உதவியோடு - கடத்திச் செல்கின்றன என்றால் சர்வதேச நீதிமுறைகள் எதற்காக?
செல்வராசா பத்மநாதனுக்கு எதிராக சர்வதேசக் காவல் துறையின் எச்சரிக்கை அறிவிக்க இருக்கின்றதென்றால், அவரை மலேசிய நீதிமன்றத்தில் நிறுத்தி, சட்ட ரீதியாக இலங்கைக்கு கொண்டு வந்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. ஏனென்றால் அவர் மீது கூறப்படும் குற்றச் சாற்றுகளை நிரூபிக்கக் கூடிய எந்த ஆதாரமும் இல்லை. அதனால் கொள்ளைக் கும்பல்களும், கடத்தல் பேர்வழிகளும் செய்வதைப் போல, சற்றும் வெட்கமின்றி இரு அரசுகளின் அயல் புலனாய்வு அமைப்புகளும் இணைந்து (இது மலேசிய காவல் துறைக்குக் கூட தெரிவிக்காமல் நடத்தப்பட்டதாகத் தகவல்) ஆள் கடத்தல் செய்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அந்த இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, பல்வேறு நாடுகளுடன் அரசு ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டே செல்வராசா பத்மநாதன் செயல்பட்டு வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் தலைமறைவாக இருந்து செயல்படாமல், வெளிப்படையாகவே செயல்பட்டு வந்துள்ளார்.
பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இறுதிக் கட்டப் போரின்போது, தங்கள் மக்களைக் காக்க சரணடைய விடுதலைப் புலிகள் முடிவு செய்தபோது, அதற்கான நடைமுறைகளில் மனித உரிமை அமைப்புகளோடும், அரசுகளோடும் தொடர்பு கொண்டு வெளிப்படையாக பத்மநாதன் செயல்பட்டார்.
அப்போதெல்லாம் சர்வதேசக் காவற்படைக்குத் தெரிவித்து கைது செய்திருக்கலாமே? சட்டத்திற்குப் புறம்பாக கடத்திக் கொண்டுவந்தப் பிறகும், அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணைக்கு எடுக்காமல் மறைவிடத்திற்குக் கொண்டு சென்று விசாரிப்பதேன்.
ஏனென்றால், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட வேண்டும் என்பதே! அதைத்தான் ஒளிவு மறைவு ஏதுமின்றி “இனி விடுதலைப் புலிகள் இயக்கம் தலையெடுக்கவே முடியாது” என்று பத்மநாதன் கைது குறித்துப் பேசியுள்ள கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார்.
“பிரபாகரனையும், அவருடைய தளபதிகளையும் பூண்டோடு அழித்த பிறகும், அயல் நாடுகளில் இருந்து செயல்படும் அரசை அறிவிக்க பத்மநாதன் தயங்கவில்லை. அவர் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் துளிர்விடும் வாய்ப்பு இருந்தது. இப்போது அதுவும் பொசுக்கப்பட்டுவிட்டது” என்று சண்டே அப்சர்வருக்கு அளித்த பேட்டியில் சிங்கள பெளத்த மேலாதிக்க வெறியுடன் கூறியுள்ளார் கோத்தபய ராஜபக்ச.
சம உரிமை கோரி ஈழத் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி கொச்சைபடுத்தி, அதனை ஒழித்துக் கட்டுவதாகக் கூறி, நிராயுதபாணியாக நின்ற ஐம்பதினாயிரம் தமிழர்களை கொன்று குவித்து ஒரு மாபெரும் இனப் படுகொலை நடத்தி முடித்த அரச பயங்கரவாத சிங்கள பெளத்த மேலாதிக்க அரசின் நடவடிக்கைகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் தெற்காசிய அரசுகள், சர்வதேச சட்டங்களையும், மனித உரிமைகளையும் புறந்தள்ளிவிட்டு மேற்கொண்டுள்ள இந்தக் கடத்தல் நடவடிக்கையை ஐ.நா.வும், சர்வதேச பொது மன்னிப்புச் சபையும் கண்டிக்க வேண்டும்.
தமிழர்களும் எங்கள் நாட்டு மக்கள்தான் என்று பேட்டியளித்துக் கொண்டு, முகாம்களில் முள் வேலிகளில் அடைத்து வைத்து 3 இலட்சம் தமிழர்களை மெல்ல மெல்ல கொல்லும் ஒரு பயங்கரவாத அரசின் கோர முகம் இந்த கடத்தல் நடவடிக்கை.
செல்வராசா பத்மநாதன் என்ற ஒரு தமிழனின் சுய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும், உயிருக்கும் எந்த ஆபத்து ஏற்பட்டாலும் அது உலகளாவிய அளவில் தமிழனின் சுய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும் விடப்பட்ட சவாலாகவும் அதன் எதிர்வினை சட்டத்தின் மீதும், மானுட மாண்புகளின் மீதும் தமிழருக்கு உள்ள நம்பிக்கையையும், ஐ.நா. போன்ற பன்னாட்டு அமைப்புகளின் மீதான நம்பிக்கையையும் குறைத்துவிடும் என்பதை உலக நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
செல்வராசா பத்மநாதனை ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய ஒரு அரசியல் தலைவராகவே கருதி சட்டத்திற்கு உட்பட்டு நடத்துவதை உலக நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
சர்வதேச சட்டங்களை புறந்தள்ளிவிட்டு சிறிலங்காவும், மலேசியாவும் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. விளக்கம் கோர வேண்டும். இன்று தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சிறிலங்கா, மலேசியா போன்ற தமிழர் விரோத அரசுகள் செய்யும் நடவடிக்கை அதற்குரிய எதிர்வினையை உண்டாக்கும் என்பதை புரிந்து கொண்டு உலக நாடுகளும், ஐ.நா.வும் செயல்பட வேண்டும்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, அதனை அழிப்பதாகக் கூறி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்தொழித்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு தெற்காசிய நாடுகள் வழங்கிவரும் கண்மூடித்தனமான ஆதரவின் மற்றுமொறு வெளிப்பாடே இந்த ஆள் கடத்தல் நடவடிக்கையாகும்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகத் தான் மேற்கொண்ட இனப் படுகொலையை வெளிப்படுத்திய பத்திரிக்கையாளர்களையே வெள்ளை வேன்களில் கடத்திப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவின் ‘ஜனநாயக அரசு’, தனது கடத்தல் ஆற்றலை முதல் முறையாக இலங்கைக்கு வெளியே நடத்தியுள்ளது என்பதைத் தவிர அதன் சட்டத்திற்குப் புறம்பான இந்த நடவடிக்கையில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
ஆனால் இதற்கு மலேசிய அரசும், செல்வராசா பத்மநாதன் கடத்தப்பட்டதற்கு ஒத்துழைத்ததாகக் கூறி சிறிலங்க அயலுறவு அமைச்சர் கேகலிய ரம்புக்வெலா பெயர் குறிப்பிடாமல் நன்றி தெரிவித்த மற்ற தெற்காசிய நாடுகளின் ‘ஒத்துழைப்பு’தான் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
ஒரு நாட்டிலோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட நாடுகளிலோ சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டிருக்கும் ஒருவரைக் கைது செய்ய பல்வேறு ஒப்புக் கொள்ளப்பட்ட சர்வதேச சட்ட நடைமுறைகள் உள்ளன. அதன்படி, சர்வதேச காவல் துறையின் (இண்டர்போல்) வாயிலாக எச்சரிக்கை அறிவிக்கை (Red corner notice) விடுக்கப்பட்டு அதன் மூலம் உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று அப்படிப்பட்ட நபரை கைது செய்யும் சட்ட நடைமுறை உள்ளது.
அவ்வாறு இண்டர்போல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகள் மீதான தங்கள் முடிவை அரசுகள் மாற்றிக் கொண்டதும் நடந்துள்ளது (உதாரணத்திற்கு போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கியக் குற்றிவாளி ஒட்டோவியோ குட்ரோக்கி மீது இந்திய அரசின் வற்புறுத்தலால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிக்கை பிறகு இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது).
இண்டர்போல் அறிவிக்கையின்படி கைது செய்யப்படும் நபரை நாடு கடத்துவதற்கும், உலக நாடுகளுக்கு இடையிலான குற்றவாளிகள் பரிமாற்ற (Extradition Treaty) உடன்படிக்கை செய்துகொள்ளும் வழமையும் உள்ளது.
அப்படிப்பட்ட குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாத நிலையில் அந்த நாட்டின் நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்ட நபரை தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்லக் கோரி சம்பந்தப்பட்ட நாட்டின் சார்பாக வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற ஒப்புதலோடு நாடு கடத்தப்பட்டதும் நடந்துள்ளது.
செல்வராசா பத்மநாதனை கடத்த உதவிய மலேசிய நாட்டில்தான் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஒட்டோவியோ குட்ரோக்கி பதுங்கியிருந்தபோது, அவரை இந்தியாவிற்கு கொண்டுவர மலேசிய நீதிமன்றத்தில் இந்தியாவின் மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) மனு செய்து வாதிட்டது. ஆனால், அவருக்கு எதிராக குற்றச்சாற்றிற்கு பலமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த மறுத்தது மலேசிய நீதிமன்றம். மேல் முறையீட்டிலும் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு கிட்டவில்லை.
மற்றொரு உதாரணம்: 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக வழக்குத் தொடரப்பட்ட அபு சலீம். அபு சலீமிற்கு எதிராக சர்வதேச காவல் துறையின் மூலம் எச்சரிக்கை அறிவிக்கை செய்தது மத்திய புலனாய்வுக் கழகம். தனது காதலியான நடிகை மோனிகா பேடியுடன் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்தபோது சர்வதேசக் காவல் துறையால் அபு சலீமும், மோனிகா பேடியும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் உடனடியாக விமானத்தில் ஏற்றி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவில்லை போர்ச்சுகல் அரசு. சர்வதேசக் காவல் துறையும் அப்படிப்பட்ட ‘ரகசிய வேலைகளில்’ ஈடுபடுவதும் இல்லை. இருவரையும் லிஸ்பன் நீதிம்ன்றத்தில் நிறுத்தி நீதிமன்றக் காவலில் வைத்தது போர்ச்சுகல் அரசு.
அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சட்ட ரீதியாக கடும் முயற்சிக்குப் பின்னரே இந்தியாவிற்கு கொண்டு வந்தது ம.பு.க. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சலீமிற்குத் தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை ‘மிகச் சிரமப்பட்டு’க் கொண்டுவந்து தாக்கல் செய்த பின்னரே சில நிபந்தனைகளுடன் சலீமை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சலீம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும் அவருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்றும், விசாரணை நடத்தும் போது சித்ரவதைக்கு ஆட்படுத்தக் கூடாது என்றும் இந்தியா சார்பில் ஒப்புதல் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே சலீமை நாடு கடத்த லிஸ்பன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இப்படி சர்வதேச சட்டங்களும், உடன்படிக்கைகளும் அது சார்ந்த நடைமுறைகளும் உள்ள இன்றைய உலகில், 257 பேர் கொல்லப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட ஒரு தாதாவை நாடு கடத்தவே ஒப்புதல் வாக்குமூலங்களை தாக்கல் செய்து சர்வதேச அளவிலான சட்டப் பூர்வமான வழிமுறைகளை கடைபிடிக்கும் இன்றைய உலகில், ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பொறுப்பாளரை இரண்டு அரசுகள் - மற்ற தெற்காசிய அரசுகளின் உதவியோடு - கடத்திச் செல்கின்றன என்றால் சர்வதேச நீதிமுறைகள் எதற்காக?
செல்வராசா பத்மநாதனுக்கு எதிராக சர்வதேசக் காவல் துறையின் எச்சரிக்கை அறிவிக்க இருக்கின்றதென்றால், அவரை மலேசிய நீதிமன்றத்தில் நிறுத்தி, சட்ட ரீதியாக இலங்கைக்கு கொண்டு வந்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. ஏனென்றால் அவர் மீது கூறப்படும் குற்றச் சாற்றுகளை நிரூபிக்கக் கூடிய எந்த ஆதாரமும் இல்லை. அதனால் கொள்ளைக் கும்பல்களும், கடத்தல் பேர்வழிகளும் செய்வதைப் போல, சற்றும் வெட்கமின்றி இரு அரசுகளின் அயல் புலனாய்வு அமைப்புகளும் இணைந்து (இது மலேசிய காவல் துறைக்குக் கூட தெரிவிக்காமல் நடத்தப்பட்டதாகத் தகவல்) ஆள் கடத்தல் செய்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அந்த இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, பல்வேறு நாடுகளுடன் அரசு ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டே செல்வராசா பத்மநாதன் செயல்பட்டு வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் தலைமறைவாக இருந்து செயல்படாமல், வெளிப்படையாகவே செயல்பட்டு வந்துள்ளார்.
பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இறுதிக் கட்டப் போரின்போது, தங்கள் மக்களைக் காக்க சரணடைய விடுதலைப் புலிகள் முடிவு செய்தபோது, அதற்கான நடைமுறைகளில் மனித உரிமை அமைப்புகளோடும், அரசுகளோடும் தொடர்பு கொண்டு வெளிப்படையாக பத்மநாதன் செயல்பட்டார்.
அப்போதெல்லாம் சர்வதேசக் காவற்படைக்குத் தெரிவித்து கைது செய்திருக்கலாமே? சட்டத்திற்குப் புறம்பாக கடத்திக் கொண்டுவந்தப் பிறகும், அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணைக்கு எடுக்காமல் மறைவிடத்திற்குக் கொண்டு சென்று விசாரிப்பதேன்.
ஏனென்றால், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட வேண்டும் என்பதே! அதைத்தான் ஒளிவு மறைவு ஏதுமின்றி “இனி விடுதலைப் புலிகள் இயக்கம் தலையெடுக்கவே முடியாது” என்று பத்மநாதன் கைது குறித்துப் பேசியுள்ள கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார்.
“பிரபாகரனையும், அவருடைய தளபதிகளையும் பூண்டோடு அழித்த பிறகும், அயல் நாடுகளில் இருந்து செயல்படும் அரசை அறிவிக்க பத்மநாதன் தயங்கவில்லை. அவர் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் துளிர்விடும் வாய்ப்பு இருந்தது. இப்போது அதுவும் பொசுக்கப்பட்டுவிட்டது” என்று சண்டே அப்சர்வருக்கு அளித்த பேட்டியில் சிங்கள பெளத்த மேலாதிக்க வெறியுடன் கூறியுள்ளார் கோத்தபய ராஜபக்ச.
சம உரிமை கோரி ஈழத் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி கொச்சைபடுத்தி, அதனை ஒழித்துக் கட்டுவதாகக் கூறி, நிராயுதபாணியாக நின்ற ஐம்பதினாயிரம் தமிழர்களை கொன்று குவித்து ஒரு மாபெரும் இனப் படுகொலை நடத்தி முடித்த அரச பயங்கரவாத சிங்கள பெளத்த மேலாதிக்க அரசின் நடவடிக்கைகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் தெற்காசிய அரசுகள், சர்வதேச சட்டங்களையும், மனித உரிமைகளையும் புறந்தள்ளிவிட்டு மேற்கொண்டுள்ள இந்தக் கடத்தல் நடவடிக்கையை ஐ.நா.வும், சர்வதேச பொது மன்னிப்புச் சபையும் கண்டிக்க வேண்டும்.
தமிழர்களும் எங்கள் நாட்டு மக்கள்தான் என்று பேட்டியளித்துக் கொண்டு, முகாம்களில் முள் வேலிகளில் அடைத்து வைத்து 3 இலட்சம் தமிழர்களை மெல்ல மெல்ல கொல்லும் ஒரு பயங்கரவாத அரசின் கோர முகம் இந்த கடத்தல் நடவடிக்கை.
செல்வராசா பத்மநாதன் என்ற ஒரு தமிழனின் சுய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும், உயிருக்கும் எந்த ஆபத்து ஏற்பட்டாலும் அது உலகளாவிய அளவில் தமிழனின் சுய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும் விடப்பட்ட சவாலாகவும் அதன் எதிர்வினை சட்டத்தின் மீதும், மானுட மாண்புகளின் மீதும் தமிழருக்கு உள்ள நம்பிக்கையையும், ஐ.நா. போன்ற பன்னாட்டு அமைப்புகளின் மீதான நம்பிக்கையையும் குறைத்துவிடும் என்பதை உலக நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
செல்வராசா பத்மநாதனை ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய ஒரு அரசியல் தலைவராகவே கருதி சட்டத்திற்கு உட்பட்டு நடத்துவதை உலக நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
சர்வதேச சட்டங்களை புறந்தள்ளிவிட்டு சிறிலங்காவும், மலேசியாவும் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. விளக்கம் கோர வேண்டும். இன்று தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சிறிலங்கா, மலேசியா போன்ற தமிழர் விரோத அரசுகள் செய்யும் நடவடிக்கை அதற்குரிய எதிர்வினையை உண்டாக்கும் என்பதை புரிந்து கொண்டு உலக நாடுகளும், ஐ.நா.வும் செயல்பட வேண்டும்.
Saturday, August 1, 2009
மசாஜ் செய்யும் கிளப்புகள் நடத்துவதை தடுக்க முடியாது - உயர்நீதிமன்றம்
சென்னையில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்யும் கிளப்புகள் நடத்துவதை காவல்துறை தடுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்புளுவன்ஸ் லைப் ஸ்டைல் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நரேஷ்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் ஓட்டலுக்கு அருகே `இன்புளுவன்ஸ் ஸ்பா' என்ற பெயரில் நாங்கள் மசாஜ் கிளப் நடத்தி வருகிறோம். இங்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் என்று இருபாலருக்கும் மசாஜ் செய்யப்படுகிறது. இப்படி ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்வதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. உலகம் முழுவதும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.
எனவே, இதுபோன்ற மசாஜ் பார்லர் நடத்துவதற்கு சட்டப்பூர்வமாக தடை இல்லை. முக்கியமான மருத்துவமனைகளிலும் இதுபோன்ற மசாஜ் செய்யப்படுகிறது. எனவே, எங்கள் நிறுவனத்தை தொடர்ந்து அமைதியாக நடத்துவதில் காவல்துறையினர் தடையிட கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவுக்கு பதில் அளித்து காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவில், மசாஜ் நிலையங்களை நடத்துவதற்கு காவல்துறையினரிடம் சட்டப்படி உரிமம் பெற வேண்டும். பொதுநலனை கருத்தில் கொண்டும், சமூக ஒழுக்கத்திற்காகவும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும் மசாஜ் மையங்களுக்கு சில கட்டுப்பாடுகள் அவசியம்.
மனுதாரர் தனது மசாஜ் கிளப்பில் டீன்ஏஜ் பெண்களை வைத்து மசாஜ் செய்தால் அங்கு வரும் நபர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடலாம். இதுபோன்ற மசாஜ் பார்லர்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி கே.சந்துரு அளித்த தீர்ப்பில், ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் மசாஜ் செய்யும் ஹெல்த் கிளப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டம் எதுவும் இல்லை. சென்னை மாநகர காவல்துறை சட்டத்திலும், இதுபோன்ற மசாஜ் மையங்கள் செயல்படுவதை தடுப்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதிலிருந்து மசாஜ் மையங்கள் செயல்படுவதை தடுக்க காவல்துறைக்கு சட்டப்பூர்வமான உரிமை இல்லை என்பது தெளிவாகிறது. இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் மசாஜ் பார்லர் நடத்தலாம். அதே நேரத்தில் அந்த மசாஜ் மையங்களை ஆய்வு செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தால் சம்பந்தப்பட்ட மசாஜ் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு எந்த தடையும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இன்புளுவன்ஸ் லைப் ஸ்டைல் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நரேஷ்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் ஓட்டலுக்கு அருகே `இன்புளுவன்ஸ் ஸ்பா' என்ற பெயரில் நாங்கள் மசாஜ் கிளப் நடத்தி வருகிறோம். இங்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் என்று இருபாலருக்கும் மசாஜ் செய்யப்படுகிறது. இப்படி ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்வதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. உலகம் முழுவதும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.
எனவே, இதுபோன்ற மசாஜ் பார்லர் நடத்துவதற்கு சட்டப்பூர்வமாக தடை இல்லை. முக்கியமான மருத்துவமனைகளிலும் இதுபோன்ற மசாஜ் செய்யப்படுகிறது. எனவே, எங்கள் நிறுவனத்தை தொடர்ந்து அமைதியாக நடத்துவதில் காவல்துறையினர் தடையிட கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவுக்கு பதில் அளித்து காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவில், மசாஜ் நிலையங்களை நடத்துவதற்கு காவல்துறையினரிடம் சட்டப்படி உரிமம் பெற வேண்டும். பொதுநலனை கருத்தில் கொண்டும், சமூக ஒழுக்கத்திற்காகவும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும் மசாஜ் மையங்களுக்கு சில கட்டுப்பாடுகள் அவசியம்.
மனுதாரர் தனது மசாஜ் கிளப்பில் டீன்ஏஜ் பெண்களை வைத்து மசாஜ் செய்தால் அங்கு வரும் நபர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடலாம். இதுபோன்ற மசாஜ் பார்லர்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி கே.சந்துரு அளித்த தீர்ப்பில், ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் மசாஜ் செய்யும் ஹெல்த் கிளப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டம் எதுவும் இல்லை. சென்னை மாநகர காவல்துறை சட்டத்திலும், இதுபோன்ற மசாஜ் மையங்கள் செயல்படுவதை தடுப்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதிலிருந்து மசாஜ் மையங்கள் செயல்படுவதை தடுக்க காவல்துறைக்கு சட்டப்பூர்வமான உரிமை இல்லை என்பது தெளிவாகிறது. இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் மசாஜ் பார்லர் நடத்தலாம். அதே நேரத்தில் அந்த மசாஜ் மையங்களை ஆய்வு செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தால் சம்பந்தப்பட்ட மசாஜ் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு எந்த தடையும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
Wednesday, July 22, 2009
அடிமைவாழ்வே ஆனந்தமடா
இந்தியாவின் விவசாயப் பாரம்பரியம் சிந்து நதி நாகரிகத்துடன் தொடர்புள்ளது. அண்மைக்காலக் கல்வெட்டு எழுத்தியல் ஆய்வுப்படி அது திராவிட பாரம்பரியம் என்றும் சொல்லப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துநதி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி உணவை உற்பத்தி செய்து, நூலில் நெய்யப்பட்ட உடை தரித்து வாழ்ந்த இந்தியத் திராவிடர்கள் நாகரிக மிதப்பில் வாழ்ந்தபோது, ஐரோப்பிய மனித இனம் காட்டுமிராண்டிகளாகவும், நரமாமிசம் உண்போராகவும் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே தலைசிறந்த நீர்நிர்வாகத்தை இந்திய மன்னர்கள் மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது. ""வெள்ளாளர்'' என்ற சாதிப்பெயர் உண்மையில் ஒரு தொழில்பெயரே. வெள்ளத்தைத் தடுத்து விவசாயம் செய்யக்கூடிய தொழில்நுட்ப விளைவால்தான் மேட்டில் ஓடும் நதியைக் கால்வாய் மூலம் ஒரு ஏரியில் சேமித்து நிறைந்ததும், பள்ளத்தில் உள்ள அடுத்த ஏரிக்கு வடியவிட்டுப் பின் அடுத்த ஏரி, அடுத்த ஏரி என்று ஏரிகளின் சங்கிலிப்பிணைப்பு உருவானது.
உதாரணமாக மதுராந்தகம் ஏரி மிகப்பெரியது. அந்த ஏரிக்கு சுமார் மேற்கு திசை மேட்டுப் பகுதியில் உள்ள 20 ஏரிகள் (சிறியவை) நீர் வழங்குகின்றன. சில ஏரிகள் இயல்பான பள்ளங்கள். சில ஏரிகள் மனிதனால் வெட்டப்பட்டவை. தமிழ்நாட்டில் ஏராளமான ஏரிகள் சோழர்காலம் - பின்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகச் செப்பேடுகள் கூறும். நீர்த்தேக்க வரலாற்றில் கரிகாலன் கட்டிய கல்லணை, தாஜ்மகாலைவிட உயர்வான உலக அதிசயம். வெள்ளநீர்த் தடுப்புக்குக் கொள்ளுமிடம் கொள்ளிடமாவதெல்லாம், கல்லணையின் பழைய கட்டுமானங்களைக் கவனித்தால் புரியும். காவிரி முக்கொம்பில் பிரிந்து, ஸ்ரீரங்கத்தை ஒரு தீவாக்கி கல்லணையில் கலந்து, கொள்ளிடமாகவும் வெண்ணாறாகவும் காவிரி வெள்ளம் திருப்பிவிடப்படுகிறது.
1925 காலகட்டத்தில் காட்டன் துரையால் கல்லணையில் வெண்ணாறிலிருந்து புது ஆறு வெட்டப்பட்டு புதிய டெல்டாப் பகுதி தஞ்சை-ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை-பேராவூரணி-அறந்தாங்கி வட்டங்களில் உருவாகி, தஞ்சை நெற்களஞ்சியம் விரிவானது. ஒரு அகண்ட காவிரி பழைய டெல்டாப் பகுதியான திருவையாறு - சுவாமிமலை - குடந்தை - மயிலாடுதுறை கடந்து பூம்புகாரில் ஒரு சிற்றாறாகிக் கடலில் கலக்கிறது.மேட்டிலிருந்து பள்ளத்திற்கு வரும் நதிநீரை ஆங்காங்கே தேக்கி முழுப்பயனையும் பெற்ற பெருமை இன்று நேற்றல்ல, சங்க காலத்திலிருந்து இன்றும் நீடித்து வருகிறது.
நெல் விளைந்த தஞ்சைத் தரணியில் மக்காச் சோளமும் கரும்பும் ஊடுருவியுள்ளது. நஞ்சையைப் புஞ்சை உயர்த்தித் தென்னை நடவும் செய்கின்றனர். இந்தப் பிரச்னை ஒருபுறம் இருக்கட்டும். நமது பாரம்பரிய நீர் நிர்வாகத்தில் என்ன குறை உள்ளது? இப்போது இந்தியா முழுவதும் ஏ.சி. அறையில் அமர்ந்தபடி விவசாயம் - நீர் நிர்வாகம் செய்யும் மேல்நிலை விஞ்ஞானிகளின் புலம்பல் எதுவெனில் "வாட்டர் ஷெட்'... "வாட்டர் ஷெட்'... "வாட்டர் ஷெட்'. ஆங்கிலத்தில் ‘ரஹற்ங்ழ் நட்ங்க்’ தமிழில் "நீர் வடிமுனை மேம்பாடு'.
இது இந்தியாவுக்கு வந்த கதை தெரியுமா?
1980-களில் வேளாண்மை அமைச்சரகச் செயலாளராக இருந்த ஒரு வேளாண் விஞ்ஞானி அமெரிக்காவில் உள்ள டென்னசி மலைப்பள்ளத்தாக்கைப் பார்வையிட்டபோது அங்குள்ள மலைச்சரிவு வடிகால் மழை சேமிப்புக் கட்டமைப்புகளைக் கவனித்து அதே முறையை இந்தியாவில் அறிமுகம் செய்ய விரும்பினார். விரும்பியதோடு நிற்கவில்லை. செயல்படுத்தியும் விட்டார்.
அமெரிக்காவில் உள்ள புவியியல் - பருவச் சூழ்நிலையில் தொடர்மழைப்பொழிவு உள்ள சூழலுக்கு அது சரி. இந்தியாவில் உள்ள வறட்சி சூழ்நிலைக்கு ஆண்டில் மூன்றுமாதம் மட்டும் சுமார் 100 மணிநேர மழைப்பொழிவுள்ள இடங்களுக்கு இந்தக் கட்டுமானங்கள் பொருந்தாது. எதற்குத்தான் அமெரிக்க மாதிரிகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்கு விவஸ்தையே இல்லை. அமெரிக்கா என்றால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற தப்பெண்ணம் வளர்ந்துவிட்டது. இந்த டென்னசி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு மாதிரிகளை 40 முன்னோடித் திட்டங்களாகத்தான் இந்தியாவில் செயல்படுத்தினார்கள். இத்திட்டங்கள் வெற்றியுடன் செயல்பட்டனவா என்பதை ஓராண்டு முடிவில் மதிப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு மதிப்பீடு செய்யாமலேயே மேலும் 2000 வட்டாரங்களில் உலக வங்கி உதவியுடன் மறு ஆண்டில் செயல்படுத்தினார்கள்.
காலம் கடந்த நிலையில் விவசாய விஞ்ஞானிகள் மறுப்புத் தெரிவித்தாலும், உலக வங்கிப் பணத்தை அபேஸ் செய்யும் வாய்ப்பு போய்விடுமே என்று அரசு அம்மறுப்புகளை நிராகரித்துவிட்டது. இதனால், "வாட்டர் ஷெட்' ஒரு தொழிலாகிவிட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், பஞ்சாயத்துத்தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை / ஆகியவர்கள், இத் தொழிலைச் செய்து வருகிறார்கள். மழைநீரை எந்த அளவு சேமித்தார்கள்?
இதற்கான கட்டுமானச் செலவுக்கு ஏற்ப மழை அறுவடை லாபமா என்ற கேள்விகள் முக்கியமில்லை. இதில் உலக வங்கிப் பணத்தைச் சுடுவதில்தான் தொழில் திறமை உள்ளது. மழைநீர் சேமிப்பு / நீர்வடிப்பகுதி மேம்பாடு போன்ற "வாட்டர் ஷெட்டுகள்' யாவும் அமெரிக்க இறக்குமதி. ஆனால், இதில் நகைப்புக்கு இடமான விஷயம், அமெரிக்கா இந்திய மாதிரியைப் பின்பற்றுவதுதான்.
அமெரிக்காவில் சில பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய மழைநீர் சேமிப்பு நீர் ஆதாரங்களான ஏரி நீர்ப்பாசனத்தின் "வாட்டர் ஷெட்டுகளை' ஆய்வு செய்து, மழை நீர் சேமிப்புக்கு அம்மாதிரிகளைச் சிறந்த உத்திகள் என்று போற்றிக் கண்காட்சிகளாக வைத்துள்ளதுடன், அவற்றைப் பின்பற்றவும் திட்டமிட்டுள்ளனர். உதாரணத்திற்கு டெக்சாஸில் உள்ள ஏ.எம். பல்கலைக்கழகத்தில் இம்மாதிரிகளைப் பார்க்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பொதுப்பணித்துறை - வேளாண் பொறியியல் துறை டென்னசிப் பள்ளத்தாக்கு மாதிரியைச் சிறப்பாகக் கருதுகிறது. அமெரிக்காவில் உள்ள நிபுணர்கள் நமது மாதிரிகளை உயர்வானது என்று கூறியும், நமக்குப் புத்தி வரவில்லை. நமது பாரம்பரிய நீர்ப்பிடிப்பு உத்திகளை நமது பொறியாளர்களோ, விஞ்ஞானிகளோ ஒரு நுண்ணறிவுடனும் அக்கறையுடனும் கவனிப்பதில்லை. அப்படியெல்லாம் கவனித்தால் நம்மவர்களுக்கு அமெரிக்கப் பயணங்கள் ஓசியில் கிட்டுமா? "வாட்டர் கேட்டை' நினைத்துக் கொண்டு அமெரிக்காவின் "வாட்டர் ஷெட்டு மாதிரிகளை' இறக்குமதி செய்வதன் மூலம், இந்திய விஞ்ஞானிகளும், இந்தியப் பொறியாளர்களும் வாழ்க்கையில் வெளிச்சம் பெறுகிறார்கள். அதுபோதுமே! இது ஒருபக்கம். நவீன நீர்க்கொள்ளையர்கள் யார்? அவர்களிடமிருந்து இவர்களுக்குப் பங்கு வருகிறதா? இந்தக் கேள்விகளுக்கு உலக வங்கியின் வாட்டர் ஷெட் திட்ட ஒருங்கிணைப்பாளர்களால்தான் பதில் கூற முடியும். இருப்பினும் உலக வங்கியின் வடிமுனைப் பகுதிப் பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து, நிஜமாக என்னதான் நடக்கிறது என்று கண்டறியும் பணியை மேற்கொண்டுவரும் "ஸ்வராஜ்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் குமாரராஜாவை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரும் ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து விலகியவர் என்ற முறையில், அவர் கூறிய செய்திகள் திடுக்கிட வைத்தன. "சேது சமுத்திரத் திட்டத்தில் தூர்வாரிய மண்ணை எவ்வாறு அளவிட முடியாதோ அதுபோலவேதான் இதுவும்' என்ற பீடிகையுடன் அவர் கூறியபோது, ""செலவு செய்ததாகக் கணக்கு இருக்கும். ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போட்டு ஒரு கணக்கு. குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டு ஒரு கணக்கு'' என்று பேச்சைத் தொடங்கினார்.
"தேனெடுத்தவன் புறங்கையை நக்குவான்'. எதில்தான் கையாடல் இல்லை? அதைவிடுங்கள். ஏன் இந்த உலக வங்கி, இவ்வளவு ஊழல் இருந்தும்கூட, விடாப்பிடியாக வாட்டர் ஷெட்டைப் பிடித்துக் கொள்வது ஏன்? இதற்கு நான் பெற்ற பதில்தான் இக்கட்டுரைத் தலைப்பு.
இந்த வாட்டர்ஷெட் அல்லது நீர்வடிப்பகுதி மேம்பாடு என்பதும் மழைநீர் சேமிப்பு என்பதும் ஒன்றுதான். குடிநீர்த்திட்டம் என்றாலும் சரி கூடுதல் பாசன வசதி என்றாலும் சரி போர் போடுவது அதாவது ஆழ்துளைக் குழாய்களை இறக்குவது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு ஆழ்துளைக் குழாய்கள் அமைப்பதை நிறுத்த வேண்டும், மேல்மட்ட நீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் கொள்கை. உலக வங்கியின் கொள்கை அதுவல்ல. பாசனப் பகுதியை விஸ்தரித்தல். ஒருபோகம் விளையும் நிலத்தில் பாசன வசதியளித்து இருபோகமாகவோ, மூன்று போகமாகவோ மாற்றுவது. நீர்வடி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களில் கொள்ளளவு உயர்ந்த பின்னர் ஆழ்துளைக்குழாய் இறக்கும் பணியும் அதிகமாகும்போதுதான் பாசன நிலம் கூடுதலாகும்.
பாசன நிலம் கூடும்போது உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்யாமல், வர்த்தக நிறுவனங்கள் விரும்பும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்து, பன்னாட்டு விதை நிறுவனங்களையும் ஏற்றுமதியையும் உயர்த்துவது மறைமுகமான நீர்திருடல். நேரடியான நீர்த்திருட்டு என்பது குடிநீர்த்திட்டம் என்ற பெயரில் பெப்சி, கோகோ கோலா போன்ற மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு வாட்டர் அளிப்பதும் நவீனமான அல்லது நாகரிகமான நீர்க் கொள்ளை.
பெரிய அளவில் பெப்சி, கோகோ கோலா கம்பெனிகளின் அக்வாஃபினா, கின்லே போன்றவை ஒருபுறம். உள்ளூரிலேயே மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் போன்றவையும் ஆங்காங்கே மினரல் வாட்டர் உற்பத்தித் தொழில் நிலையங்களை அமைத்துள்ளனர். பல சுதேசித் தனியார் நிலையங்களும் மினரல் வாட்டர் உற்பத்தி - விற்பனையில் இறங்கிவிட்டனர். அரசாங்கக் குழாய் வழிவரும் குடிநீர் பெரும்பாலும் குளியலுக்கும், துணி துவைக்கவும் பயனாகிறது. நான் வசிக்கும் சின்னாளப்பட்டி போன்ற சின்ன ஊரில்கூட குடிநீர் வியாபாரம் சக்கைபோடு போடுகிறது. 1 லிட்டர் புட்டி முதல் 25 லிட்டர் ரிஃபில் வரை நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. ஆகவே உலக வங்கியின் மூலதனம் ""வாட்டர் ஷெட்'' என்ற பெயரில் மினரல் வாட்டர் விற்பனைக்கு ஊக்கம் அளிப்பதாயுள்ளது.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று பாரதியார் கேட்டால், "1 லிட்டர் அக்வாஃபினா மினரல் வாட்டர் குடித்தால் தணிந்துவிடும்' என்கிறது உலக வங்கி. ""நமது தேசபக்தியைச் சற்று மூட்டைகட்டி ஓரமாக வைத்துவிட்டு, "எல்லாம் உலகமயமடா' என்ற தாரக மந்திரத்தை தினம் நூறு தடவையாவது கோஷமிட்டு, அமெரிக்காவை அணைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்று நமது பிரதமர் கூறுகிறார். பாரதியார் புத்தகத்தைக் குப்பையில் போட்டுவிட்டு, 'அடிமைவாழ்வே ஆனந்தமடா' என்று நாம் ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்.
உலகிலேயே தலைசிறந்த நீர்நிர்வாகத்தை இந்திய மன்னர்கள் மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது. ""வெள்ளாளர்'' என்ற சாதிப்பெயர் உண்மையில் ஒரு தொழில்பெயரே. வெள்ளத்தைத் தடுத்து விவசாயம் செய்யக்கூடிய தொழில்நுட்ப விளைவால்தான் மேட்டில் ஓடும் நதியைக் கால்வாய் மூலம் ஒரு ஏரியில் சேமித்து நிறைந்ததும், பள்ளத்தில் உள்ள அடுத்த ஏரிக்கு வடியவிட்டுப் பின் அடுத்த ஏரி, அடுத்த ஏரி என்று ஏரிகளின் சங்கிலிப்பிணைப்பு உருவானது.
உதாரணமாக மதுராந்தகம் ஏரி மிகப்பெரியது. அந்த ஏரிக்கு சுமார் மேற்கு திசை மேட்டுப் பகுதியில் உள்ள 20 ஏரிகள் (சிறியவை) நீர் வழங்குகின்றன. சில ஏரிகள் இயல்பான பள்ளங்கள். சில ஏரிகள் மனிதனால் வெட்டப்பட்டவை. தமிழ்நாட்டில் ஏராளமான ஏரிகள் சோழர்காலம் - பின்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகச் செப்பேடுகள் கூறும். நீர்த்தேக்க வரலாற்றில் கரிகாலன் கட்டிய கல்லணை, தாஜ்மகாலைவிட உயர்வான உலக அதிசயம். வெள்ளநீர்த் தடுப்புக்குக் கொள்ளுமிடம் கொள்ளிடமாவதெல்லாம், கல்லணையின் பழைய கட்டுமானங்களைக் கவனித்தால் புரியும். காவிரி முக்கொம்பில் பிரிந்து, ஸ்ரீரங்கத்தை ஒரு தீவாக்கி கல்லணையில் கலந்து, கொள்ளிடமாகவும் வெண்ணாறாகவும் காவிரி வெள்ளம் திருப்பிவிடப்படுகிறது.
1925 காலகட்டத்தில் காட்டன் துரையால் கல்லணையில் வெண்ணாறிலிருந்து புது ஆறு வெட்டப்பட்டு புதிய டெல்டாப் பகுதி தஞ்சை-ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை-பேராவூரணி-அறந்தாங்கி வட்டங்களில் உருவாகி, தஞ்சை நெற்களஞ்சியம் விரிவானது. ஒரு அகண்ட காவிரி பழைய டெல்டாப் பகுதியான திருவையாறு - சுவாமிமலை - குடந்தை - மயிலாடுதுறை கடந்து பூம்புகாரில் ஒரு சிற்றாறாகிக் கடலில் கலக்கிறது.மேட்டிலிருந்து பள்ளத்திற்கு வரும் நதிநீரை ஆங்காங்கே தேக்கி முழுப்பயனையும் பெற்ற பெருமை இன்று நேற்றல்ல, சங்க காலத்திலிருந்து இன்றும் நீடித்து வருகிறது.
நெல் விளைந்த தஞ்சைத் தரணியில் மக்காச் சோளமும் கரும்பும் ஊடுருவியுள்ளது. நஞ்சையைப் புஞ்சை உயர்த்தித் தென்னை நடவும் செய்கின்றனர். இந்தப் பிரச்னை ஒருபுறம் இருக்கட்டும். நமது பாரம்பரிய நீர் நிர்வாகத்தில் என்ன குறை உள்ளது? இப்போது இந்தியா முழுவதும் ஏ.சி. அறையில் அமர்ந்தபடி விவசாயம் - நீர் நிர்வாகம் செய்யும் மேல்நிலை விஞ்ஞானிகளின் புலம்பல் எதுவெனில் "வாட்டர் ஷெட்'... "வாட்டர் ஷெட்'... "வாட்டர் ஷெட்'. ஆங்கிலத்தில் ‘ரஹற்ங்ழ் நட்ங்க்’ தமிழில் "நீர் வடிமுனை மேம்பாடு'.
இது இந்தியாவுக்கு வந்த கதை தெரியுமா?
1980-களில் வேளாண்மை அமைச்சரகச் செயலாளராக இருந்த ஒரு வேளாண் விஞ்ஞானி அமெரிக்காவில் உள்ள டென்னசி மலைப்பள்ளத்தாக்கைப் பார்வையிட்டபோது அங்குள்ள மலைச்சரிவு வடிகால் மழை சேமிப்புக் கட்டமைப்புகளைக் கவனித்து அதே முறையை இந்தியாவில் அறிமுகம் செய்ய விரும்பினார். விரும்பியதோடு நிற்கவில்லை. செயல்படுத்தியும் விட்டார்.
அமெரிக்காவில் உள்ள புவியியல் - பருவச் சூழ்நிலையில் தொடர்மழைப்பொழிவு உள்ள சூழலுக்கு அது சரி. இந்தியாவில் உள்ள வறட்சி சூழ்நிலைக்கு ஆண்டில் மூன்றுமாதம் மட்டும் சுமார் 100 மணிநேர மழைப்பொழிவுள்ள இடங்களுக்கு இந்தக் கட்டுமானங்கள் பொருந்தாது. எதற்குத்தான் அமெரிக்க மாதிரிகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்கு விவஸ்தையே இல்லை. அமெரிக்கா என்றால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற தப்பெண்ணம் வளர்ந்துவிட்டது. இந்த டென்னசி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு மாதிரிகளை 40 முன்னோடித் திட்டங்களாகத்தான் இந்தியாவில் செயல்படுத்தினார்கள். இத்திட்டங்கள் வெற்றியுடன் செயல்பட்டனவா என்பதை ஓராண்டு முடிவில் மதிப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு மதிப்பீடு செய்யாமலேயே மேலும் 2000 வட்டாரங்களில் உலக வங்கி உதவியுடன் மறு ஆண்டில் செயல்படுத்தினார்கள்.
காலம் கடந்த நிலையில் விவசாய விஞ்ஞானிகள் மறுப்புத் தெரிவித்தாலும், உலக வங்கிப் பணத்தை அபேஸ் செய்யும் வாய்ப்பு போய்விடுமே என்று அரசு அம்மறுப்புகளை நிராகரித்துவிட்டது. இதனால், "வாட்டர் ஷெட்' ஒரு தொழிலாகிவிட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், பஞ்சாயத்துத்தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை / ஆகியவர்கள், இத் தொழிலைச் செய்து வருகிறார்கள். மழைநீரை எந்த அளவு சேமித்தார்கள்?
இதற்கான கட்டுமானச் செலவுக்கு ஏற்ப மழை அறுவடை லாபமா என்ற கேள்விகள் முக்கியமில்லை. இதில் உலக வங்கிப் பணத்தைச் சுடுவதில்தான் தொழில் திறமை உள்ளது. மழைநீர் சேமிப்பு / நீர்வடிப்பகுதி மேம்பாடு போன்ற "வாட்டர் ஷெட்டுகள்' யாவும் அமெரிக்க இறக்குமதி. ஆனால், இதில் நகைப்புக்கு இடமான விஷயம், அமெரிக்கா இந்திய மாதிரியைப் பின்பற்றுவதுதான்.
அமெரிக்காவில் சில பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய மழைநீர் சேமிப்பு நீர் ஆதாரங்களான ஏரி நீர்ப்பாசனத்தின் "வாட்டர் ஷெட்டுகளை' ஆய்வு செய்து, மழை நீர் சேமிப்புக்கு அம்மாதிரிகளைச் சிறந்த உத்திகள் என்று போற்றிக் கண்காட்சிகளாக வைத்துள்ளதுடன், அவற்றைப் பின்பற்றவும் திட்டமிட்டுள்ளனர். உதாரணத்திற்கு டெக்சாஸில் உள்ள ஏ.எம். பல்கலைக்கழகத்தில் இம்மாதிரிகளைப் பார்க்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பொதுப்பணித்துறை - வேளாண் பொறியியல் துறை டென்னசிப் பள்ளத்தாக்கு மாதிரியைச் சிறப்பாகக் கருதுகிறது. அமெரிக்காவில் உள்ள நிபுணர்கள் நமது மாதிரிகளை உயர்வானது என்று கூறியும், நமக்குப் புத்தி வரவில்லை. நமது பாரம்பரிய நீர்ப்பிடிப்பு உத்திகளை நமது பொறியாளர்களோ, விஞ்ஞானிகளோ ஒரு நுண்ணறிவுடனும் அக்கறையுடனும் கவனிப்பதில்லை. அப்படியெல்லாம் கவனித்தால் நம்மவர்களுக்கு அமெரிக்கப் பயணங்கள் ஓசியில் கிட்டுமா? "வாட்டர் கேட்டை' நினைத்துக் கொண்டு அமெரிக்காவின் "வாட்டர் ஷெட்டு மாதிரிகளை' இறக்குமதி செய்வதன் மூலம், இந்திய விஞ்ஞானிகளும், இந்தியப் பொறியாளர்களும் வாழ்க்கையில் வெளிச்சம் பெறுகிறார்கள். அதுபோதுமே! இது ஒருபக்கம். நவீன நீர்க்கொள்ளையர்கள் யார்? அவர்களிடமிருந்து இவர்களுக்குப் பங்கு வருகிறதா? இந்தக் கேள்விகளுக்கு உலக வங்கியின் வாட்டர் ஷெட் திட்ட ஒருங்கிணைப்பாளர்களால்தான் பதில் கூற முடியும். இருப்பினும் உலக வங்கியின் வடிமுனைப் பகுதிப் பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து, நிஜமாக என்னதான் நடக்கிறது என்று கண்டறியும் பணியை மேற்கொண்டுவரும் "ஸ்வராஜ்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் குமாரராஜாவை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரும் ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து விலகியவர் என்ற முறையில், அவர் கூறிய செய்திகள் திடுக்கிட வைத்தன. "சேது சமுத்திரத் திட்டத்தில் தூர்வாரிய மண்ணை எவ்வாறு அளவிட முடியாதோ அதுபோலவேதான் இதுவும்' என்ற பீடிகையுடன் அவர் கூறியபோது, ""செலவு செய்ததாகக் கணக்கு இருக்கும். ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போட்டு ஒரு கணக்கு. குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டு ஒரு கணக்கு'' என்று பேச்சைத் தொடங்கினார்.
"தேனெடுத்தவன் புறங்கையை நக்குவான்'. எதில்தான் கையாடல் இல்லை? அதைவிடுங்கள். ஏன் இந்த உலக வங்கி, இவ்வளவு ஊழல் இருந்தும்கூட, விடாப்பிடியாக வாட்டர் ஷெட்டைப் பிடித்துக் கொள்வது ஏன்? இதற்கு நான் பெற்ற பதில்தான் இக்கட்டுரைத் தலைப்பு.
இந்த வாட்டர்ஷெட் அல்லது நீர்வடிப்பகுதி மேம்பாடு என்பதும் மழைநீர் சேமிப்பு என்பதும் ஒன்றுதான். குடிநீர்த்திட்டம் என்றாலும் சரி கூடுதல் பாசன வசதி என்றாலும் சரி போர் போடுவது அதாவது ஆழ்துளைக் குழாய்களை இறக்குவது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு ஆழ்துளைக் குழாய்கள் அமைப்பதை நிறுத்த வேண்டும், மேல்மட்ட நீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் கொள்கை. உலக வங்கியின் கொள்கை அதுவல்ல. பாசனப் பகுதியை விஸ்தரித்தல். ஒருபோகம் விளையும் நிலத்தில் பாசன வசதியளித்து இருபோகமாகவோ, மூன்று போகமாகவோ மாற்றுவது. நீர்வடி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களில் கொள்ளளவு உயர்ந்த பின்னர் ஆழ்துளைக்குழாய் இறக்கும் பணியும் அதிகமாகும்போதுதான் பாசன நிலம் கூடுதலாகும்.
பாசன நிலம் கூடும்போது உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்யாமல், வர்த்தக நிறுவனங்கள் விரும்பும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்து, பன்னாட்டு விதை நிறுவனங்களையும் ஏற்றுமதியையும் உயர்த்துவது மறைமுகமான நீர்திருடல். நேரடியான நீர்த்திருட்டு என்பது குடிநீர்த்திட்டம் என்ற பெயரில் பெப்சி, கோகோ கோலா போன்ற மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு வாட்டர் அளிப்பதும் நவீனமான அல்லது நாகரிகமான நீர்க் கொள்ளை.
பெரிய அளவில் பெப்சி, கோகோ கோலா கம்பெனிகளின் அக்வாஃபினா, கின்லே போன்றவை ஒருபுறம். உள்ளூரிலேயே மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் போன்றவையும் ஆங்காங்கே மினரல் வாட்டர் உற்பத்தித் தொழில் நிலையங்களை அமைத்துள்ளனர். பல சுதேசித் தனியார் நிலையங்களும் மினரல் வாட்டர் உற்பத்தி - விற்பனையில் இறங்கிவிட்டனர். அரசாங்கக் குழாய் வழிவரும் குடிநீர் பெரும்பாலும் குளியலுக்கும், துணி துவைக்கவும் பயனாகிறது. நான் வசிக்கும் சின்னாளப்பட்டி போன்ற சின்ன ஊரில்கூட குடிநீர் வியாபாரம் சக்கைபோடு போடுகிறது. 1 லிட்டர் புட்டி முதல் 25 லிட்டர் ரிஃபில் வரை நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. ஆகவே உலக வங்கியின் மூலதனம் ""வாட்டர் ஷெட்'' என்ற பெயரில் மினரல் வாட்டர் விற்பனைக்கு ஊக்கம் அளிப்பதாயுள்ளது.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று பாரதியார் கேட்டால், "1 லிட்டர் அக்வாஃபினா மினரல் வாட்டர் குடித்தால் தணிந்துவிடும்' என்கிறது உலக வங்கி. ""நமது தேசபக்தியைச் சற்று மூட்டைகட்டி ஓரமாக வைத்துவிட்டு, "எல்லாம் உலகமயமடா' என்ற தாரக மந்திரத்தை தினம் நூறு தடவையாவது கோஷமிட்டு, அமெரிக்காவை அணைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்று நமது பிரதமர் கூறுகிறார். பாரதியார் புத்தகத்தைக் குப்பையில் போட்டுவிட்டு, 'அடிமைவாழ்வே ஆனந்தமடா' என்று நாம் ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்.
நான் அவன் குடும்பத்தை கேவலமா பேசுவேன், அவன் என் குடும்பத்தை ரொம்ப கேவலமா பேசுவான்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பணபலமும், செல்வாக்கும் பெருகியிருக்கலாம், ஐ.சி.சி.யின் முக்கிய முடிவுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பங்கு அதிகமிருப்பதாக தற்போது பேசப்படுகிறது. ஆனால் கிரிக்கெட் ஆட்ட விதிகள், கிரிக்கெட் உணர்வு என்று வரும்போது ஆசியப் பகுதி வீரர்கள் அதிகம் தண்டிக்கப்படுகின்றனர், ஆஸ்ட்ரேலிய, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிகம் தண்டிக்கப்படுவதில்லை. இது கிறிஸ் பிராட் உள்ளிட்ட ஐ.சி.சி. ஆட்ட நடுவர்கள் பலரின் பாரபட்ச போக்கை எடுத்துக்காட்டுவதாய் உள்ளது.
ஆஸ்ட்ரேலியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே அளவுக்கதிகமாக விளம்பரப்படுத்தப்படும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முதல் டெஸ்ட் கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரு அணி வீரரகளும் ஒழுக்க விதிகளையும், கிரிக்கெட் உணர்வு குறித்த மரபுகளையும் பலமுறை மீறினர். ஆனால் ஐ.சி.சி. ஆட்ட நடுவரான நியூஸீலாந்தைச் சேர்ந்த ஜெஃப் குரோவ் இது பற்றி எந்த ஒரு கவனிப்புமின்றி வாளாவிருந்தார்.
கடைசி நாள் ஆட்டத்தில் ஓவர்களை விரைவில் வீசி வெற்றி பெற வாய்ப்பு தேடி ஆஸ்ட்ரேலிய அணி முயன்று கொண்டிருக்க, சம்பந்தமில்லாமல் மைதானத்திற்குள் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இரண்டு மூன்று முறை உடற்கோப்பு பயிற்சியாளரையும், 12-வது வீரரையும் இங்கிலாந்து அணி நிர்வாகம் களத்தில் இறக்கி நேர விரயம் செய்துள்ளது. இது குறித்து பாண்டிங் வெளிப்படையாக அதிருப்தியை வெளியிட்டும் ஐ.சி.சி. ஆட்ட நடுவர், கள நடுவர்கள் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையே இந்தியாவோ, பாகிஸ்தானோ, இலங்கையோ செய்திருந்தால்... அவ்வளவுதான் ஆஸ்ட்ரேலிய, இங்கிலாந்து ஊடகங்கள் ஐ.சி.சி.யை கிழித்திருக்கும். ஆனால் இப்போது அந்த ஊடகங்கள் கப்சிப்.
இங்கிலாந்து அணியின் காலவிரயப் போக்கு குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூட 'பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருந்தது' என்று எழுதியுள்ளார். ஆனால் ஐ.சி.சி. ஆட்ட நடுவருக்கு இங்கிலாந்தின் உத்தி சிறப்பாக தெரிந்தது போலும்.
இதே கடைசி தினத்தில் பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் அவுட் இல்லாத ஒன்றை நாட் அவுட் என்று தீர்ப்பளித்ததற்கு ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து முனகல் வசையில் ஈடுபட்டார். மேலும் அன்றைய தினத்தில் அளவுக்கு அதிகமாக ஆஸ்ட்ரேலிய வீரர்கள் அவுட் கேட்டு முறையீடு செய்தனர். இவை எதனையும் ஐ.சி.சி. ஆட்ட நடுவர்களும், நிர்வாகிகளும் கண்டு கொள்ளவில்லை.
நடுவர் தீர்ப்பை எதிர்த்து கங்கூலி, பாகிஸ்தான் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் ஆகியோர் நடந்து கொண்ட போது இருவருக்கும் கடுமையான எச்சரிக்கைகளை ஐ.சி.சி. ஆட்ட நடுவரும் கள நடுவர்களும் செய்ததை இதற்கு முன் நாம் பார்த்திருக்கிறோம். ஏன் இந்த பாரபட்சம்?
இதே 5ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடும், ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடிலும் வசைமாரியில் ஈடுபட்டதோடு, ஒருவரையொருவர் இடித்துக் கொண்டனர். உடல் ரீதியான தொடர்பு கூடாது என்று கிரிக்கெட் விதியே இருக்கிறது. ஆனால் இருவரும் தண்டிக்கப்படவில்லை. எச்சரிக்கை கூட விடுக்கப்படவில்லை.
கடந்த முறை ஆஸ்ட்ரேலியா, இந்தியாவில் பயணம் மேற்கொண்டபோது கௌதம் கம்பீருக்கும் ஷேன் வாட்சனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் உடல் ரீதியாக மோதிக் கொண்டனர். அதில் கௌதம் கம்பீருக்கு இரண்டு போட்டிகள் தடை விதித்து தீர்ப்பளித்தார் ஸ்டூவர்ட் பிராடின் தந்தை கிறிஸ் பிராட்.
ஏன் ஸ்டூவர்ட் பிராட் அல்லது பீட்டர் சிடில் மீது ஒரு எச்சரிக்கைக் கூட விடுக்கப்படவில்லை?
ஆனால் துபாயில் உள்ள ஐ.சி.சி. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளதுதான் மிகப்பெரிய தமாஷ். "முதல் டெஸ்ட் போட்டியில் நடத்தை மீறல் குறித்தோ அல்லது வேறு விவகாரங்கள் குறித்தோ எந்த வித மீறலும் நிகழவில்லை" என்று கூறியுள்ளார்!
மற்றொரு மோதலில் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வானிடம் பீட்டர் சிடில் விதி மீறல் செய்தார். அதாவது மூன்று பவுன்சர்களை வீசி அவரைக் காயப்படுத்தினார். இது கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு பகுதி என்பதை ஒப்புக் கொள்வோம். ஆனால் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு வீரரின் அருகில் சென்று கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார் பீட்டர் சிடில். இது தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஐ.சி.சி.ஆட்ட நடுவருக்குத் தெரியவில்லை.
இதையே ஹர்பஜன் செய்திருந்தால்...?
அதே போல் மிட்செல் ஜான்சனும், பீட்டர்சனும் ஒரு மோதலில் ஈடுபட்டனர். இவையெல்லாமே ஐ.சி.சி. நடத்தை விதி மீறல்களே. ஆனால் ஈடுபட்டது இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலிய வீரர்கள், விளையாடப்படுவது ஹை-வோல்டேஜ் ஆஷஸ் தொடர், இதனால் நடவடிக்கை இல்லை.
இவ்வாறெல்லாம் களத்தில் மோசமாக நடந்து கொண்டாலும் இரு அணித் தலைவர்களும் எங்களுக்குள் மோதல் எதுவும் இல்லை. இது சகஜம்தான் என்று கூறுகின்றனர்.
சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா நடித்த ஒரு திரைப்படத்தில் சத்யராஜும் வடிவேலுவும் ஒருவரையொருவர் மாறி மாறி கேவலப்படுத்திக் கொள்ள, கோவை சரளா அது பற்றி வடிவேலுவிடம் கோபப் பார்வை வீசுவார். அப்போது வடிவேலு, "நாங்க சின்ன வயசிலேர்ந்து பிரெண்ட்ஸ், அப்பொதிருந்தே நான் அவன் குடும்பத்தை கேவலமா பேசுவேன், அவன் என் குடும்பத்தை ரொம்ப கேவலமா பேசுவான், இதை நாங்க ஒரு விளையாட்டாவே எடுத்துக்குறது" என்று கூறுவார்.
அது போல் பரபஸ்பர கேவலப்படுத்தலை இரு அணிகளும் ஒரு 'விளையாட்டாவே' எடுத்துக் கொள்கிறார்கள் போலும்!
அணித் தலைவர்கள் என்னவேண்டுமானாலும் விளக்கம் கொடுத்து விட்டுப் போகட்டும், கிரிக்கெட் ஆட்டத்தை அதன் உணர்வுடனும், விதிகளுக்கு இணங்கவும் நடத்துவோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டதாக கூறிக் கொள்ளும் ஐ.சி.சி. இந்த போக்கை எப்படி பாரபட்சத்துடன் பார்க்கிறது என்று புரியவில்லை.
ஆஸ்ட்ரேலியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே அளவுக்கதிகமாக விளம்பரப்படுத்தப்படும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முதல் டெஸ்ட் கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரு அணி வீரரகளும் ஒழுக்க விதிகளையும், கிரிக்கெட் உணர்வு குறித்த மரபுகளையும் பலமுறை மீறினர். ஆனால் ஐ.சி.சி. ஆட்ட நடுவரான நியூஸீலாந்தைச் சேர்ந்த ஜெஃப் குரோவ் இது பற்றி எந்த ஒரு கவனிப்புமின்றி வாளாவிருந்தார்.
கடைசி நாள் ஆட்டத்தில் ஓவர்களை விரைவில் வீசி வெற்றி பெற வாய்ப்பு தேடி ஆஸ்ட்ரேலிய அணி முயன்று கொண்டிருக்க, சம்பந்தமில்லாமல் மைதானத்திற்குள் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இரண்டு மூன்று முறை உடற்கோப்பு பயிற்சியாளரையும், 12-வது வீரரையும் இங்கிலாந்து அணி நிர்வாகம் களத்தில் இறக்கி நேர விரயம் செய்துள்ளது. இது குறித்து பாண்டிங் வெளிப்படையாக அதிருப்தியை வெளியிட்டும் ஐ.சி.சி. ஆட்ட நடுவர், கள நடுவர்கள் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையே இந்தியாவோ, பாகிஸ்தானோ, இலங்கையோ செய்திருந்தால்... அவ்வளவுதான் ஆஸ்ட்ரேலிய, இங்கிலாந்து ஊடகங்கள் ஐ.சி.சி.யை கிழித்திருக்கும். ஆனால் இப்போது அந்த ஊடகங்கள் கப்சிப்.
இங்கிலாந்து அணியின் காலவிரயப் போக்கு குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூட 'பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருந்தது' என்று எழுதியுள்ளார். ஆனால் ஐ.சி.சி. ஆட்ட நடுவருக்கு இங்கிலாந்தின் உத்தி சிறப்பாக தெரிந்தது போலும்.
இதே கடைசி தினத்தில் பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் அவுட் இல்லாத ஒன்றை நாட் அவுட் என்று தீர்ப்பளித்ததற்கு ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து முனகல் வசையில் ஈடுபட்டார். மேலும் அன்றைய தினத்தில் அளவுக்கு அதிகமாக ஆஸ்ட்ரேலிய வீரர்கள் அவுட் கேட்டு முறையீடு செய்தனர். இவை எதனையும் ஐ.சி.சி. ஆட்ட நடுவர்களும், நிர்வாகிகளும் கண்டு கொள்ளவில்லை.
நடுவர் தீர்ப்பை எதிர்த்து கங்கூலி, பாகிஸ்தான் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் ஆகியோர் நடந்து கொண்ட போது இருவருக்கும் கடுமையான எச்சரிக்கைகளை ஐ.சி.சி. ஆட்ட நடுவரும் கள நடுவர்களும் செய்ததை இதற்கு முன் நாம் பார்த்திருக்கிறோம். ஏன் இந்த பாரபட்சம்?
இதே 5ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடும், ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடிலும் வசைமாரியில் ஈடுபட்டதோடு, ஒருவரையொருவர் இடித்துக் கொண்டனர். உடல் ரீதியான தொடர்பு கூடாது என்று கிரிக்கெட் விதியே இருக்கிறது. ஆனால் இருவரும் தண்டிக்கப்படவில்லை. எச்சரிக்கை கூட விடுக்கப்படவில்லை.
கடந்த முறை ஆஸ்ட்ரேலியா, இந்தியாவில் பயணம் மேற்கொண்டபோது கௌதம் கம்பீருக்கும் ஷேன் வாட்சனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் உடல் ரீதியாக மோதிக் கொண்டனர். அதில் கௌதம் கம்பீருக்கு இரண்டு போட்டிகள் தடை விதித்து தீர்ப்பளித்தார் ஸ்டூவர்ட் பிராடின் தந்தை கிறிஸ் பிராட்.
ஏன் ஸ்டூவர்ட் பிராட் அல்லது பீட்டர் சிடில் மீது ஒரு எச்சரிக்கைக் கூட விடுக்கப்படவில்லை?
ஆனால் துபாயில் உள்ள ஐ.சி.சி. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளதுதான் மிகப்பெரிய தமாஷ். "முதல் டெஸ்ட் போட்டியில் நடத்தை மீறல் குறித்தோ அல்லது வேறு விவகாரங்கள் குறித்தோ எந்த வித மீறலும் நிகழவில்லை" என்று கூறியுள்ளார்!
மற்றொரு மோதலில் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வானிடம் பீட்டர் சிடில் விதி மீறல் செய்தார். அதாவது மூன்று பவுன்சர்களை வீசி அவரைக் காயப்படுத்தினார். இது கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு பகுதி என்பதை ஒப்புக் கொள்வோம். ஆனால் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு வீரரின் அருகில் சென்று கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார் பீட்டர் சிடில். இது தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஐ.சி.சி.ஆட்ட நடுவருக்குத் தெரியவில்லை.
இதையே ஹர்பஜன் செய்திருந்தால்...?
அதே போல் மிட்செல் ஜான்சனும், பீட்டர்சனும் ஒரு மோதலில் ஈடுபட்டனர். இவையெல்லாமே ஐ.சி.சி. நடத்தை விதி மீறல்களே. ஆனால் ஈடுபட்டது இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலிய வீரர்கள், விளையாடப்படுவது ஹை-வோல்டேஜ் ஆஷஸ் தொடர், இதனால் நடவடிக்கை இல்லை.
இவ்வாறெல்லாம் களத்தில் மோசமாக நடந்து கொண்டாலும் இரு அணித் தலைவர்களும் எங்களுக்குள் மோதல் எதுவும் இல்லை. இது சகஜம்தான் என்று கூறுகின்றனர்.
சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா நடித்த ஒரு திரைப்படத்தில் சத்யராஜும் வடிவேலுவும் ஒருவரையொருவர் மாறி மாறி கேவலப்படுத்திக் கொள்ள, கோவை சரளா அது பற்றி வடிவேலுவிடம் கோபப் பார்வை வீசுவார். அப்போது வடிவேலு, "நாங்க சின்ன வயசிலேர்ந்து பிரெண்ட்ஸ், அப்பொதிருந்தே நான் அவன் குடும்பத்தை கேவலமா பேசுவேன், அவன் என் குடும்பத்தை ரொம்ப கேவலமா பேசுவான், இதை நாங்க ஒரு விளையாட்டாவே எடுத்துக்குறது" என்று கூறுவார்.
அது போல் பரபஸ்பர கேவலப்படுத்தலை இரு அணிகளும் ஒரு 'விளையாட்டாவே' எடுத்துக் கொள்கிறார்கள் போலும்!
அணித் தலைவர்கள் என்னவேண்டுமானாலும் விளக்கம் கொடுத்து விட்டுப் போகட்டும், கிரிக்கெட் ஆட்டத்தை அதன் உணர்வுடனும், விதிகளுக்கு இணங்கவும் நடத்துவோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டதாக கூறிக் கொள்ளும் ஐ.சி.சி. இந்த போக்கை எப்படி பாரபட்சத்துடன் பார்க்கிறது என்று புரியவில்லை.
Tuesday, July 21, 2009
மனிதர்களைப் புதைக்கக் கூட மனிதர்கள் இல்லாமல்
பரிணாம வளர்ச்சியால் சிந்திக்கும் திறனுள்ள மனிதனாக உருமாற்றம் அடைந்த விலங்கினம், தனித்தனிக் குழுக்களாகத் திரிந்தபோது, தங்களது பாதுகாப்புக்காகக் கட்டமைத்ததுதான் சமூகம்.
கடைசியில், அந்தச் சமூகத்தைக் காப்பதற்காகவே போர்களை நடத்தி, தங்களைத் தாங்களே, மனித இனம் பலியிட்டுக் கொள்ளத் தொடங்கியது. கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் இனம், மதம், மொழி, இடத்தின் பெயரால் சமூகத்தில் நடந்த மோதல்களால், ரத்தக் கறை படியாத நாடுகளே இல்லை எனும் அளவுக்கு, "போர்' எனும் கிருமி, நாடுகளின் எல்லைகளைக் கடந்து பரவியுள்ளது.
தற்போதைய போர்களில் பயன்படுத்தப்படும் பேரழிவு ஆயுதங்கள், நோய்க் கிருமிகளைவிட அதிகமான மனிதர்களைக் கொல்கின்றன. நவீன மருத்துவ உதவியுடன், கிருமிகளையாவது ஓரளவுக்கு கட்டுப்படுத்தி விட முடியும்.
ஆனால், படைப்பின் நோக்கத்தையே சிதைக்கும் போர்களைத் தடுக்க, மேற்கொள்ளப்படும் எல்லாவித அஹிம்சை முறைகளும் தோற்றுக் கொண்டிருக்கின்றன.
ஒருபுறம் மனிதர்கள் கூட்டம், கூட்டமாகக் கொல்லப்படுவதை மற்றொருபுறம் மெüன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையே நீடிக்கிறது. சூடான், நைஜீரியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் உள்நாட்டுப் போர்களால் மிகப் பெரிய அகதி முகாம்களாகி விட்டது கண்கூடு. அங்கு தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு நிவாரணம் மேற்கொண்டு, புரையோடிய புண்ணுக்கு மருந்திடும் பணியை மட்டுமே, சர்வதேச அமைப்புகள் செய்து வருகின்றன.
கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானம், போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளின் அதீத வளர்ச்சியால், உலகம் சுருங்கியது. ஆனால், நாடு பிடிக்கும் வேட்கையில் சர்வாதிகாரிகள் நடத்திய போர்கள், கோடிக்கணக்கான மக்களை, அவர்களது வாழ்விடத்தோடு சேர்த்து அழித்தன.
இரண்டாகப் பிளக்கப்பட்ட நாடுகளிடையே தீராத பிரச்னைகள் உருவாக்கப்பட்டு, மேலை நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ், நிரந்தரமாக அவை கொண்டு வரப்பட்டன. கடந்த நூற்றாண்டில் சமூகம் எதிர்கொண்ட இரு பேரழிவுகளான உலகப் போர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 கோடிக்கு மேல் என்கிறது ஓர் ஆய்வு.
இயற்கைப் பேரழிவின்போது கூட, இதுபோன்ற அதிகமான உயிரிழப்புகள் குறுகிய காலத்திற்குள் ஏற்பட்டதில்லை. இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா முதன்முதலாக பரிசோதித்த இரு அணுகுண்டுகள், ஜப்பான் நாட்டின் இரு நகரங்களையே தரைமட்டமாக்கின. துயரமான வரலாற்றுப் பதிவாகிவிட்ட அந்நிகழ்வில், ஓரிரு வினாடிகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அணுகுண்டுத் தாக்குதலின் கதிரியக்கப் பாதிப்புகள், ஆயிரம் ஆண்டுகளுக்கேனும் நீடிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சர்வநாசம் நிச்சயம் என்பதை உணர்ந்தும், ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒரே நாளில் அழிப்பதற்குண்டான அளவுக்கு அணு ஆயுதங்களை, வல்லரசு நாடுகள் தயாரித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது, அதிநவீன போர் உத்திகளால் படைத்திறனைப் பன்மடங்கு பெருக்கி, விண்வெளி யுத்தத்துக்கே மேலைநாடுகள் தயாராகிவிட்ட நிலையில், இனியோர் உலக யுத்தம் மூண்டால், புவியும் ஓர் நெருப்புக் கோளமாகி, பேரண்டத்தில் சுற்றிவரும் என்பதில் சந்தேகமில்லை.
இதில், வளரும் நாடுகளின் நிலைதான் பரிதாபத்துக்குரியது. குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் கூட தன்னிறைவை அடையாத அந்நாடுகளும், ஆயுதங்களை வாங்க பெரும் பணத்தைச் செலவிட்டு வருகின்றன. ஆயுதப் போட்டியை உருவாக்கி, வளரும் நாடுகளின் மேம்பாட்டுத் திட்டங்களை முடக்கி, அந்நாடுகள் எப்போதும் தங்களிடம் கையேந்திகளாக நிற்கும் தந்திரத்தை, மேலைநாடுகள் செயல்படுத்தி வருகின்றன.
இதனால், கோடிக்கணக்கான ஏழைகள் வறுமைக் கோட்டுக்குள்ளேயே, விட்டில் பூச்சிகளைப் போல வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அவலம் நீடிக்கிறது. ராணுவத்துக்கு, இந்தியா ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடும் நிதி, சில ஆண்டுகளுக்கேனும் சுகாதார மேம்பாட்டுக்குத் திருப்பி விடப்பட்டால், அத்தனை ஏழைகளுக்கும் தரமான இலவச சிகிச்சை அளிக்கலாம் அல்லது அத்தொகையில், நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்துவிடலாம் போன்ற செய்திகள் வியப்பை அளிக்கவில்லை.
போர்களற்ற சமுதாயம் உருவாக மதங்களாவது துணை நிற்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல நாடுகளில் மத மோதல்கள் தீராத பிரச்னையாக நீடிக்கின்றன.
தெற்காசியாவில் அதிகமான இசுலாமியர்களை ஏவுகணைகளால் அழித்த நாடுகள் எவை எனக் கேட்டால், ஈராக், பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் கூட பதில் அளித்துவிடும் அளவுக்கு கிழக்கும், மேற்கும் நட்பு (?) பாராட்டி வருகின்றன. புத்த மதம் தழுவிய நாடும், பெரும் போரை நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்திருப்பது, புவி சந்தித்திருக்கும் விநோதங்களில் ஒன்று.
நேயம், சக உயிர்களைக் காத்தல் உள்ளிட்ட எந்தவிதமான மத சித்தாந்தங்களுக்கும் இடம் கொடாமல், காட்டு விலங்குகளைப் போல மனிதர்களை வேட்டையாடி அழிக்கும் கொலைத் தொழிலான போர், துரதிருஷ்டவசமாக தற்போதைய நவீன சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது.
எதிர்காலத்தில் ஆயுதப் போட்டியாலும், சர்வாதிகார மனப்பான்மையாலும் நடத்தப்படும் போர்களால்தான், மனித குலத்துக்கு பேராபத்து ஏற்பட உள்ளது. நுகர்வுக் கலாசாரத்தால் சுயநலம் மிகுந்திருக்கும் காலகட்டத்தில், பிரக்ஞையிழந்து நிற்கும் சமூகம் எதிர்கொண்டுள்ள பேராபத்து போர்தான். போருக்குப் பின் அமைதி திரும்பும் என்று, எந்தவொரு நாட்டின் தலைவராவது உறுதி அளித்தால், அது மயான அமைதியாகத்தான் இருக்கும்..!
அங்கே வாழ்வை இழந்து, வேரற்ற மரங்களைப் போல விழும் மனிதர்களைப் புதைக்கக் கூட மனிதர்கள் இல்லாமல் போகலாம்..!
கடைசியில், அந்தச் சமூகத்தைக் காப்பதற்காகவே போர்களை நடத்தி, தங்களைத் தாங்களே, மனித இனம் பலியிட்டுக் கொள்ளத் தொடங்கியது. கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் இனம், மதம், மொழி, இடத்தின் பெயரால் சமூகத்தில் நடந்த மோதல்களால், ரத்தக் கறை படியாத நாடுகளே இல்லை எனும் அளவுக்கு, "போர்' எனும் கிருமி, நாடுகளின் எல்லைகளைக் கடந்து பரவியுள்ளது.
தற்போதைய போர்களில் பயன்படுத்தப்படும் பேரழிவு ஆயுதங்கள், நோய்க் கிருமிகளைவிட அதிகமான மனிதர்களைக் கொல்கின்றன. நவீன மருத்துவ உதவியுடன், கிருமிகளையாவது ஓரளவுக்கு கட்டுப்படுத்தி விட முடியும்.
ஆனால், படைப்பின் நோக்கத்தையே சிதைக்கும் போர்களைத் தடுக்க, மேற்கொள்ளப்படும் எல்லாவித அஹிம்சை முறைகளும் தோற்றுக் கொண்டிருக்கின்றன.
ஒருபுறம் மனிதர்கள் கூட்டம், கூட்டமாகக் கொல்லப்படுவதை மற்றொருபுறம் மெüன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையே நீடிக்கிறது. சூடான், நைஜீரியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் உள்நாட்டுப் போர்களால் மிகப் பெரிய அகதி முகாம்களாகி விட்டது கண்கூடு. அங்கு தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு நிவாரணம் மேற்கொண்டு, புரையோடிய புண்ணுக்கு மருந்திடும் பணியை மட்டுமே, சர்வதேச அமைப்புகள் செய்து வருகின்றன.
கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானம், போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளின் அதீத வளர்ச்சியால், உலகம் சுருங்கியது. ஆனால், நாடு பிடிக்கும் வேட்கையில் சர்வாதிகாரிகள் நடத்திய போர்கள், கோடிக்கணக்கான மக்களை, அவர்களது வாழ்விடத்தோடு சேர்த்து அழித்தன.
இரண்டாகப் பிளக்கப்பட்ட நாடுகளிடையே தீராத பிரச்னைகள் உருவாக்கப்பட்டு, மேலை நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ், நிரந்தரமாக அவை கொண்டு வரப்பட்டன. கடந்த நூற்றாண்டில் சமூகம் எதிர்கொண்ட இரு பேரழிவுகளான உலகப் போர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 கோடிக்கு மேல் என்கிறது ஓர் ஆய்வு.
இயற்கைப் பேரழிவின்போது கூட, இதுபோன்ற அதிகமான உயிரிழப்புகள் குறுகிய காலத்திற்குள் ஏற்பட்டதில்லை. இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா முதன்முதலாக பரிசோதித்த இரு அணுகுண்டுகள், ஜப்பான் நாட்டின் இரு நகரங்களையே தரைமட்டமாக்கின. துயரமான வரலாற்றுப் பதிவாகிவிட்ட அந்நிகழ்வில், ஓரிரு வினாடிகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அணுகுண்டுத் தாக்குதலின் கதிரியக்கப் பாதிப்புகள், ஆயிரம் ஆண்டுகளுக்கேனும் நீடிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சர்வநாசம் நிச்சயம் என்பதை உணர்ந்தும், ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒரே நாளில் அழிப்பதற்குண்டான அளவுக்கு அணு ஆயுதங்களை, வல்லரசு நாடுகள் தயாரித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது, அதிநவீன போர் உத்திகளால் படைத்திறனைப் பன்மடங்கு பெருக்கி, விண்வெளி யுத்தத்துக்கே மேலைநாடுகள் தயாராகிவிட்ட நிலையில், இனியோர் உலக யுத்தம் மூண்டால், புவியும் ஓர் நெருப்புக் கோளமாகி, பேரண்டத்தில் சுற்றிவரும் என்பதில் சந்தேகமில்லை.
இதில், வளரும் நாடுகளின் நிலைதான் பரிதாபத்துக்குரியது. குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் கூட தன்னிறைவை அடையாத அந்நாடுகளும், ஆயுதங்களை வாங்க பெரும் பணத்தைச் செலவிட்டு வருகின்றன. ஆயுதப் போட்டியை உருவாக்கி, வளரும் நாடுகளின் மேம்பாட்டுத் திட்டங்களை முடக்கி, அந்நாடுகள் எப்போதும் தங்களிடம் கையேந்திகளாக நிற்கும் தந்திரத்தை, மேலைநாடுகள் செயல்படுத்தி வருகின்றன.
இதனால், கோடிக்கணக்கான ஏழைகள் வறுமைக் கோட்டுக்குள்ளேயே, விட்டில் பூச்சிகளைப் போல வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அவலம் நீடிக்கிறது. ராணுவத்துக்கு, இந்தியா ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடும் நிதி, சில ஆண்டுகளுக்கேனும் சுகாதார மேம்பாட்டுக்குத் திருப்பி விடப்பட்டால், அத்தனை ஏழைகளுக்கும் தரமான இலவச சிகிச்சை அளிக்கலாம் அல்லது அத்தொகையில், நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்துவிடலாம் போன்ற செய்திகள் வியப்பை அளிக்கவில்லை.
போர்களற்ற சமுதாயம் உருவாக மதங்களாவது துணை நிற்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல நாடுகளில் மத மோதல்கள் தீராத பிரச்னையாக நீடிக்கின்றன.
தெற்காசியாவில் அதிகமான இசுலாமியர்களை ஏவுகணைகளால் அழித்த நாடுகள் எவை எனக் கேட்டால், ஈராக், பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் கூட பதில் அளித்துவிடும் அளவுக்கு கிழக்கும், மேற்கும் நட்பு (?) பாராட்டி வருகின்றன. புத்த மதம் தழுவிய நாடும், பெரும் போரை நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்திருப்பது, புவி சந்தித்திருக்கும் விநோதங்களில் ஒன்று.
நேயம், சக உயிர்களைக் காத்தல் உள்ளிட்ட எந்தவிதமான மத சித்தாந்தங்களுக்கும் இடம் கொடாமல், காட்டு விலங்குகளைப் போல மனிதர்களை வேட்டையாடி அழிக்கும் கொலைத் தொழிலான போர், துரதிருஷ்டவசமாக தற்போதைய நவீன சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது.
எதிர்காலத்தில் ஆயுதப் போட்டியாலும், சர்வாதிகார மனப்பான்மையாலும் நடத்தப்படும் போர்களால்தான், மனித குலத்துக்கு பேராபத்து ஏற்பட உள்ளது. நுகர்வுக் கலாசாரத்தால் சுயநலம் மிகுந்திருக்கும் காலகட்டத்தில், பிரக்ஞையிழந்து நிற்கும் சமூகம் எதிர்கொண்டுள்ள பேராபத்து போர்தான். போருக்குப் பின் அமைதி திரும்பும் என்று, எந்தவொரு நாட்டின் தலைவராவது உறுதி அளித்தால், அது மயான அமைதியாகத்தான் இருக்கும்..!
அங்கே வாழ்வை இழந்து, வேரற்ற மரங்களைப் போல விழும் மனிதர்களைப் புதைக்கக் கூட மனிதர்கள் இல்லாமல் போகலாம்..!
Thursday, July 16, 2009
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாடு என்ன?
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப் பாடு என்ன என்ற கேள்வி இப்போது கொழும்பு அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் ஆதரவுப் பின்னணியில், புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசாங்கத்தால் அமெரிக்காவைத் திருப்திப்படுத்தும் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாதிருக்கிறது.
இதன்காரணமாக, போருக்குப் பிந்திய அபிவிருத்தி விஷயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் விடயத்தை அமெரிக்காவும் கூட ஒரு தலைப்பட்சமாகவே பார்த்தது. புலிகள் அமைப்புக்குத் தடைவிதித்தது. புலிகள் இயக்கம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த பின்னரும், அதன் மீதான தடையை அமெரிக்கா நீடித்தது. இலங்கை அரசாங்கத்துக்கு இது திருப்தியாக அமைந்த போதும், அமெரிக்கா விடுத்திருக்கின்ற பயண எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. புலிகள் இயக்கம் அழிந்து விட்டது என்று கூறி, புலிகள் இயக்கம் மீதான தடையை அமெரிக்கா நீக்கவில்லை. எந்தக் காரணத்தைக் காட்டி புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீடித்ததோ அதே காரணத்தைக் காட்டியே இலங்கைக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று தமது நாட்டுப் பிரஜைகளுக்குப் பயண எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால் அந்தநாடு இந்த விடயத்தில் இரட்டைப் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை என்பது வெளித் தோன்றும். ஆனால், இலங்கை அரசாங்கத்துக்கு இது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அதேநேரம் புலிகள் இயக்கம் முற்றாக அழிந்து விட்டது என்று கூறி அதன் மீதான தடையை நீக்குமாறு யோசனை தெரிவிக்கவும் இலங்கை துணியவில்லை. இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அமெரிக்கா இப்போது எதிர்பார்ப்பது தமிழர் இனச்சிக்கலுக்கான ஓர் அரசியல் தீர்வைத்தான். 13 ஆவது திருத்தத்தின்படியோ அல்லது வேறெந்த வழிகளினூடாகவோ இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு.
ஆனால், இலங்கை அரசு இந்த விஷயத்தில் நழுவல் போக்கையே கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே மீண்டும் பயண எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரும் ஒரு முயற்சியாக இந்த அறிக்கை வெளியிடப்பட் டிருக்கலாம். கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் "இலங்கைக்குப் பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அங்கு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமை உட்பட, உறுதியற்ற நிலை அங்கு தொடர்வதையிட்டு எச்சரிக்கை விடுக்கின்றது. இதனால் இலங்கைக்கு பயணம் செய்வதில் உள்ள ஆபத்தை கவனமாகப் பரிசீலனை செய்யுமாறு அங்கு செல்ல விரும்பும் அமெரிக்கக் குடிமக்களை இராஜாங்கத் திணைக்களம் கேட்டுக் கொள்கின்றது.' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் புலிகள் இயக்கம் மீள் எழுச்சி கொள்ளலாம் என்ற எச்சரிக்கை மட்டுமன்றி, கிழக்கில் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள், வீதித் தடைகள், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது என்று இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அழுத்தம் கொடுக்கும் வாக்கியங்களும் இடம்பெற்றிருக் கின்றன.
அமெரிக்காவின் இந்த அறிக்கையினால் குழப்பமடைந்தது இலங்கை அரசாங்கம். காரணம், இந்த ஆண்டிலும் அடுத்த ஆண்டிலும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தது இலங்கை அரசாங்கம். இதில் மண் அள்ளிப்போடும் வகையில் தான் அமெரிக்காவின் அறிக்கை அமைந்திருந்தது. இதையடுத்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன இலங்கை அரசின் ஆழ்ந்த வருத்தத்தத்தையும் அதிர்ச்சியை யும் வெளிப்படுத்தும் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். "விடுதலைப் புலிகள் முழுமை யாகத் தோற்கடிக்கப்பட்டிருக் கின்றனர். இந்தக் கள நிலைவரத்தை புரிந்துகொள்ளாமல் அமெரிக்கா இந்தப் பயண எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது.
"இவ்வாறான ஓர் அறிவுறுத்தலை அமெரிக்கா வெளியிட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. கடந்த காலங்களில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு படையினரால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் எனத் தெரிவித்திருப்பது கள நிலைமைகளைப் போதுமான அளவுக்குப் புரிந்துகொள்ளாத தன்மையைத் தான் வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் கூறியிருந்தார்.
போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, களமுனை நிலைவரங்களை செய்மதி மூலம் படம் பிடித்து அவ்வப்போது எச்சரிக்கைகளை வழங்கிக் கொண்டிருந்த அமெரிக்காவை களநிலையை அமெரிக்கா போதியளவில் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறது இலங்கை அரசு. இதற்கிடையே, சர்வதேச நாயண நிதியத்திடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் இதுவரையில் கிடைக்காத நிலைக்கும் ஒருவகையில் அமெரிக்காவே காரணமாக இருக்கிறது. நிதி உதவிகள் வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் அரசியலைப் புகுத்தியுள்ளது. அதனால் தான் இலங்கைக்குக் கிடைக்க வேண்டிய 1.9 பில்லியன் டொலர் நிதியுதவி தாமதமடைந்து வருவதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விசனம் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. "முன்னர் எப்போதும் சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி வழங்குவதற்கு அரசியல் காரணிகளை கருத்தில் கொண்டதில்லை. ஆனால் தற்போது அது முதல் தடவையாக அதனை மேற்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெறுவதற்கான உடன்பாடு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு செய்யப்பட்டிருந்த போதும் இன்றுவரை அது கருத்தில் எடுக்கப்படவில்லை.' என்று அவர் கூறியிருந்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி வழங்கப்படுவதை இறுதியாக தீர்மானிக்கும் அதிகாரம் அமெரிக்காவிடமே உள்ளது. போர்நிறுத்தம், இடம்பெயர்ந்த மக்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதுடன் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.
அத்துடன், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாகவும் அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால் இவை கருத்தில் எடுக்கப்படாத நிலையில் சர்வதேச நாயண நிதியத்தின் நிதியுதவிகளை அமெரிக்கவே தடுத்து வைத்திருப்பதான கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையே போர் முடிந்த பின்னரும் இலங்கை இராணுவத்திற்கு மேலும் 50 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு இந்த நிதியுதவிகளை மேலும் தாமதப்படுத்தும் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது. போர்க்காலத்தில் இந்தியாவினதும் சீனாவினதும் தாளத்துக்கு ஆடிய இலங்கை அரசாங்கத்தால் இப்போது அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டுச் செயற்பட முடியாததொரு நிலை உருவாகி வருகிறது. சீன, இந்திய பிராந்திய நலன்களுக்கு இடையில் புகுந்து விளையாடிய இலங்கை அரசாங்கம் அமெரிக்காவினது விருப்பங்களுக்கு முரணாகச் செயற்பட இனிமேல் முடியாது.
அப்படிச் செயற்பட முனைந்தால் சர்வதேச ரீதியான ஆதரவை இலங்கை அரசாங்கம் இழக்க நேரிடும். நிதியுதவிகள் பறி போகலாம். போர் நடைபெற்ற இறுதி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த சில யோசனைகளை இலங்கை அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை. புலிகளைக் காப்பாற்றும் முயற்சியாகவே அதை இலங்கை அரசாங்கம் பார்த்தது. அந்த யோசனைகளை உதாசீனம் செய்ததையிட்டு அமெரிக்காவுக்கு உள்ளூர ஒரு வருத்தம் அல்லது கோபம் இருக்கக் கூடும். தொடர்ந்து இலங்கை அரசாங்கம் அமெரிக்க விரோத அல்லது உதாசீனப் போக்கைக் கடைப்பிடித்தால் இலங்கை அரசுக்கு பொருளாதாரச் சிக்கல் இன்னமும் அதிகரிக்கக் கூடும். இதிலிருந்து மீண்டெழுவதென்பது இலங்கைக்கு மிகவும் இலகுவானதொரு விடயமாகவும் இருக்காது. இப்போது இலங்கை அரசு, அமெரிக்காவைத் திருப்திப்படுத்துவதற்கு அவசியமாகத் தேவைப்படுவது ஓர் அரசியல் தீர்வுத் திட்டமாகவே இருக்கலாம்.
இதன்காரணமாக, போருக்குப் பிந்திய அபிவிருத்தி விஷயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் விடயத்தை அமெரிக்காவும் கூட ஒரு தலைப்பட்சமாகவே பார்த்தது. புலிகள் அமைப்புக்குத் தடைவிதித்தது. புலிகள் இயக்கம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த பின்னரும், அதன் மீதான தடையை அமெரிக்கா நீடித்தது. இலங்கை அரசாங்கத்துக்கு இது திருப்தியாக அமைந்த போதும், அமெரிக்கா விடுத்திருக்கின்ற பயண எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. புலிகள் இயக்கம் அழிந்து விட்டது என்று கூறி, புலிகள் இயக்கம் மீதான தடையை அமெரிக்கா நீக்கவில்லை. எந்தக் காரணத்தைக் காட்டி புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீடித்ததோ அதே காரணத்தைக் காட்டியே இலங்கைக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று தமது நாட்டுப் பிரஜைகளுக்குப் பயண எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால் அந்தநாடு இந்த விடயத்தில் இரட்டைப் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை என்பது வெளித் தோன்றும். ஆனால், இலங்கை அரசாங்கத்துக்கு இது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அதேநேரம் புலிகள் இயக்கம் முற்றாக அழிந்து விட்டது என்று கூறி அதன் மீதான தடையை நீக்குமாறு யோசனை தெரிவிக்கவும் இலங்கை துணியவில்லை. இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அமெரிக்கா இப்போது எதிர்பார்ப்பது தமிழர் இனச்சிக்கலுக்கான ஓர் அரசியல் தீர்வைத்தான். 13 ஆவது திருத்தத்தின்படியோ அல்லது வேறெந்த வழிகளினூடாகவோ இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு.
ஆனால், இலங்கை அரசு இந்த விஷயத்தில் நழுவல் போக்கையே கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே மீண்டும் பயண எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரும் ஒரு முயற்சியாக இந்த அறிக்கை வெளியிடப்பட் டிருக்கலாம். கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் "இலங்கைக்குப் பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அங்கு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமை உட்பட, உறுதியற்ற நிலை அங்கு தொடர்வதையிட்டு எச்சரிக்கை விடுக்கின்றது. இதனால் இலங்கைக்கு பயணம் செய்வதில் உள்ள ஆபத்தை கவனமாகப் பரிசீலனை செய்யுமாறு அங்கு செல்ல விரும்பும் அமெரிக்கக் குடிமக்களை இராஜாங்கத் திணைக்களம் கேட்டுக் கொள்கின்றது.' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் புலிகள் இயக்கம் மீள் எழுச்சி கொள்ளலாம் என்ற எச்சரிக்கை மட்டுமன்றி, கிழக்கில் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள், வீதித் தடைகள், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது என்று இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அழுத்தம் கொடுக்கும் வாக்கியங்களும் இடம்பெற்றிருக் கின்றன.
அமெரிக்காவின் இந்த அறிக்கையினால் குழப்பமடைந்தது இலங்கை அரசாங்கம். காரணம், இந்த ஆண்டிலும் அடுத்த ஆண்டிலும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தது இலங்கை அரசாங்கம். இதில் மண் அள்ளிப்போடும் வகையில் தான் அமெரிக்காவின் அறிக்கை அமைந்திருந்தது. இதையடுத்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன இலங்கை அரசின் ஆழ்ந்த வருத்தத்தத்தையும் அதிர்ச்சியை யும் வெளிப்படுத்தும் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். "விடுதலைப் புலிகள் முழுமை யாகத் தோற்கடிக்கப்பட்டிருக் கின்றனர். இந்தக் கள நிலைவரத்தை புரிந்துகொள்ளாமல் அமெரிக்கா இந்தப் பயண எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது.
"இவ்வாறான ஓர் அறிவுறுத்தலை அமெரிக்கா வெளியிட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. கடந்த காலங்களில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு படையினரால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் எனத் தெரிவித்திருப்பது கள நிலைமைகளைப் போதுமான அளவுக்குப் புரிந்துகொள்ளாத தன்மையைத் தான் வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் கூறியிருந்தார்.
போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, களமுனை நிலைவரங்களை செய்மதி மூலம் படம் பிடித்து அவ்வப்போது எச்சரிக்கைகளை வழங்கிக் கொண்டிருந்த அமெரிக்காவை களநிலையை அமெரிக்கா போதியளவில் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறது இலங்கை அரசு. இதற்கிடையே, சர்வதேச நாயண நிதியத்திடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் இதுவரையில் கிடைக்காத நிலைக்கும் ஒருவகையில் அமெரிக்காவே காரணமாக இருக்கிறது. நிதி உதவிகள் வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் அரசியலைப் புகுத்தியுள்ளது. அதனால் தான் இலங்கைக்குக் கிடைக்க வேண்டிய 1.9 பில்லியன் டொலர் நிதியுதவி தாமதமடைந்து வருவதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விசனம் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. "முன்னர் எப்போதும் சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி வழங்குவதற்கு அரசியல் காரணிகளை கருத்தில் கொண்டதில்லை. ஆனால் தற்போது அது முதல் தடவையாக அதனை மேற்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெறுவதற்கான உடன்பாடு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு செய்யப்பட்டிருந்த போதும் இன்றுவரை அது கருத்தில் எடுக்கப்படவில்லை.' என்று அவர் கூறியிருந்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி வழங்கப்படுவதை இறுதியாக தீர்மானிக்கும் அதிகாரம் அமெரிக்காவிடமே உள்ளது. போர்நிறுத்தம், இடம்பெயர்ந்த மக்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதுடன் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.
அத்துடன், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாகவும் அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால் இவை கருத்தில் எடுக்கப்படாத நிலையில் சர்வதேச நாயண நிதியத்தின் நிதியுதவிகளை அமெரிக்கவே தடுத்து வைத்திருப்பதான கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையே போர் முடிந்த பின்னரும் இலங்கை இராணுவத்திற்கு மேலும் 50 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு இந்த நிதியுதவிகளை மேலும் தாமதப்படுத்தும் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது. போர்க்காலத்தில் இந்தியாவினதும் சீனாவினதும் தாளத்துக்கு ஆடிய இலங்கை அரசாங்கத்தால் இப்போது அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டுச் செயற்பட முடியாததொரு நிலை உருவாகி வருகிறது. சீன, இந்திய பிராந்திய நலன்களுக்கு இடையில் புகுந்து விளையாடிய இலங்கை அரசாங்கம் அமெரிக்காவினது விருப்பங்களுக்கு முரணாகச் செயற்பட இனிமேல் முடியாது.
அப்படிச் செயற்பட முனைந்தால் சர்வதேச ரீதியான ஆதரவை இலங்கை அரசாங்கம் இழக்க நேரிடும். நிதியுதவிகள் பறி போகலாம். போர் நடைபெற்ற இறுதி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த சில யோசனைகளை இலங்கை அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை. புலிகளைக் காப்பாற்றும் முயற்சியாகவே அதை இலங்கை அரசாங்கம் பார்த்தது. அந்த யோசனைகளை உதாசீனம் செய்ததையிட்டு அமெரிக்காவுக்கு உள்ளூர ஒரு வருத்தம் அல்லது கோபம் இருக்கக் கூடும். தொடர்ந்து இலங்கை அரசாங்கம் அமெரிக்க விரோத அல்லது உதாசீனப் போக்கைக் கடைப்பிடித்தால் இலங்கை அரசுக்கு பொருளாதாரச் சிக்கல் இன்னமும் அதிகரிக்கக் கூடும். இதிலிருந்து மீண்டெழுவதென்பது இலங்கைக்கு மிகவும் இலகுவானதொரு விடயமாகவும் இருக்காது. இப்போது இலங்கை அரசு, அமெரிக்காவைத் திருப்திப்படுத்துவதற்கு அவசியமாகத் தேவைப்படுவது ஓர் அரசியல் தீர்வுத் திட்டமாகவே இருக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)