Sunday, August 30, 2009

வேலையைக் காப்பாத்திக்கோங்க!!

பொருளாதாரத் தேக்கநிலை இன்னமும் சரியாகாத நிலையில் இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதத்திற்குள் ஒரு லட்சத்து 72 ஆயிரம் பேரின் வேலை பறிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் 40 ஆயிரம் ஒப்பந்தப் பணிகள் தோன்றியுள்ளன. எனவே நிகர வேலையிழப்பு ஒரு லட்சத்து 32 ஆயிரமாக உள்ளது. வேலையிழப்புகளுடன் பிற துறைகளில் வருமான இழப்பும் ஏற்பட்டுவருகிறது. ஜெம் மற்றும் நகைத் தொழிலில் மட்டுமே வருமானங்கள் அதிகரித்துள்ளன. டெக்ஸ்டைல், மெட்டல், ஜெம் மற்றும் நகைத் தொழில், போக்குவரத்து, ஐ.டி., பி.பி.ஓ., ஆகிய துறைகளில் நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

மலேசியாவில் மாற்றம்:

மலேசியாவில் தொடர்ந்து வேலையிழப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்கான பெர்மிட்களுக்கு மலேசிய அரசு தடைவிதித்துள்ளது. உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில் வேலையிழந்த அந்த நாட்டு மக்களுக்கு இப் பணிகளைத் தர வேண்டும் என்று மலேசிய அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. மலேசியாவின் ஊழியர் தேவைகளுக்கு அது இந்தியாவையே பெரிதும் நம்பி வந்துள்ளது. கட்டுமானம், பிளான்டேஷன், ரெஸ்டாரண்ட் துறைகளில் இந்தோனேஷியா , வங்கதேசம் நேபாளம் போன்ற நாடுகள் மலேசியாவிற்கு உதவியாக இருந்து வந்துள்ளன.

அமெரிக்காவில் தற்காலிகப் பணி நியமனம்:

அமெரிக்காவில் வெரிடியூட் என்னும் மனித வள மேம்பாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி அமெரிக்காவிலுள்ள 45 சதவீத நிறுவனங்களில் ஐ.டி., மற்றும் புரபஷனல் ஊழியர்கள் தற்காலிகமாகப் பணி நியமனம் செய்யப்படுவர் என கணித்துள்ளது. ஒன்று திரட்டப்பட்டு சேர்ந்து இயங்கவுள்ள 25 சதவீத நிறுவனங்களில் ஐ.டி., மற்றும் புரபஷனல் பணிகளை அதிகரிக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. திறன் வாய்ந்த பணியாளர்களை இப்படி ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகப் பணியிலமர்த்துவதன் மூலமாக பொருளாதார தேக்க நிலையை சமாளிக்க முடிவதோடு செலவுகளையும் குறைக்க முடியும் என்பதாலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

No comments:

Post a Comment