பொழுதுபோக்கை மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சி, இன்று நம் அனைவரின் வாழ்விலும் தொலைந்து போன காட்சிகளைத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள் அதிக கவனம் செலுத்துவதாகவும், தமிழகத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 6.5 எபிசோடுகளைப் பார்ப்பதாகவும், அதிலும் குறிப்பிட்ட 3 சானல்களை 54 சதவீதம் பேர் பார்ப்பதாகவும் தனியார் நிறுவனம் ஒன்றின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கேரளத்தில் இது 4 எபிசோடுகளாக உள்ளதாகவும், பிற்பகலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் கேரளம், கர்நாடகத்தை விட தமிழகமும், ஆந்திரமும் தான் முன்னணியில் உள்ளதாகவும், அதிலும் முன்னணியில் இருப்பவர்கள் பெண்கள் என்றும் அந்தப் புள்ளிவிவரம் மேலும் தெரிவிக்கிறது.
தொலைக்காட்சிகளால் நம்மவர்கள் அடைந்த பயன்தான் என்ன? பக்கத்து வீடுகளுடனான தொடர்பும், சச்சரவுகளும் குறைந்துள்ளது. கொலையும், கொள்ளைகளும், வீடுகளில் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன என்பது தான் பதில். பெண்களையும், தொடர்களையும் மையமாக வைத்தே இன்றைய டிவி சேனல்கள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கொலைக்காட்சிகளாகத்தான் இருக்கின்றன என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.
நல்ல நிகழ்ச்சிகளை வழங்கும் டிவி சேனல்களுக்கு நம்மிடையே பெரிய அளவில் வரவேற்பில்லை என்பதும், இந்த தொலைக்காட்சி தொடர்களின் ஆதிக்கத்துக்குக் காரணம். பெண்களை மட்டுமன்றி குழந்தைகளையும் கவரக்கூடிய வகையில் ஏராளமான டிவி சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பதாகத்தான் உள்ளன.
சிறுவயதிலேயே டிவிக்கு அடிமையாகும் குழந்தைகள் கண்பார்வைக் குறைபாடுகளுக்கு உள்ளாவதாகவும், மனரீதியான பாதிப்புக்குள்ளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை வீதியில் கொண்டாடிய காலம் போய் இன்று டிவியில் பார்த்து ரசிக்கிற காலத்தில் இருக்கிறோம். பண்டிகைக் காலங்களில் கோயில்களுக்குச் செல்வது, உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வருவது போன்ற பழக்க வழக்கங்கள் எல்லாம் இன்று நம்மிடம் இருந்து மறைந்து போய்விட்டது (மறந்து போய்விட்டது) என்றே சொல்லலாம்.
ஓடி விளையாடு பாப்பா என்று சொன்ன கவிஞர் பாரதி வாழ்ந்த நாட்டில், இன்று நாம் டிவி முன் கூடி வாழ பழகிவிட்டோம். டிவி சேனல்கள், இணையத்தின் வருகையால் இன்றைக்கு மைதானங்களில் விளையாடுவோரின் எண்ணிக்கையும், தெருமுனைகளில் கதை பேசுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக இன்று ஏராளமானோரை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருப்பது இணையதளம். தொலைக்காட்சியின் பரிணாம வளர்ச்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது இணையதளம்.
அதன் விளைவு தான் மழைக்கு முளைத்த காளான்களைப் போன்று தோன்றியிருக்கும் தெருமுனை பிரவுஸிங் சென்டர்கள். தொலைக்காட்சியால் சமூகத்தில் மாற்றங்களும், இணையத்தால் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளன என்பதை ஒத்துக்கொள்ளும் அதே வேளையில் அதனால் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
மணிக்கணக்காக டிவி மற்றும் இணையதளங்களின் முன் அமரும் பெரும்பாலன இளைஞர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும், தவறான வழிகளில் செல்வதாகவும், சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சுற்றத்தோடும், உறவுகளோடும் வாழ்ந்தவர்கள் அக்கால மனிதர்கள். தொலைக்காட்சியோடும், இணையத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் இக்கால மனிதர்கள். இன்றைய இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதைவிட, அதைப் பார்த்து ரசிப்பதைத்தான் விரும்புகின்றனர். இதன்விளைவு கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளில் மெச்சுகின்ற அளவுக்கு இந்தியர் யாரும் இல்லை. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியின் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரியது.
உலக வரைபடத்தில் ஒளிந்திருக்கும் நாடுகள் கூட ஒலிம்பிக்கில் கோப்பையை வென்ற நாடுகளின் பட்டியலில் ஒளிர்கிறது. ஆனால் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவின் நிலையோ வெற்றிப்பட்டியலில் தேடும் நிலையில் தான் இருக்கிறது.
Thursday, December 17, 2009
Wednesday, December 9, 2009
!தெலங்கானா தனி மாநிலம்: மத்திய அரசு கொள்கை அளவில் சம்மதம்
தெலங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது என காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இத் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் புதன்கிழமை இரவு நடந்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது இதை தெரிவித்தார்.
இரண்டு சுற்றுகளாக நடந்த ஆலோசனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் மற்றும் ஆந்திர முதல்வர் ரோசய்யா ஆகியோர் பங்கேற்றனர்.
ஆந்திரத்தில் பற்றி எரியும் தெலங்கானா நெருப்பை அணைக்கும் முயற்சியாக காங்கிரஸ் மேலிடம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தனி மாநிலம் அமைப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முறையான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார்.
சட்டப்பேரவையில் தீர்மானம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற விவரத்தை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரசேகர ராவின் உடல் நலனில் மத்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. அவர் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தெலங்கானா போராட்டம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறுமாறு மாநில முதல்வர் ரோசய்யாவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.
மாணவர்களும் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சந்திரசேகர ராவின் உடல் நிலை குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் மீரா குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தெலங்கானா பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று கோரி மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. சந்திரசேகர ராவுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசே பொறுப்பு என்று பாஜக குற்றம்சாட்டியது.
தெலங்கானா பகுதி எம்.பி.க்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோரும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நிலைமையின் தீவிரத்தை எடுத்துக் கூறினர். தெலங்கானா போராட்டம் ஆந்திரத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னையாக மாறி உள்ளது. எனவே உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். சந்திரசேகர ராவின் உடல் நிலை குறித்து அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார் பிரதமர்.
மத்திய அரசின் முடிவை அடுத்து தெலங்கானா தனி மாநிலம் தொடர்பான அனைத்து போராட்டங்களும் கைவிடப்படும் என்று தெரிகிறது.
உண்ணாவிரதம் வாபஸ்
மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து கடந்த 11 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை சந்திரசேகர ராவ் புதன்கிழமை நள்ளிரவு கைவிட்டார். இதையடுத்து கடந்த 11 நாள்களாக ஆந்திரத்தை உலுக்கிய போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.
தொண்டர்கள் மகிழ்ச்சி
தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தொண்டர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சி தெரிவித்தனர். தெலங்கானா பிராந்தியத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர். காங்கிரஸ் கட்சியின் முடிவை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவிடம் தெரிவிப்பதற்காக தில்லியிலிருந்து புதன்கிழமை இரவே ஆந்திர முதல்வர் ரோசய்யா ஹைதராபாத் திரும்பினார்.நீண்ட நாள்களாக உள்ள தெலங்கானா தனி மாநில கோரிக்கை நிறைவேற சந்திரசேகர ராவின் உண்ணாவிரதப் போராட்டம் அடிப்படையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
"இது போதாது"
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. தனி மாநிலத்துக்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமாராவ் கூறினார்.
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது என காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இத் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் புதன்கிழமை இரவு நடந்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது இதை தெரிவித்தார்.
இரண்டு சுற்றுகளாக நடந்த ஆலோசனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் மற்றும் ஆந்திர முதல்வர் ரோசய்யா ஆகியோர் பங்கேற்றனர்.
ஆந்திரத்தில் பற்றி எரியும் தெலங்கானா நெருப்பை அணைக்கும் முயற்சியாக காங்கிரஸ் மேலிடம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தனி மாநிலம் அமைப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முறையான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார்.
சட்டப்பேரவையில் தீர்மானம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற விவரத்தை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரசேகர ராவின் உடல் நலனில் மத்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. அவர் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தெலங்கானா போராட்டம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறுமாறு மாநில முதல்வர் ரோசய்யாவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.
மாணவர்களும் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சந்திரசேகர ராவின் உடல் நிலை குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் மீரா குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தெலங்கானா பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று கோரி மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. சந்திரசேகர ராவுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசே பொறுப்பு என்று பாஜக குற்றம்சாட்டியது.
தெலங்கானா பகுதி எம்.பி.க்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோரும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நிலைமையின் தீவிரத்தை எடுத்துக் கூறினர். தெலங்கானா போராட்டம் ஆந்திரத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னையாக மாறி உள்ளது. எனவே உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். சந்திரசேகர ராவின் உடல் நிலை குறித்து அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார் பிரதமர்.
மத்திய அரசின் முடிவை அடுத்து தெலங்கானா தனி மாநிலம் தொடர்பான அனைத்து போராட்டங்களும் கைவிடப்படும் என்று தெரிகிறது.
உண்ணாவிரதம் வாபஸ்
மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து கடந்த 11 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை சந்திரசேகர ராவ் புதன்கிழமை நள்ளிரவு கைவிட்டார். இதையடுத்து கடந்த 11 நாள்களாக ஆந்திரத்தை உலுக்கிய போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.
தொண்டர்கள் மகிழ்ச்சி
தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தொண்டர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சி தெரிவித்தனர். தெலங்கானா பிராந்தியத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர். காங்கிரஸ் கட்சியின் முடிவை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவிடம் தெரிவிப்பதற்காக தில்லியிலிருந்து புதன்கிழமை இரவே ஆந்திர முதல்வர் ரோசய்யா ஹைதராபாத் திரும்பினார்.நீண்ட நாள்களாக உள்ள தெலங்கானா தனி மாநில கோரிக்கை நிறைவேற சந்திரசேகர ராவின் உண்ணாவிரதப் போராட்டம் அடிப்படையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
"இது போதாது"
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. தனி மாநிலத்துக்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமாராவ் கூறினார்.
Wednesday, December 2, 2009
புதிய விக்கிரமாதித்தன், வேதாளமும் பழைய காதையும்
தனது அதிகாரத்தை ஏற்காமல், விடுதலைக்காகப் போராடிய தனது நாட்டு மக்களையே துரத்தியடித்து அழித்து, அதனையே ஒரு மாபெரும் வெற்றியாக கொண்டாடிய வேதாளம், இலங்கை ஆரண்யத்தில் தனது காட்டாட்சியை நீட்டித்துக் கொள்ள தேர்தலை எதிர்நோக்கியிருந்த நிலையில், தனக்கு கீழிருந்த பிசாசே தன்னை எதிர்த்து நிற்க முடிவெடுத்ததால் ஆடிப்போயுள்ள வேளையில், அதற்கு ஆதரவாக விக்கிரமாதித்தன் களமிறங்கியுள்ளது கொழும்புக் கதையில் ஒரு சுவராஸ்யமான திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை வெளியான நெம்பர் ஒன் தேசிய நாளிதழில் விக்கிரமாதித்தன் எழுதிய தலையங்கக் கதையை விவரம் அறியாதவர் யார் படித்தாலும், விக்கிரமாதித்தனின் 'அக்கறை' புரியாமல் குழம்பியிருப்பார்கள். அப்படிக் குழம்பியிருப்போரை தெளிவுபடுத்துவது விக்கிரமாதித்தனை நன்கு அறிந்த நமது கடமையல்லவா?
வேதாளம் எழுப்பிய எத்தனையோ கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த விக்கிரமாதித்தனைப் பற்றி, அதுவும் அவன் எழுதியுள்ள தலையங்கத்தைப் பற்றி, சில கேள்விகள் எழுப்பாமல் விட்டால், புரியாத கதை படித்த குறை ஏற்படும் அல்லவா?
இலங்கை ஆரண்யத்தை தொடர்ந்து ஆள முடிவு செய்த வேதாளத்தை எதிர்த்து, அதனோடு இணைந்து தமிழர்களை பங்கு போட்டுச் சாகடித்த பிசாசு, தேர்தலில் நிற்பது என்றால், அதுவும் அதற்கு மற்ற எதிர்க்கட்சிக் காட்டேரிகள் ஆதரவு தெரிவிப்பது என்றால் என்ன அர்த்தம்? அப்பட்டமான சந்தர்ப்பாவாதமல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் விக்கிரமாதித்தன்!
அந்த அளவோடு விக்கிரமாதித்தன் நின்றுவிடவில்லை. தனது சிங்களப் பெளத்த பேரினவாதப் பிடியில் இருந்து விடுதலைப் பெற போராடிய தனது நாட்டு மக்களை, அக்கம்பக்கத்து ஆரண்யங்களில் இருந்து ஆயுதங்களைப் பெற்று, கண்மூடித்தனமாக வேதாளம் அழித்தபோது, அதன் கட்டளையை ஏற்றுக் கொன்று குவித்த பிசாசு என்ன பேசியது என்பதை விக்கிரமாதித்தான் இப்போது நினைவுப்படுத்தி காட்டுகிறார்.
“இந்த நாடு சிங்களவர்களுக்கு உரியதே என்று நான் ஆழமாக நம்புகிறேன், தமிழர்கள் தாங்கள் சிறுபான்மையினர் என்பதை உணர்ந்து எங்களோடு வாழலாம். ஆனால் சிறுபான்மை என்ற காரணத்தைக் காட்டி தங்களுக்கு உரிமையற்ற எதையும் கேட்கக்கூடாது” என்று இன அழிப்பு உச்சக்கட்டத்தில் நடந்தபோது பிசாசு பேசியதைச் சுட்டிக்காட்டி, இப்படி தனது சிங்கள இன வெறியை அம்பலப்படுத்திய பிசாசு, இன்று அப்படியே மாற்றிப் பேசுகிறது என்று அங்கலாய்க்கிறார் விக்கிரமாதித்தன்.
என்னே விநோதம்! அன்றைக்கு ஏன் இந்த இனவெறி பேச்சைக் கண்டித்து விக்கிரமாதித்தன் தலையங்கம் தீட்டவில்லை என்று கேட்கத் தோன்றுகிறதா? அப்படி உங்கள் மனதில் கேள்வி எழுந்தால் விக்கிரமாதித்தனை இன்னும் நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள்.
இன்னும் ஒரு படி மேலே சென்று அன்று அந்த பிசாசு கூறிய மற்றோன்றையும் விக்கிரமாதித்தன் நினைவுப்படுத்திக்காட்டுகிறார். தனது கதைகளைப் படிக்கும் வாசகர்கள் மறந்திருப்பார்கள் அல்லவா? நினைவுப்படுத்த வேண்டாமா? “தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் ஜோக்கர்கள்” என்று பிசாசு கூறியதையும் சுட்டிக் காட்டுகிறார். அதற்காகத் தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவர்களே கூட பெரிதாக கோபித்துக் கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டாத விக்கிரமாதித்தன், இவ்வாறு கூறி வேதாள அரசிற்கு ஒரு இராஜரீதியான சங்கடத்தை ஏற்படுத்தினார் என்று கசிந்துருகுகிறார் இப்போது.
அதுமட்டுமல்ல, சுதந்திரப் வேங்கைகளை முழுமையாக வீழத்தி வெற்றிகண்டுள்ள நிலையில், 75 விழுக்காடு சிங்களவர்களுக்கும், மீதமுள்ள தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நிலையற்ற உறவை, அதிகாரப் பகிர்வு, சமத்துவம், நீதி ஆகிய அடிப்படைகளில் மறுவரையறை செய்ய வேண்டிய வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிசாசு தனக்கு எதிராக களத்தில் குதித்திருப்பதால் வேதாளம் சற்றும் மனந்தளரவில்லை என்று அதன் பெருமையைக் கூறி புளங்காகிதம் அடைகிறார் விக்கிரமாதித்தன்.
தனது பதவிக் காலம் இன்னுமும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையிலும், எதற்காகத் தேர்தலை உடனே நடத்த வேதாளம் முன்வந்துள்ளது தெரியுமா? வடக்கில் வாழும் மக்களுக்கு வேங்கைகளால் பறிக்கப்பட்ட வாக்குச் சுதந்திரத்தை மீண்டும் அளிப்பதற்குத்தானாம்! யே..அப்பா, எவ்வளவு பெரிய தியாகத்தை செய்கிறது வேதாளம்! மெய் சிலிர்க்க வைக்கிறார் விக்கிரமாதித்தன். வடக்கில் வாழும் மக்கள் வாக்குச் சுதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டுமே என்பதற்காகவே தேர்தலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடத்துகிறதாம் வேதாளம். ஆஹா..ஆஹா...வேதாளத்தின் கருணையே கருணை.
வடக்கில் வாழும் மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் குண்டுகள் வீசப்பட்டதா? பீரங்கியால் சுட்டால் மட்டும் போதாது என்பதற்காக, விமானங்களில் இருந்தும் குண்டுகள் பொழிப்பட்டதா? வன்னியில் ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் வரை அவர்களை துரத்தித் துரத்திக் கொன்றது வாக்குரிமை அளிக்கத்தானா? ‘எல்லாம் முடிந்த’ப் பிறகும் அவர்களை வன்னி முகாம்களில் சோறு தண்ணிக் காட்டாமல் முள்வேலிகளுக்குள் முடக்கி வைத்ததும், இன்னமும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேரை அடைத்து வைத்திருப்பதும் வாக்குரிமை சுதந்திரத்திற்குத்தானா? அவர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் சிங்களர்களை குடியேற்றம் செய்வது கூட, வடக்கு மக்களுக்கு வாக்குரிமை வழங்கத்தானா? அடேயப்பா... இவ்வளவு விவரங்களையும் இத்தனை நாள் விக்கரமாதித்தன் தெரிவிக்காமல் மறைத்துதான் ஏனோ? இது புரியாமல் தமிழர்களும், உலக நாடுகளும் என்னவெல்லாம் பேசிவருகின்றன... சே!
வேதாளத்தின் நோக்கமென்ன? அதிகாரப் பகிர்வு, சமத்துவம், நீதி! சொல்கிறார் விக்கிரமாதித்தன். இதெல்லாம் தான் எடுத்த பேட்டியில் வேதாளம் சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள், அதெல்லாம் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கில் கேட்கப்படாமலோ அல்லது சொல்லப்படாமலோ விடப்பட்டிருக்கலாம். வேதாளத்தின் நோக்கம் சமத்துவமே! நம்புங்கள், ஏனென்றால் இப்படிப்பட்ட கதைகளை அந்த வாசகர்கள் நம்புவதால்தானே அது நெம்பர் ஒன் தேசிய நாளிதழாக திகழ்கிறது!
அது சரி, அடுத்தக் காட்டு அரசியல் விவகாரத்தில் விக்கிரமாதித்தனுக்கு என்ன இவ்வளவு அக்கரை என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு கேள்வி எழலாம், ஆனால் விடை அவ்வளவு சாதாரணமானதல்ல. இதில் மிகப் பெரிய பன்னாட்டு அரசியல் அடங்கியுள்ளது, இல்லையென்றால், விக்கிரமாதித்தன் கூந்தல் இந்த அளவிற்கு ஆடுமா?
இலங்கை ஆரண்யத்தை, அதன் ஆட்சியை தனது பிடிக்குள் கொண்டுவந்துள்ளது பரத நாட்டின் வடக்கே ஆட்சி செய்யும் சிகப்புச் சாத்தான். அதில் விக்கிரமாதித்தன் உபகாரம் மிகவும் அதிகம். இலங்கை ஆரண்யத்தை சிகப்புச் சாத்தான் பிடியில் இருந்து தனது பிடிக்குள் கொண்டு வர உலகப் பெரும் ராட்ஷசன் முயன்று வருகிறது. அதன் ஆதரவு பெற்ற குட்டி அரசியல் காட்டேரிகளின் ஆதரவுடன்தான் பிசாசு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் பரத நாட்டின் நிலை என்ன என்பதில் வேதாளத்திற்குச் சந்தேகம். அதனைத் தீர்க்கத்தான் பரத நாட்டு அமைச்சனின் இலங்கை ஆரண்ய விஜயம் நடந்தது. இருந்தாலும் சந்தேகம் தீரவில்லை, காரணம்: ராட்ஷசன் பரதநாடுடன் கொண்டுள்ள ஸ்ட்ராஜிக் ரிலேசன்ஷிப்.
இந்தச் சூழலில், பிசாசு வெற்றி பெற்றால் இலங்கை ஆரண்யம் ராட்ஷசன் கைக்குப் போய்விடுமே என்பதுதான் விக்கிரமாத்தித்தனின் கவலை. கடந்த பல ஆண்டுகளாக கொழும்பு ஆரண்யத்திற்குச் சென்று வேதாளத்தை அடிக்கடி சந்தித்ததால் ஏற்பட்ட நல்லுறவு எங்கே பயன்றறுப் போய்விடுமோ என்ற விசனம் விக்கிரமாதித்தனுக்கு. அதனால் விளைந்த எழுத்தோவியம்தான் இன்று காலையில் நாம் படித்தது. இதில் மக்கள் நலனோ அல்லது உலக நலனோ உள்ளது என்று யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது.
இன்று காலை வெளியான நெம்பர் ஒன் தேசிய நாளிதழில் விக்கிரமாதித்தன் எழுதிய தலையங்கக் கதையை விவரம் அறியாதவர் யார் படித்தாலும், விக்கிரமாதித்தனின் 'அக்கறை' புரியாமல் குழம்பியிருப்பார்கள். அப்படிக் குழம்பியிருப்போரை தெளிவுபடுத்துவது விக்கிரமாதித்தனை நன்கு அறிந்த நமது கடமையல்லவா?
வேதாளம் எழுப்பிய எத்தனையோ கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த விக்கிரமாதித்தனைப் பற்றி, அதுவும் அவன் எழுதியுள்ள தலையங்கத்தைப் பற்றி, சில கேள்விகள் எழுப்பாமல் விட்டால், புரியாத கதை படித்த குறை ஏற்படும் அல்லவா?
இலங்கை ஆரண்யத்தை தொடர்ந்து ஆள முடிவு செய்த வேதாளத்தை எதிர்த்து, அதனோடு இணைந்து தமிழர்களை பங்கு போட்டுச் சாகடித்த பிசாசு, தேர்தலில் நிற்பது என்றால், அதுவும் அதற்கு மற்ற எதிர்க்கட்சிக் காட்டேரிகள் ஆதரவு தெரிவிப்பது என்றால் என்ன அர்த்தம்? அப்பட்டமான சந்தர்ப்பாவாதமல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் விக்கிரமாதித்தன்!
அந்த அளவோடு விக்கிரமாதித்தன் நின்றுவிடவில்லை. தனது சிங்களப் பெளத்த பேரினவாதப் பிடியில் இருந்து விடுதலைப் பெற போராடிய தனது நாட்டு மக்களை, அக்கம்பக்கத்து ஆரண்யங்களில் இருந்து ஆயுதங்களைப் பெற்று, கண்மூடித்தனமாக வேதாளம் அழித்தபோது, அதன் கட்டளையை ஏற்றுக் கொன்று குவித்த பிசாசு என்ன பேசியது என்பதை விக்கிரமாதித்தான் இப்போது நினைவுப்படுத்தி காட்டுகிறார்.
“இந்த நாடு சிங்களவர்களுக்கு உரியதே என்று நான் ஆழமாக நம்புகிறேன், தமிழர்கள் தாங்கள் சிறுபான்மையினர் என்பதை உணர்ந்து எங்களோடு வாழலாம். ஆனால் சிறுபான்மை என்ற காரணத்தைக் காட்டி தங்களுக்கு உரிமையற்ற எதையும் கேட்கக்கூடாது” என்று இன அழிப்பு உச்சக்கட்டத்தில் நடந்தபோது பிசாசு பேசியதைச் சுட்டிக்காட்டி, இப்படி தனது சிங்கள இன வெறியை அம்பலப்படுத்திய பிசாசு, இன்று அப்படியே மாற்றிப் பேசுகிறது என்று அங்கலாய்க்கிறார் விக்கிரமாதித்தன்.
என்னே விநோதம்! அன்றைக்கு ஏன் இந்த இனவெறி பேச்சைக் கண்டித்து விக்கிரமாதித்தன் தலையங்கம் தீட்டவில்லை என்று கேட்கத் தோன்றுகிறதா? அப்படி உங்கள் மனதில் கேள்வி எழுந்தால் விக்கிரமாதித்தனை இன்னும் நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள்.
இன்னும் ஒரு படி மேலே சென்று அன்று அந்த பிசாசு கூறிய மற்றோன்றையும் விக்கிரமாதித்தன் நினைவுப்படுத்திக்காட்டுகிறார். தனது கதைகளைப் படிக்கும் வாசகர்கள் மறந்திருப்பார்கள் அல்லவா? நினைவுப்படுத்த வேண்டாமா? “தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் ஜோக்கர்கள்” என்று பிசாசு கூறியதையும் சுட்டிக் காட்டுகிறார். அதற்காகத் தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவர்களே கூட பெரிதாக கோபித்துக் கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டாத விக்கிரமாதித்தன், இவ்வாறு கூறி வேதாள அரசிற்கு ஒரு இராஜரீதியான சங்கடத்தை ஏற்படுத்தினார் என்று கசிந்துருகுகிறார் இப்போது.
அதுமட்டுமல்ல, சுதந்திரப் வேங்கைகளை முழுமையாக வீழத்தி வெற்றிகண்டுள்ள நிலையில், 75 விழுக்காடு சிங்களவர்களுக்கும், மீதமுள்ள தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நிலையற்ற உறவை, அதிகாரப் பகிர்வு, சமத்துவம், நீதி ஆகிய அடிப்படைகளில் மறுவரையறை செய்ய வேண்டிய வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிசாசு தனக்கு எதிராக களத்தில் குதித்திருப்பதால் வேதாளம் சற்றும் மனந்தளரவில்லை என்று அதன் பெருமையைக் கூறி புளங்காகிதம் அடைகிறார் விக்கிரமாதித்தன்.
தனது பதவிக் காலம் இன்னுமும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையிலும், எதற்காகத் தேர்தலை உடனே நடத்த வேதாளம் முன்வந்துள்ளது தெரியுமா? வடக்கில் வாழும் மக்களுக்கு வேங்கைகளால் பறிக்கப்பட்ட வாக்குச் சுதந்திரத்தை மீண்டும் அளிப்பதற்குத்தானாம்! யே..அப்பா, எவ்வளவு பெரிய தியாகத்தை செய்கிறது வேதாளம்! மெய் சிலிர்க்க வைக்கிறார் விக்கிரமாதித்தன். வடக்கில் வாழும் மக்கள் வாக்குச் சுதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டுமே என்பதற்காகவே தேர்தலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடத்துகிறதாம் வேதாளம். ஆஹா..ஆஹா...வேதாளத்தின் கருணையே கருணை.
வடக்கில் வாழும் மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் குண்டுகள் வீசப்பட்டதா? பீரங்கியால் சுட்டால் மட்டும் போதாது என்பதற்காக, விமானங்களில் இருந்தும் குண்டுகள் பொழிப்பட்டதா? வன்னியில் ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் வரை அவர்களை துரத்தித் துரத்திக் கொன்றது வாக்குரிமை அளிக்கத்தானா? ‘எல்லாம் முடிந்த’ப் பிறகும் அவர்களை வன்னி முகாம்களில் சோறு தண்ணிக் காட்டாமல் முள்வேலிகளுக்குள் முடக்கி வைத்ததும், இன்னமும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேரை அடைத்து வைத்திருப்பதும் வாக்குரிமை சுதந்திரத்திற்குத்தானா? அவர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் சிங்களர்களை குடியேற்றம் செய்வது கூட, வடக்கு மக்களுக்கு வாக்குரிமை வழங்கத்தானா? அடேயப்பா... இவ்வளவு விவரங்களையும் இத்தனை நாள் விக்கரமாதித்தன் தெரிவிக்காமல் மறைத்துதான் ஏனோ? இது புரியாமல் தமிழர்களும், உலக நாடுகளும் என்னவெல்லாம் பேசிவருகின்றன... சே!
வேதாளத்தின் நோக்கமென்ன? அதிகாரப் பகிர்வு, சமத்துவம், நீதி! சொல்கிறார் விக்கிரமாதித்தன். இதெல்லாம் தான் எடுத்த பேட்டியில் வேதாளம் சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள், அதெல்லாம் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கில் கேட்கப்படாமலோ அல்லது சொல்லப்படாமலோ விடப்பட்டிருக்கலாம். வேதாளத்தின் நோக்கம் சமத்துவமே! நம்புங்கள், ஏனென்றால் இப்படிப்பட்ட கதைகளை அந்த வாசகர்கள் நம்புவதால்தானே அது நெம்பர் ஒன் தேசிய நாளிதழாக திகழ்கிறது!
அது சரி, அடுத்தக் காட்டு அரசியல் விவகாரத்தில் விக்கிரமாதித்தனுக்கு என்ன இவ்வளவு அக்கரை என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு கேள்வி எழலாம், ஆனால் விடை அவ்வளவு சாதாரணமானதல்ல. இதில் மிகப் பெரிய பன்னாட்டு அரசியல் அடங்கியுள்ளது, இல்லையென்றால், விக்கிரமாதித்தன் கூந்தல் இந்த அளவிற்கு ஆடுமா?
இலங்கை ஆரண்யத்தை, அதன் ஆட்சியை தனது பிடிக்குள் கொண்டுவந்துள்ளது பரத நாட்டின் வடக்கே ஆட்சி செய்யும் சிகப்புச் சாத்தான். அதில் விக்கிரமாதித்தன் உபகாரம் மிகவும் அதிகம். இலங்கை ஆரண்யத்தை சிகப்புச் சாத்தான் பிடியில் இருந்து தனது பிடிக்குள் கொண்டு வர உலகப் பெரும் ராட்ஷசன் முயன்று வருகிறது. அதன் ஆதரவு பெற்ற குட்டி அரசியல் காட்டேரிகளின் ஆதரவுடன்தான் பிசாசு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் பரத நாட்டின் நிலை என்ன என்பதில் வேதாளத்திற்குச் சந்தேகம். அதனைத் தீர்க்கத்தான் பரத நாட்டு அமைச்சனின் இலங்கை ஆரண்ய விஜயம் நடந்தது. இருந்தாலும் சந்தேகம் தீரவில்லை, காரணம்: ராட்ஷசன் பரதநாடுடன் கொண்டுள்ள ஸ்ட்ராஜிக் ரிலேசன்ஷிப்.
இந்தச் சூழலில், பிசாசு வெற்றி பெற்றால் இலங்கை ஆரண்யம் ராட்ஷசன் கைக்குப் போய்விடுமே என்பதுதான் விக்கிரமாத்தித்தனின் கவலை. கடந்த பல ஆண்டுகளாக கொழும்பு ஆரண்யத்திற்குச் சென்று வேதாளத்தை அடிக்கடி சந்தித்ததால் ஏற்பட்ட நல்லுறவு எங்கே பயன்றறுப் போய்விடுமோ என்ற விசனம் விக்கிரமாதித்தனுக்கு. அதனால் விளைந்த எழுத்தோவியம்தான் இன்று காலையில் நாம் படித்தது. இதில் மக்கள் நலனோ அல்லது உலக நலனோ உள்ளது என்று யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது.
Subscribe to:
Posts (Atom)