Tuesday, March 23, 2010

கொலை-கொள்ளை ஒழிப்புதினம்!​​ விப​சார ஒழிப்புதினம்!!​ உண்மை பேசும் தினம்!!!

ஊழல் என்​பது உல​க​ளா​விய விஷ​ய​மா​கி​விட்​டது என்​ப​தால் அதை அன்​றாட வாழ்க்​கை​யின் அம்​ச​மா​கவே பெரும்​பா​லோர் ஏற்​றுக்​கொண்டு விட்​ட​தா​கத் தோன்​று​கி​றது.​ ராஜா ராணி காலத்தி​லி​ருந்து ஆட்​சி​யா​ளர்​க​ளுக்கு நெருக்​க​மாக இருந்​த​வர்​கள் அதி​கப்​ப​டி​யான சலு​கை​களை அனு​ப​விப்​பது என்​பது புதிய விஷ​ய​மல்ல.​ அதே​போல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளில் பலர் குடி​மக்​க​ளின் நல​னைப் பற்​றியே கவ​லைப்​ப​டா​மல் சகல சௌ​பாக்​கி​யங்​க​ளு​டன் ராஜ​போ​க​மாக ஊதாரி வாழ்க்கை வாழ்ந்த சரித்​தி​ரம் உல​க​ளா​விய ஒன்று.​ அர​சி​யல் தலை​வர்​க​ளின் ஊழ​லைக்​கூ​டப் புரிந்து கொள்​ள​லாம்.​ தேர்​த​லுக்​குச் செலவு செய்த பணத்தை லஞ்​சம் வாங்கி ஈடு​கட்டி,​​ அடுத்த தேர்​தல்​க​ளுக்​கான பணத்​தைச் சேர்த்து வைக்க முயற்​சிக்​கி​றார்​கள் என்று சமா​தா​னம் சொல்ல முடி​யும்.​ கொள்ளை அடித்​துக் கொள்​ள​வும்,​​ லஞ்​சம் வாங்​கிக் கொள்​ள​வும் மக்​கள் அவர்​க​ளுக்கு வாக்​க​ளித்து அனு​மதி வழங்கி இருக்​கி​றார்​கள் என்று மன​தைத் தேற்​றிக் கொள்​ள​லாம்.​

ஆனால்,​​ மக்​க​ளின் வரிப்​ப​ணத்​தில் சம்​ப​ளம் வாங்​கும் அரசு அதி​கா​ரி​கள்,​​ மக்​க​ளி​டமே லஞ்​சம் வாங்​கு​வது எந்த விதத்​தில் நியா​யம்?​ வாங்​கும் சம்​ப​ளம் தங்​க​ளது தகு​திக்​கும் திற​மைக்​கும் ஏற்​ற​தாக இல்​லை​யென்​றால் ராஜி​நாமா செய்​து​விட்டு வேறு வேலை பார்த்​துக் கொள்​வ​து​தானே?​ மக்​க​ளாட்​சி​யில் மக்​க​ளுக்​காக உழைப்​ப​தற்​காக மக்​க​ளால் சம்​ப​ளம் கொடுத்து நிய​மிக்​கப்​பட்​டி​ருக்​கும் வேலைக்​கா​ரர்​கள்,​​ மக்​க​ளின் கோரிக்​கையை நிறை​வேற்ற மக்​க​ளி​டமே லஞ்​சம் வாங்​கு​வது தடுக்​கப்​பட்​டால் ஒழிய,​​ லஞ்​ச​மும் ஊழ​லும் அன்​றாட வாழ்க்​கை​யின் ​ அங்​க​மா​கத் தொடர்​வ​தைத் தடுக்க முடி​யாது.​

ஆட்சி முறை மாறி​யதே தவிர மன்​ன​ராட்​சி​யின் தவ​று​க​ளும் குறை​பா​டு​க​ளும் களை​யப்​பட்​ட​னவா என்று கேட்​டால் உதட்​டைப் பிதுக்க வேண்டி இருக்​கி​றது.​ பரம்​பரை ஆட்​சிக்​குக்​கூட மக்​க​ளாட்​சி​யில் முற்​றுப்​புள்ளி வைக்க முடி​யாத நிலைமை.​ ஜார் மற்​றும் பதி​னெட்​டாம் லூயி மன்​னர்​க​ளுக்​குப் பதி​லாக ஹிட்​லர்,​​ முசோ​லினி,​​ இடி அமின் என்று சர்​வா​தி​கா​ரி​க​ளும்,​​ மக்​க​ளைப் பற்​றிய கவ​லையே இல்​லா​மல் தங்​க​ளது மனம் போன போக்​கில் நடந்த ஆட்​சி​யா​ளர்​க​ளும் மக்​க​ளாட்​சி​யி​லும் தொடர்​வ​து​தான் வேடிக்கை.​ கடந்த நான்கு ஆண்​டு​க​ளில்,​​ சுமார் 1000 அரசு உயர் அதி​கா​ரி​கள் மற்​றும் ஊழி​யர்​கள்​மீது வழக்​குத் தொட​ரப்​பட்​டி​ருக்​கி​றது.​ இவர்​க​ளில் சிலர் சிறைத் தண்​ட​னை​யும் அனு​ப​வித்​த​வர்​கள்.​ ஆனா​லும் இவர்​க​ளில் ஒன்​றி​ரண்டு கணக்​கர்​க​ளும்,​​ கடை​நிலை ஊழி​யர்​க​ளும் தவிர யாரும் பதவி நீக்​கம் செய்​யப்​ப​ட​வில்லை.​ வழக்​கு​கள் தொட​ரப்​பட்டு நடந்து கொண்​டி​ருக்​கின்​ற​னவே தவிர தீர்ப்பு எழு​தப்​ப​ட​வில்லை.​ இவர்​க​ளைப் பதவி நீக்​கம் செய்ய மேல​தி​கா​ரி​கள் தயா​ரு​மில்லை.​ பிகா​ரில் மட்​டு​மல்ல,​​ இந்​தியா முழு​வ​துமே உள்ள நிலைமை இது​தான்.​

ஆட்​சி​யை​யும் அதி​கா​ரத்​தை​யும் ஒரு சிலர் பரம்​பரை பாத்​தி​யதை கொண்​டாடி வரு​வ​தை​யும்,​​ குடி​மக்​க​ளின் நல்​வாழ்​வைப் பற்​றிய சிந்​த​னையே இல்​லா​மல் ஆட்​சி​யா​ளர்​க​ளும் அவர்​க​ளுக்கு நெருக்​க​மா​ன​வர்​க​ளும் செயல்​பட்டு வரு​வ​தை​யும் பார்த்து மக்​கள் கொதித்து எழுந்​த​தன் விளை​வு​தான் மன்​னர் ஆட்​சிக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்​பட்​ட​தும்,​​ மக்​க​ளாட்சி மலர்ந்​த​தும்.​ நியா​ய​மா​கப் பார்த்​தால் மக்​க​ளாட்​சி​யில் லஞ்​சம்,​​ ஊழல்,​​ அதி​கார துஷ்​பி​ர​யோ​கம்,​​ ஒரு சிலர் தனிச் சலு​கை​கள் பெறு​வது போன்​ற​வற்​றுக்கே இடம் இருக்​க​லா​காது.​ பிகா​ரில் முதல்​வர் நிதீஷ் குமார் பதவி ஏற்​ற​தும் ஊழ​லுக்கு எதி​ரா​கக் கடும் நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்​டார்.​ லஞ்​சம் வாங்​கும்​போது கையும் கள​வு​மா​கப் பிடி​பட்டு,​​ ​ கைது செய்​யப்​பட்ட 365 அரசு ஊழி​யர்​க​ளில் 300 பேருக்​கும் அதி​க​மா​ன​வர்​கள் கோடீஸ்​வ​ரர்​கள் என்​பது ​ விசா​ர​ணை​யில் தெரிய வந்​தது.​

வளர்ச்சி அடைந்த நாடு​கள்,​​ வளர்ச்சி அடை​யாத நாடு​கள் என்​கிற வேறு​பாடே இல்​லா​மல்,​​ மக்​க​ளாட்சி,​​ சர்​வா​தி​கார ஆட்சி,​​ ராணுவ ஆட்சி என்​றெல்​லாம் வித்​தி​யா​சம் பாரா​மல் எங்​கும் எல்லா இடத்​தும் நீக்​க​மற நிறைந்​தி​ருக்​கும் பரம்​பொ​ருள்​போல லஞ்​ச​மும்,​​ ஊழ​லும்,​​ அதி​கார துஷ்​பி​ர​யோ​க​மும்,​​ தனி​ந​பர் சலு​கை​க​ளும் பரந்து விரிந்​தி​ருப்​பது மனித சமு​தா​யத்​துக்கே களங்​க​மா​க​வும் அவ​மா​ன​மா​க​வும் தொடர்​கி​றது.​

லஞ்ச ஊழ​லைப் பொறுத்​த​வரை ஒரு வேடிக்​கை​யான விஷ​யம் என்​ன​வென்​றால்,​​ இது படித்​த​வர்​க​ளின் தனிச்​சொத்து என்​ப​து​தான்.​ கிரா​மங்​க​ளில் படிக்​காத ஏழை விவ​சா​யியோ,​​ தொழி​லா​ளியோ லஞ்​சம் வாங்​க​வும்,​​ ஊழல் செய்​ய​வும் வாய்ப்பே இல்​லா​த​வர்​கள்.​ அரசு அலு​வ​லர்​க​ளா​னா​லும்,​​ காவல்​து​றை​யி​ன​ரா​னா​லும் அவர்​கள் படித்​த​வர்​கள்.​ அவர்​கள்​தான் லஞ்​சம் வாங்​கு​கி​றார்​கள்.​ அப்​பாவி ஏழை​க​ளும்,​​ படிப்​ப​றி​வில்​லா​த​வர்​க​ளும்,​​ சாமா​னி​யர்​க​ளும்,​​ நடுத்​தர வர்க்​கத்​தி​ன​ரும் இந்​தப் படித்த "கன'வான்​க​ளின் பேரா​சைக்​குத் தீனி போட வேண்​டிய நிர்​பந்​தம்.​ ஐம்​ப​து​க​ளில் உள்​துறை அமைச்​ச​ராக இருந்த குல்​ஜா​ரி​லால் நந்​தா​வில் தொடங்கி எத்​தனை எத்​த​னையோ பிர​த​மர்​க​ளும்,​​ உள்​துறை அமைச்​சர்​க​ளும்,​​ அர​சி​யல் தலை​வர்​க​ளும் ஊழ​லுக்கு எதி​ரா​கப் போரை அறி​வித்து விளம்​ப​ரம் தேடிக் கொண்​டார்​களே தவிர ஊழல் ஒழி​ய​வும் இல்லை.​ ஊழ​லுக்கு எதி​ரான வாய் சவ​டால் குறை​ய​வு​மில்லை.​

உலக ஊழல் ஒழிப்பு தினம் என்று ஆண்​டுக்​கொரு முறை ஊழ​லுக்கு எதி​ரான விழிப்​பு​ணர்வை மக்​கள் மத்​தி​யில் ஏற்​ப​டுத்​து​வது என்​பதே அவ​மா​ன​க​ர​மான விஷ​யம்.​ கொலை கொள்ளை ஒழிப்பு தினம்,​​ விப​சார ஒழிப்பு தினம்,​​ உண்மை பேசும் தினம் என்​றெல்​லாம்​கூட ஏற்​ப​டுமோ என்று பய​மாக இருக்​கி​றது.​

Tuesday, March 16, 2010

தமிழ்மொழியை இந்தி ஆதிக்கத்தின் ஆக்டோபஸ் கரங்களிலிருந்து...

திராவிட இயக்கங்கள் மக்களின் மகத்தான ஆதரவுடன் இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து,​​ இருமொழிக் கொள்கையை இறுகப் பற்றிக்கொண்டு தமிழனின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பயணத்தைத் தொடங்கி 42 ஆண்டுகள் ஆகின்றன. மதராஸ் மாநிலம் என்றைக்கோ தமிழ்நாடாகிவிட்டது,​​ தமிழ்வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டும் ​வருகிறது,​​ திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினால் வரிச்சலுகையும் தரப்படுகிறது (பாவம், சினிமாக்காரர்கள் ஏழைகள் என்பதால்!),​​ ஐ.ஏ.எஸ். தேர்வைக்கூட தமிழில் எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளதாகப் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.​ தில்லி அதிகார பீடத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கும் சிம்மாசனம் போடப்பட்டுள்ளது -​ இவை அனைத்தும் தமிழனின் உயர்வின் அடையாளம் என்று எண்ணத்தோன்றுவது இயற்கைதான்.

ஆனால் விற்க முடிந்ததையெல்லாம் விற்றுப் பெற்ற கல்வியை வைத்து,​​ மத்திய அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கவே முடியாத சூழ்நிலையில் இருக்கின்ற தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஆட்சியாளர்கள் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கவே தகுதியற்றவர்கள் என்ற நிலை கடந்த கால் நூற்றாண்டாக நிலவி வருகிறது.​ மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை நிலைப்பாட்டினால் இந்தியாவிலேயே பாதிக்கப்படுகிற ஒரே இனம் இந்தி படிக்காத தமிழினம் என்பதைக் கேட்கும்போது நெஞ்சு பதைக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச மொழி உரிமைகளே மறுக்கப்பட்டுவருகின்ற சூழ்நிலையில்,​​ நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு கொடுத்த இந்தி பேசாத மக்கள்மீது அவர்களாக விரும்பிக் கேட்கும்வரை இந்தி திணிக்கப்படாது என்ற உறுதிமொழியை அவருக்குப்பின் வந்த மத்திய ஆட்சியாளர்களும் பின்பற்றுவர் என்று எண்ணி,​​ தமிழக ஆட்சியாளர்கள் வாளாதிருந்ததால்,​​ அதுவே இப்போது தமிழர்களின் தலைக்குமேல் வாளாகத் தொங்குகிறது.​ ஒருபுறம் இந்திய மொழிகளின் மேம்பாட்டுக்குத் தாராள நிதி அளிப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசு,​​ மறுபுறம் மத்திய அரசுப் பணிகளுக்கு இந்தியைக் கட்டாயமாக்கும் ஏகாதிபத்திய ஏவல்களை ஓசைப்படாமல் செய்துவருகிறது.

1965-ம் ஆண்டு முதல் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்ற கேந்திரிய வித்யாலயா என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பள்ளிகள் நாடுமுழுவதிலும் 981 இருக்கின்றன.​ இவற்றில் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.​ 1986-ம் ஆண்டுவரை இந்தப் பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் இந்தி படித்திருக்கவேண்டும் என்று கேட்கப்பட்டதில்லை.​ 1986-ம் ஆண்டுக்குப்பிறகு இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு இந்தி படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.​ ​

அதேபோல் 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் தொடங்கப்பட்ட நவோதயா பள்ளிகள் எனப்படும் மாதிரிப் பள்ளிகள் இந்தியா முழுவதும் 567 இருக்கின்றன.​ மத்திய ஆட்சியாளர்கள் இப்பள்ளிகள் மூலம் மும்மொழிக் கொள்கையை முன்மொழிந்ததால் இவை இதுவரை தமிழ்நாட்டில் வழிமொழியப்படவில்லை.​ இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கும் இந்தி அறிவு கட்டாயத் தேவையாக உள்ளது.​ 1986-ம் ஆண்டு வரை,​​ அதாவது 21 ஆண்டுகள் இந்தி படிக்காத தகுதியான தமிழர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இப்பள்ளிகளில் திறம்படப் பணியாற்றி நல்லாசிரியர் விருதுகள்கூடப் பெறமுடிந்தது.​ இதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத மத்திய அரசு இந்தியைக் கட்டாயமாக்கி,​​ மெத்தப்படித்த தமிழ் இளைஞர்கள்கூட விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.

நடப்பு ஆண்டில் மட்டும் மத்திய அரசின் இந்தப் பள்ளிகளில் 6037 ஆசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.​ ஆனால் படித்த தமிழ் இளைஞர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலாத திக்கற்றவர்களாக இருக்கின்றனர்.​ கூட்டாட்சித் தத்துவத்துக்கே வேட்டு வைக்கிற மத்திய அரசின் இந்த முடிவால் கடந்த 23 ஆண்டுகளில் பல ஆயிரம் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழந்து நிற்கிறார்கள் என்பது உண்மை.​ ​ ​

மத்திய கல்வித்துறையின் ஒரு பிரிவிலேயே தமிழர்கள் இந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றால்,​​ மத்திய அரசின்கீழ்வரும் மற்ற எந்தெந்தத் துறைகளில் தமிழர்கள் இப்படிப் புறந்தள்ளப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே ​ மலைப்பு மேலிடுகிறது.​ இந்தி படிக்காதவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று சொல்லுகிற கயமைக்குச் சொந்தக்காரர்களைவிட,​​ இந்தி படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்திய மொழிவெறியர்களே மேலானவர்கள் அல்லவா?​ இப்படித் ​ தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவரும் தமிழ் இளைஞர்களுக்கு அவர்களின் உரிமையை மீட்டெடுத்துக் கொடுக்க கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழக ஆட்சியாளர்கள் யாரும் முதலடிகூட எடுத்துவைக்கவில்லையென்பதுதான் வேதனையின் உச்சம்.​ திராவிட அரசுகள் தொடர்ந்து கடைபிடித்துவரும் இருமொழிக் கொள்கையின் காரணத்தால் இந்தி படிக்காமல் இருந்துவிட்ட இளைஞர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறபோது,​​ கன்றின் குரல் கேட்ட தாய்போல் ஓடோடிச் சென்று அவர்களின் உரிமையை மீட்டுக்கொடுப்பது மாநில அரசின் கடமையல்லவா?​ இந்தி படிக்கவில்லையென்றால் மத்திய அரசில் வேலையில்லை என்று சொல்வதைவிட,​​ மத்திய அரசின் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் தமிழர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று ஒருவரி சேர்த்துவிடலாமே!​ ​

கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவானது இந்திய சட்டக் குழுவிடம் ஒரு பரிந்துரையை அளித்தது.​ அதில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348-ஐ திருத்தி,​​ உச்ச நீதிமன்றத்திலும்,​​ உயர் நீதிமன்றங்களிலும் இந்தியில் அலுவல் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.​ சட்டக்குழுவின் ​ தற்போதைய தலைவரான நீதியரசர் ஏஆர்.​ லட்சுமணன் அந்தப் பரிந்துரையை கடந்த ஆண்டு அடியோடு நிராகரித்தார்.​ இவ்வாறு செப்படி வித்தைகள் செய்து இந்தியைத் தூக்கிப்பிடிக்க வடபுலத்தவர் மேற்கொள்ளும் முயற்சிகளின் முனை முறிந்துபோகச் செய்வதற்கான ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இல்லாதது வேதனைக்குரியது.​ ​

தமிழ்வழிக் கல்விக்கொள்கையால் தம் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பை இழந்துநிற்கும் ​ தமிழ் இளைஞர்களுக்கு,​​ மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் சமீபத்திய அறிவிப்பு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.​ ரயில்வே தேர்வுகளை இனி அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என்று கடந்த அக்டோபர் 5-ம் தேதி அவர் தெரிவித்து,​​ அதை இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே தொடங்க உத்தரவிட்டிருக்கிறார்.​ கடந்த பல ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பங்கேற்று இருந்த,​​ இருக்கிற தமிழ்நாட்டைச் சார்ந்த எந்த அமைச்சரும் தாய்மொழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட எங்கும் வைத்ததாகத் தெரியவில்லை.​ மம்தா பானர்ஜிக்கு மாத்திரம் இது எப்படி சாத்தியப்பட்டது?​ மம்தா பானர்ஜி என்ன வங்காளிகளின் வழிபடு தெய்வமான துர்க்கையைப் போன்று பத்துக் கைகளும் பராசக்தி அவதாரமுமாகவா இருக்கிறார்?​ எல்லா வங்காளிகளையும் போலவே தாய்மொழிப்பற்று அவருடைய உதிரத்தில் தோய்ந்து கிடக்கிறது.​ தமிழர்களிடத்தில் தாய்மொழிப்பற்று தேய்ந்து கிடக்கிறது !​ ​

தமிழ்மொழியை இந்தி ஆதிக்கத்தின் ஆக்டோபஸ் கரங்களிலிருந்து காத்து,​​ அதை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற உணர்வுபூர்வமான சிந்தனை உச்சி முகர்ந்து மெச்சத்தக்கதே.​ தாய்மொழியைக் கண்பாவைபோல் கட்டிக்காக்காத பல இனங்களின் மொழிகள் வழக்கொழிந்துபோயின என்பது வரலாற்றின் ஏடுகளில் காணக்கிடக்கிறது.

Sunday, March 14, 2010

உங்களுக்கு எவ்ளோ கடன் தெரியுமா?

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் வாங்கும் கடன் அளவு அதிகரித்து வருகிறதாம், அரசியல்வாதிகளின் சொத்துக்கள் கூடதான்! அதே நேரத்தில், திருப்பிச் செலுத்தும் அளவு குறைவாகவே உள்ளதாம். இதனால், தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும், 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, முந்தைய அரசு 28 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறி, புதிய வரிகளை விதித்தார். இதனால், மக்கள் மீதான சுமை அதிகரித்தது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், தமிழக அரசின் கடன் 53 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருந்தது. இப்படி மாறி மாறி கடனை வாங்கினாலும், அதை நியாயப்படுத்தவும் ஆளுங்கட்சிகள் தவறவில்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள கடன் வாங்குவது அவசியம் என்றும், கடன் வாங்காமல் எந்த அரசும் செயல்பட முடியாது என்றும் நியாயப்படுத்துகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, 10 சதவீதத்துக்கு உள்ளாகவே கடன் வாங்குகிறோம் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு குறைவாகவே, பட்ஜெட் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. பொதுக் கணக்கை மட்டும் பார்க்காமல் மற்றவற்றையும் சேர்த்தால், 3 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக் கும் என்பது தான் உண்மை. முந்தைய ஆட்சிகளில் கடனை திருப்பிச் செலுத்தும் அளவு கூடுதலாக இருந்தது. 1999ல் 8,545.81 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்ட போதிலும், 5,438.15 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டது. கடந்த 2000ம் ஆண்டில், 11 ஆயிரத்து 596 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 7,719 கோடியே 99 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டது. 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில், 65 ஆயிரத்து 627.63 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 34 ஆயிரத்து 844.71 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கடன் வாங்குவது குறைந்தும், திருப்பிச் செலுத்துவது அதிகரித்தும் வந்ததைக் காண முடிகிறது. கடந்த 2006ல் தி.மு.க., அரசு அமைந்த பின், 53 ஆயிரத்து 526.63 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, இதுவரை 19 ஆயிரத்து 155.84 கோடி ரூபாய் தான் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியை விட தி.மு.க., ஆட்சியில் குறைவான அளவே கடன் வாங்கப்பட்டிருந்தாலும், திருப்பிச் செலுத்தும் தொகை மிகக் குறைவாக இருந்ததால், கடன் சுமை அதிகரித்துள்ளது.

பொதுக் கடனை பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளில் பெற்ற கடனுக்கான அசல் மற்றும் வட்டி அடுத்தடுத்த ஆண்டுகளில் தான், திருப்பிச் செலுத்தப்படுகிறது. இருந்தாலும், கடன் சுமையைக் குறைக்க, திருப்பிச் செலுத்தும் தொகையை அதிகரித்து இருக்கலாம். ஆண்டுதோறும் பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக கடன் வாங்கி ஈடுகட்டுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறு ஈடுகட்டப்பட்டு, அதிகரித்துள்ள கடன் சுமை ஒவ்வொன்றும் மக்கள் தலையில் தான் விடியும். மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலில் ஒவ்வொரு லிட்டருக்கும் வசூலிக்கப்படும் கட்டணத்தில் பாதியளவு மாநில, மத்திய அரசுகளுக்கு வரியாகப் போகிறது. சாலை வரி, கல்வி வரி போன்ற சேவை வரிகள், சம்பளம் வாங்குவோரிடம் மாநகராட்சிகள் வசூலிக்கும் தொழில் வரி, இது தவிர ஆண்டுதோறும் வருமான வரி என, அனைத்து விதத்திலும் வரிகளைச் செலுத்தி, நடுத்தர வர்க்கத்தினர் தடுமாறிக் கொண்டுள்ளனர். மக்களின் இந்தச் சுமையை குறைக்க வேண்டிய அரசு, மேலும் மேலும் கடனை வாங்கி, அதைச் சரிகட்ட, இது போன்று புதுப்புது வழிகளில் வருவாய் தேடி வருகிறது. கடந்த நான்காண்டு காலத்தில், தமிழக அரசு எந்த பொருளுக்கும் வரியை உயர்த்தாவிட்டாலும், "டாஸ்மாக்' வருமானம் மற்றும் உள்ளாட்சிகள் மூலம் வருவாய் உயர்வு போன்றவற்றால் சமாளித்து வருகிறது. அதே சமயம், கடன் வாங்கும் அளவும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில், தமிழக அரசுக்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது.

கடந்த 1988-89 வரை, கடன்கள் ஆண்டுக்கு 1,027 கோடி, 1,554 கோடி ரூபாய் என்ற அளவில் தான் வாங்கப்பட்டது. திருப்பிச் செலுத்தியது போக, மீத கடன் சுமை, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் அளவில் இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த கடன் சுமை தான், மொத்தமாக இன்றைக்கு 73 ஆயிரம் கோடி ரூபாயாக தமிழகத்தின் மீது உள்ளது. ஏறத்தாழ, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் பெயரிலும் 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமை உள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிதி பொறுப்புடைமைச் சட்டப்படி, மாநில அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு மேல் கடன் பெறக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது. அதற்கு மேல் கடன் வாங்கினால், மாநிலத்தின் நிதி நிலைமை பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். காரணம், அதற்கு மேல் கடன் வாங்கினால், வட்டியை மட்டுமே கட்ட முடியும்; அசலை திருப்பிச் செலுத்த முடியாது.

Wednesday, March 10, 2010

ஓவியர் எப்.எம்.உசேனுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு தர???

ஓவியர் எப்.எம்.உசேன், நடிகை மாதுரி தீட்சித்தின் தீவிர பக்தரான இவர் வக்ர புத்தியின் விளைவாக, சில இந்துக்கடவுள்களை இவர் அம்மணமாக வரைந்து, 20 ஆண்டுகளுக்கு முன் வம்பில் மாட்டிக் கொண்டவர். அம்மணமாக அனுமான், ஆடை இல்லாத சீதையை முதுகில் சுமந்து கொண்டு பறப்பதாக, ராமாயணத்தில் எங்கே ஐயா வருகிறது? எனினும், உசேனின் கற்பனை, அம்மாதிரி சித்திரத்தைத் தீட்டியுள்ளது. விளைவு, உசேனுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள், நீதிமன்றங்களில் வழக்குகள். ஓடிவிட்டார் ஓவியர் முஸ்லிம் நாடுகளுக்கு. தற்போது, "கத்தாரில்' தங்கியுள்ளார். அந்நாடு அவருக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அரபுமொழி தெரிந்தவர்களுக்கு, அங்கு குடியுரிமை வழங்கப்படுவது எளிது என்கின்றனர். இந்த குடியுரிமையை ஏற்றுக் கொண்ட ஹுசேன் , தோகாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தன் இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். இருந்தாலும், தன் தாய் நாடான இந்தியாவுடன் உள்ள தொடர்பை துண்டிக்க விரும்பாத அவர், வெளிநாட்டு இந்தியருக்கான குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

கருத்து மற்றும் படைப்புச் சுதந்திரம் ஒரு கலைஞனுக்கு உண்டு என்பது இவர்களது வாதம். ஒரு கலைஞனின் வரம்பு மீறிய சிந்தனைச் சுதந்திரம், ஒரு மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கக்கூடாது என்பதை இவர்கள் வலியுறுத்துவதில்லை. தற்சமயம், "ஓவியர் உசேனை, நமது நாட்டிற்குத் திரும்ப அழைத்து, அவருக்கு தகுந்த பாதுகாப்பளிக்க வேண்டும்” என்று, சில அறிவு ஜீவிகளும், அரசியல்வாதிகளும் குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர். இந்தியாவில் இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதி கிடையாது. எனவே, பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைப்பது தவிர வேறு வழியில்லை என்பதால், அதற்கான நடைமுறைகளை அவர் பின்பற்றியிருக்கிறார்.

முஸ்லிம்களை தாஜா செய்வதே, மதச்சார்பின்மைக்கு அடையாளம் என்று கருதிடும் நமது மத்திய அரசும், அவர் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று, அவருக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு தர யோசித்து வருகிறது. இது ஆபத்தான போக்கு. வீண் வம்பை வரவேற்பதாக முடியும். உசேன் சாகேப், முஸ்லிம் நாடுகளிலேயே சந்தோஷமாக இருக்கட்டுமே?

Tuesday, March 9, 2010

பெண்களுக்கான 33% வரமா? சாபமா?

1997ஆம் ஆண்டிலிருந்து பெண்களுக்கான 33 விழுக்காடு ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. இன்றைக்கு எந்த அடிப்படையில் அதன் நிறைவேற்றத்தை சமாஜ்வாடி, இராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சிகள் (தி.மு.க.வும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது) எதிர்க்கின்றனவோ அதே காரணத்திற்காகவே இன்றும் எதிர்க்கின்றன. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிய பங்களிக்க வேண்டும் என்பதை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. ஆனால், இந்தியாவைப் போன்ற சாதிய சமூதாயம் நிலைபெற்றுள்ள ஒரு நாட்டில் உண்மையான பிரதிநிதித்துவம் எல்லா சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டுமெனில், உள் ஒதுக்கீடு - அதாவது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம், கிறித்தவர் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கும் - உரிய விழுக்காட்டளவில் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.

அதனால்தான், இக்கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாட்டை காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாக எதிர்த்து எந்த விளக்கத்தையும் தர மறுக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை முதலில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை நிறைவேற்றிட வேண்டும், பிறகு உள் ஒதுக்கீட்டை செய்துக்கொள்ளலாம் என்பது. ஆனால், அதனை முதலிலேயே செய்து நிறைவேற்றிட வேண்டும் என்பது எதிர்க்கும் கட்சிகளின் நிலைப்பாடாகும். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்போர், நாட்டின் நலனுடன் தாங்கள் சார்ந்த மாநிலத்தின் நலனையும், அத்தோடு இந்நாட்டின் உற்பத்தியில் தங்களின் உழைப்பின் மூலம் பெரும் பங்கு அளிக்கும் அனைத்து சமூகத்தின் நலன்களையும் கருத்தில் கொண்டு செயலாற்றுபவர்களாக இருக்க வேண்டும். அந்த நிலை நமது நாடாளுமன்றத்தில் நிலவ வேண்டுமெனில், பெண்கள் ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்து அதனை நிறைவேற்றலாம். அதிகாரமயமாக்கல் என்பது அனைத்துத் தட்டு மக்களின் பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருக்க வேண்டுமல்லவா?

நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு செய்வதால், அது ஜனநாயக ரீதியான உண்மையான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கும் பதில் தேட வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு ஒதுக்கீடு நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது. ஊராட்சி மன்றம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சிகளில் தற்போது பெண்களுக்கான 33 விழுக்காடு ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

இந்த ஒதுக்கீட்டின் காரணமாக, மக்களுக்கு தொண்டு செய்யும் அந்த அதிகாரத்தில் வந்த அமர்ந்துள்ள பெண்களெல்லாம் யார் என்று ஆராய்ந்தால், அவர்கள் அனைவரும் எந்தக் கட்சியின் சார்பாக தேர்வு செய்யப்பட்டார்களோ, அந்தக் கட்சியின் அப்பகுதியில் முக்கியப் பிரமுகரின் மனைவியாகவே, பெண்ணாகவோ அல்லது உறுப்பினராகவோதான் இருக்கின்றனர். பெண்கள் ஒதுக்கீடு இல்லாமல், தேர்தல் நடந்திருந்தால் யார் அந்தந்தக் கட்சிகளின் சார்பாக நின்றிருப்பரோ அவர்களுடைய மனைவி அல்லது குடும்பத்தார்தான் இந்த ஒதுக்கீட்டின் மூலம் தேர்தலில் நின்று பதவிக்கு வந்துள்ளனர். இந்த நிலையை மாற்றக் கூடிய ‘சக்தி’ பெண்கள் ஒதுக்கீட்டை ஆதரிக்கும், எதிர்க்கும் எந்தக் கட்சிக்காவது இருக்கிறதா?

மனைவி பதவியில் இருக்கிறார், பின்னால் இருந்து கட்சிக்கார கணவன் இயக்குகிறார்! பெண்கள் ஒதுக்கீடு உள்ளாட்சி நிர்வாகத்தில் சாதித்துள்ளது இதுதான். எனவே, இதுநாள் வரை எது உள்ளாட்சி நிர்வாகங்களில் நடந்து கொண்டிருக்கிறதோ அதுவே நாளை நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் நடைபெறப் போகிறது! ஏற்கனவே நமது நாட்டு அரசியல் ஜனநாயகம் என்பது பிரதமர் பதவியிலிருந்து முதல்வர், அமைச்சர், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆவது வரை குடும்ப ஜனநாயகமாகத்தான் இருக்கிறது. இதில் பெண்களுக்கான ஒதுக்கீடும் வந்துவிட்டால் அது ‘குடும்ப ஜனநாயக சாம்ராஜ்’யங்களை மேலும் பலப்படுத்தத்தான் உதவுமே தவிர, அது எந்த விதத்திலும் பெண்களை அதிகாரமயமாக்க உதவப் போவதில்லை. நமது நாட்டின் அரசியல் போக்கு அப்படி உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸில் இருந்து பா.ஜ.க., கம்யூனிஸ்ட் வரையிலான தேசியக் கட்சிகளிலிருந்து தி.மு.க., பிஜூ ஜனதா தளம் வரையிலான மாநிலக் கட்சிகள் வரை பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை உள்ளனவாக இருந்தால், அதில் ஒரு நிபந்தனையைச் சேர்க்க வேண்டும். ஒரு குடும்பத்திலுள்ளவர் தேர்தல் ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட உறுப்பினராக நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டப் பேரவையிலோ அல்லது உள்ளாட்சி நிர்வாகத்திலோ அல்லது பிரதமராகவோ, முதல்வராகவோ அல்லது அமைச்சகராகவோ இருந்தால் அவருடைய இரத்த உறவினராக உள்ள பெண்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற நிபந்தனையைச் சேர்க்க வேண்டும்.

ஒரு குடும்பத்திலிருந்து ஒரு பெண் அவ்வாறு பதவியில் இருந்தாலும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆணோ அல்லது பெண்ணோ கூட தேர்த‌லில் போட்டியிட முடியாது என்ற நிபந்தனையும் இருக்க வேண்டும். அப்போது அரசியல் கட்சி, குடும்ப செல்வாக்கு வளையத்திற்கு வெளியே உள்ள பெண்களுக்கு வாய்ப்பும் கிடைக்கும், குடும்ப அரசியலிற்கும் ஒரு முடிவும் ஏற்படும்.

Monday, March 8, 2010

நம் தாத்தாக்களின் கனவுக்கன்னி!

ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை, இன்று பெங்களூருவில் கிழிந்த உடையுடன், கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்த்து கொண்டிருக்கிறார். அந்த பழம்பெரும் நடிகையின் பெயர் காஞ்சனா. சிவந்த மண், காதலிக்க நேரமில்லை, சாந்தி நிலையம், உத்தரவின்றி உள்ளே வா, பாமா விஜயம் உள்ளிட்ட 150க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் காஞ்சனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களின் மூலம் லட்ச லட்சமாய் சம்பாதித்தார். ஆனால் இப்போது பெங்களூருவில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்துக் கொண்டிருப்பதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.

பெங்களூருவின் புறநகர் பகுதியான எலகங்காவில் உள்ள கணேசா கோயிலுக்கு அருகில் வசித்து வரும் அவர் கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாராம். மஞ்சள் நிற பழைய நூல் புடவை, கிழிந்த ஜாக்கெட்டுடன் அந்த பகுதியை வலம் வரும் காஞ்சனா, ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படித்து முடித்து விட்டு ஏர் ஹோஸ்டஸ் பணியில் சேர்ந்தேபோதே ஜமீன் வீட்டு பெண் வேலைக்கு ‌போவதா? என்று குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதாம். குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி நடிகையானவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் பலருக்கும் தெரியாத சமீபத்தில் சரோஜாதேவிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்பார் என திரையுலகை சேர்ந்த பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சரோஜாதேவியே நேரில் சென்று அழைத்தும் அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் காஞ்சனா தவிர்த்தார்.

இந்த நிலையில்தான் காஞ்சனா பற்றிய இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. தான் இப்போது படும் கஷ்டம் குறி்த்து காஞ்சனா அளி்த்துள்ள பேட்டியில், ஒருவர் நன்றாக வாழ்ந்ததை வெளிப்படுத்திக் கொள்வதில் பெருமைப்படலாம். எனது தற்போதைய வாழ்க்கையை‌ வெளியுலகம் அறிந்து, ஐயோ... இப்படி ஆயிட்டாளே... என்று என் மீது இரக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நன்றாக வாழும் காலத்தில் தான் சம்பாதிப்பதை யாரையும் நம்பி ஒப்படைக்கக் கூடாது. அப்படி செய்தால் என்னை என்னைப்போலத்தான் கஷ்டப்பட வேண்டும். இது என் தலைவிதி. மகாராணி போல வாழ்ந்தவள் இன்று இப்படி அல்லாடறேன், என்று கூறியுள்ளார்.

திரையுலகில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் எத்தனையோபேர் காஞ்சனாவைப் போன்று கஷ்டத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் வீரியமுடனம் பேசும் நடிகர்களும், நடிகர் சங்கமும் இதுபோன்று கஷ்டப்படும் நட்சத்திரங்களுக்கு ஏதாவது உதவி செய்வார்களா? அல்லது கப்சிப்பென கண்களை மூடிக் கொண்‌டே இருந்து விடுவார்களா?