Thursday, June 4, 2009

டாக்டர் பட்டம் எனக்கும் கொடு!

மனித வளர்ச்சியின் அடிப்படையை ஆராய்ச்சி செய்த மாஸ்லோ எனும் உளவியல் விஞ்ஞானி முதன்முதலாக தேவைகள் எனும் அடிப்படைத் தத்துவத்தை உருவாக்கினார். இன்றளவும் அது எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு தத்துவம். அதன்படி மனிதன் அடிப்படையில் பல தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே தனது வாழ்க்கையைச் செலவிடுகிறான். அடிமட்டத்தில் தேவை உணவு. அது நிறைவடைந்தவுடன் பாதுகாப்பு. பின் அன்பு, பாசம், அதற்குப் பிறகு புகழ், மரியாதை என தேவைகள் படிப்படியாக அதிகரிக்கின்றன. அதாவது பணம் சேர்த்தாகிவிட்டது, ஆனால் புகழ் வேண்டும். அதற்குத் தேர்தல் ஒருவழி. பல போஸ்டர்கள், கட்அவுட்களில் போஸ் கொடுக்கலாம், பத்திரிகைகளில் பெயர் வரும். டிவியில் வரலாம் எனும் ஆசை.

அதேபோலத்தான் வாழ்க்கையில் பணமும் அந்தஸ்தும் பெறும்போது பட்டமும் பதவியும் வேண்டுமென்று மனம் துடிக்கிறது. பெருந்தலைவர் காமராஜ் படித்துப் பட்டம் பெற்றவரல்லர். ஆனால், அவரிடம் தாழ்வு மனப்பான்மை இருக்கவில்லை. தனக்கு எந்தப் பல்கலைக்கழகமும் டாக்டர் பட்டம் தரவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அப்படியே தருவதாகச் சொல்லியிருந்தால் கூட அது தேவையில்லை என்று மறுத்திருப்பார். நேருவுக்கும் இந்திராகாந்திக்கும் உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் தந்து கெüரவித்தன. ஆனால் அவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டுக் கொள்ளவில்லை. கௌரவ டாக்டர் பட்டம் பெறுபவர்கள் அப்படிப் போட்டுக்கொள்ளும் வழக்கமும் கிடையாது.

தமிழக அரசியலாரில் நிறைய பேர் தங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் கடமை என்று நினைத்தது மட்டுமன்றி, "டாக்டர்' என்று தங்களது பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வதைப் பெருமையாகக் கருதினர். அதற்குக் காரணம் தாங்கள் பட்டதாரிகள் அல்ல என்கிற அவர்களுடைய தாழ்வு மனப்பான்மைதான். பணம் சம்பாதித்துவிட்டதால் சமுதாய அங்கீகாரம் தேடுவது என்பது உளவியல் விஞ்ஞானி மாஸ்லோ கூறுவதுபோல ஒருவித மனித மனதின் விலங்கியல் உணர்வு. அதனால்தான் இவர்கள் அரசியல் அங்கீகாரம் பெறத்துடிக்கிறார்கள். அந்த பலவீனத்தை சில அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தக் கேலிக்கூத்துகள் தொடர்கதைதானா, முடிவே கிடையாதா?

Tuesday, June 2, 2009

இலங்கை முகாமில் தொலைந்த இளைஞர் இளைஞிகள்!

பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 3 இலட்சம் தமிழர்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடைத் தங்கல் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மே 30ஆம் தேதி கணக்குப்படி 2,76,785 பேர் என்றும், இது கடந்த 27ஆம் தேதி எடுக்கப்பட்ட கணக்கோடு ஒப்புடுகையில் 13,130 பேர் குறைவாக உள்ளனர் என்றும் ஐ.நா.அறிக்கை கூறியது.

மேலும் இரட்டை கூட்டலினால் இத்தவறு நேர்திருக்கலாம் என்றும், மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்றும் வெளியிடப்படாத ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதென தங்களுக்கு கிடைத்த ‘உள் தகவல்’ அடிப்படையில் இன்னர் சிட்டி பிரஸ் பத்திரிக்கை எழுதியுள்ளது.

ஆனால் இராணுவத்தின் முகாம்களுக்கு வந்தோரை கணக்கீடு செய்து பதிவு செய்த முறை நேர்த்தியானது என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஆணையர் அலுவலகம் தெரிவித்திருந்ததையும் இன்னர் சிட்டி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

முகாம்களில் உள்ள இளைஞர்களை துணை இராணுவப் படையினர் அங்கிருந்து அகற்றி கொண்டு செல்வதாகவும், இளம் பெண்களை பிரித்து பாலியல் ரீதியாக பயன்படுத்த கடத்திச் செல்வதாகவும் ஐயமேற்படுகின்றது.

இந்தப் பின்னணியில்தான், இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்ய முடியாத நிலையில், அங்கு பன்னாட்டு புலனாய்வு நடத்த வேண்டும் என்று பான் கீ மூன் சொல்லியுள்ளார்.

பன்னாட்டு புலனாய்வு அவசியம் என்று கூறிய பான் கீ மூன், அது சாத்தியமல்ல என்று மறைமுகமாக கூறுவதுபோல சொல்லியுள்ளார் : “பன்னாட்டு சமூகத்தின் மூலம் விசாரணை நடத்த வேண்டுமென்றால் அதற்கு முதலில் அந்நாட்டு அரசின் முழுமையான ஒத்துழைப்பு வேண்டும்; இரண்டாவதாக, அதற்கு ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவு வேண்டும்” என்று.

அதில் ஐ.நா.வில் உள்ள 5 நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இரஷ்யா ஆகியவற்றின் ஒட்டுமொத்த ஆதரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
இந்த 5 வல்லரசுகளி்ல் சீனாவும், இரஷ்யாவும் (இந்தியாவைப் போல) தமிழர்களுக்கு எதிரான இந்தப் போருக்கு ஆதரவும் ஆயுதங்களும் வழங்கியவை. அதனால்தான், இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து ஒரு விவாதத்தை இன்று வரை பாதுகாப்புப் பேரவையில் நடத்த முடியாமல் தடுத்து வருகின்றன இரஷ்யாவும், சீனாவும்.

இன்னும் கொடுமை என்னவென்றால் இப்போதும் கூட கொழும்புவில் உள்ள ஐ.நா. தூதரத்திடம் அங்குக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை வெளியிடவில்லை!

தமிழராய் நாம் என்ன செய்யப்பொகிறோம்? :-(

இலங்கைப் போரினால்...

இலங்கை பாதுகாப்பு துறை செயலாளர் கோதபயா ராஜபக்சே கூறியுள்ளார்: விடுதலைப்புலிகளுடனான போருக்காக இலங்கை அரசு இதுவரை ரூ. 5 லட்சம் கோடி செலவிட்டு உள்ளது. இறுதி கட்ட பேருக்கு மட்டும் ரூ. 9 ஆயிரம் கோடி செலவாகி இருக்கிறது. இதுதவிர 30 வருடம் விடுதலைப்புலிகள் நடவடிக்கையால் இலங்கையில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. பெரும் வளங்களும், சொத்துக்களும் அழிந்து விட்டன.

அடப் படுபாவி! நீங்கள் கொன்று குவித்த மக்களின் கணக்கை எண்ணி உலகநாடுகள் கொதித்துப்போயுள்ள நிலையில், நீ வருத்தப்படுவதோ இவற்றைப் பற்றிதானா!

போருக்குப்பின்......

ஹிட்லர் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்டதும், ஜெர்மனியை நேசநாடுகள் பங்கு போட்டுக்கொண்டன. மேற்கு ஜெர்மனி என்றும், கிழக்கு ஜெர்மனி என்றும் இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் சார்புடைய அராசாங்கம் மேற்கு ஜெர்மனியிலும், ரஷிய சார்புடைய அரசாங்கம் கிழக்கு ஜெர்மனியிலும் அமைக்கப்பட்டன. ஜெர்மனி தலைநகரமான பெர்லின், குண்டு வீச்சின் காரணமாகப் பாழடைந்துபோய் விட்டது.

அந்த நகரமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மேற்கு பெர்லின் மேற்கு ஜெர்மனியிலும், கிழக்கு பெர்லின் கிழக்கு ஜெர்மனியிலும் சேர்க்கப்பட்டன. 1950-ல் கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஏராளமான பேர் மேற்கு ஜெர்மனிக்கு அகதிகளாக குடியேறினார்கள். அகதிகள் போவதற்கு பெர்லின் நகரம்தான் வழியாகப் பயன்பட்டது. எனவே, அகதிகள் போவதை தடுக்க கிழக்கு பெர்லினையும், மேற்கு பெர்லினையும் பிரிக்கும் வகையில் பெரிய சுவர் ஒன்றை கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் அமைத்தது.

பெர்லின் சுவர் என்று இது அழைக்கப்பட்டது. அமெரிக்காவின் உதவியுடன் மேற்கு பெர்லின் நகரம் புதுப்பிக்கப்பட்டது. உலகின் அழகிய நரங்களில் ஒன்றாக அந்த நகரம் கம்பீரமாக எழுந்தது. ஆனால் கிழக்கு பெர்லின் நகரம் மிக மிக மெதுவாகவே வளர்ச்சி அடைந்தது. இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஜெர்மனி மக்கள் உணர்ச்சியால் ஒன்றுபட்டவர்கள்தானே. இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்பினார்கள். இரண்டு ஜெர்மனிகளையும் ஒன்றாக இணைப்பது என்று இரு நாடுகள் இடையேயும் 1990-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 1990 அக்டோபர் 3-ந் தேதி இரு ஜெர்மனிகளும் ஒரே நாடாக இணைந்தன.

பெர்லின் சுவர் இடித்துத் தள்ளப்பட்டது. அணுகுண்டு வீச்சினால் பேரழிவுக்கு உள்ளான ஜப்பான் அந்த சோதனைகளை எல்லாம் எதிர்கொண்டு பொருளாதார துறையில் படிப்படியாக முன்னேறியது. ஜப்பானிய மக்களின் அயராத உழைப்பினால், இன்று உலகிலேயே எலக்ட்ரானிக் துறையில் தலை சிறந்து விளங்குகிறது. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. போரின் போது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் தோளோடு தோன் நின்று ஹிட்லரை எதிர்த்துப்போர் புரிந்த ஸ்டாலின், பின்னர் ரஷியாவில் தன் எதிரிகளை ஒழித்துக்கட்டிவிட்டு சர்வாதிகாரியானார். ரஷியாவில் நடப்பது வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டன. ரஷியாவில் இரும்புத்திரை போடப்பட்டு விட்டதாக சர்ச்சில் வர்ணித்தார்.

இரண்டாவது உலகப்போரின்போது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. போர் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை இங்கிலாந்து கோரியது. போர் முயற்சிகளில் பிரிட்டனுக்கு இந்தியா ஆதரவாக இருந்தால் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் டொமினியன் அந்தஸ்து கொடுக்கப்படும் என்று அறிவித்தது. இது சம்பந்தமாக 1942 மார்ச் மாதத்தில் இங்கிலாந்து மந்திரி கிரிப்ஸ் இந்தியாவுக்கு வந்து காந்தியையும், மற்ற தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். ஆனால் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. உலகப்போரில் ஹிட்லருடன் சேர்ந்திருந்த ஜப்பான், தொடக்கத்தில் பல வெற்றிகளைப் பெற்றது. பிரிட்டன் வசம் இருந்த மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை கைப்பற்றியது. இந்தியா மீதும் ஜப்பான் படையெடுக்கலாம் என்றும் கருதப்பட்டது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்து வருவதால்தான் ஜப்பானியர் இந்த நாட்டின் மீது படையெடுக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்தியாவில் இருந்து பிரிட்டிஷார் உடனே வெளியேற வேண்டும் என்று காந்தி அறிக்கை வெளியிட்டார். வெள்ளையனே வெளியேறு என்று புகழ் பெற்ற தீர்மானத்தை 1942 ஆகஸ்டு மாதத்தில் காங்கிரஸ் நிறைவேற்றியது. எனினும் இந்திய இளைஞர்கள் பெருமளவில் ராணுவத்தில் சேர்ந்து போர் முனைக்கு சென்றார்கள். குறிப்பாக ஜப்பானை எதிர்த்துப் போர் புரிய சிங்கப்பூர், மலாயா, பர்மா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட படைகளில் இந்திய இளைஞர்கள் அதிக அளவில் இருந்தனர். யுத்த காலத்தில் இந்தியாவில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவுக்கு ரேஷன் கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாட்டில் அரிசிக்கு ரேஷன் அமுலாகியது. வரவர அரிசியின் அளவு குறைக்கப்பட்டு கோதுமை, மக்காச்சோளம் ஆகியவை தரப்பட்டன. கடைகளில் ரொட்டி வாங்க வேண்டும் என்றால் கூட அரிசியைக் குறைத்துக் கொண்டு அதற்கு சமமான கூப்பனை பெற்றுக்கொண்டு அதைக் கொடுத்துத்தான் ரொட்டி வாங்க முடியும், சென்னை, மதுரை, திருச்சி, கோவை முதலிய நரங்களில் பாதுகாப்பு குழிகள் வெட்டப்பட்டன. அடிக்கடி அபாயச் சங்கு ஊதி ஒத்திகை பார்ப்பார்கள். அப்போது ரோட்டில் நடந்து போகிறவர்கள். பதுங்குக் குழிகளில் ஒளிந்து கொள்ள வேண்டும்.

இரவில் விளக்கு வெளிச்சம் எதிரி விமானங்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக, தெரு விளக்குகளுக்கு மேல் கறுப்பு மூடிகள் போடப்பட்டன. கச்சா பிலிமுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், சினிமா படங்களை நீளமாகத் தயாரிக்க தடை போடப்பட்டது. 13 ஆயிரம் அடிக்குள் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவு விடப்பட்டது. இந்த உத்தரவு, நல்லதாகவும் அமைந்தது. படங்களில் பாடல்கள் குறைக்கப்பட்டு விறுவிறுப்பு கூடியது. மிகப்பெரிய வெற்றிப்படங்களான ஹரிதாஸ் ஸ்ரீவள்ளி நாம் இருவர் ஆகியவை இந்தக் காலக்கட்டத்தில் குறைந்த நீளத்தில் தயாரிக்கப்பட்டவைதான்.

Monday, June 1, 2009

ஏர் பிரான்ஸ் விமானத்தை காணவில்லை!

ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் 228 பயணிகளுடன் பாரீஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. பிரேசில் கடல் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ராடார் கண்காணிப்பிலிருந்து அந்த விமானம் மறைந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதைப்பற்றி BBC செய்தி தளத்தில் பின்வருமாறு:

Paris Charles de Gaulle airport said contact was lost with the flight from Rio de Janeiro at 0600 GMT.
Brazil's air force confirmed the plane was missing and said a search and rescue mission was under way near the island of Fernando de Noronha.
An airport official told AFP the Airbus 330-200 had been expected to arrive in Paris at 1110 local time (0910 GMT).
Another official said it was possible that the plane had a transponder problem but this was very rare.
"We are very worried," he said, quoted by AFP news agency.
An Air France spokeswoman said there had been no radio contact with the plane "for a while".
Brazilian air force spokesman Col Henry Munhoz told Brazilian TV it had failed to be picked up by radar on the Cape Verde Islands on its way across the Atlantic.
"Air Force planes left Fernando de Noronha and are flying towards Europe to start the search for the missing plane," he said.
Flight AF 447 left Rio at 1900 local time (2200 GMT) on Sunday. It had 216 passengers and 12 crew on board, including three pilots.
Airport authorities have set up a crisis centre at Charles de Gaulle.
An Air France official told AFP that people awaiting the flight would be received in a special area at the airport's second terminal.
French President Nicolas Sarkozy has been informed of the incident and has expressed his deep concern, his office said.
He has demanded that the relevant authorities do everything they can to find the plane and "shed light on the circumstances surrounding its disappearance as rapidly as possible"