Wednesday, March 10, 2010

ஓவியர் எப்.எம்.உசேனுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு தர???

ஓவியர் எப்.எம்.உசேன், நடிகை மாதுரி தீட்சித்தின் தீவிர பக்தரான இவர் வக்ர புத்தியின் விளைவாக, சில இந்துக்கடவுள்களை இவர் அம்மணமாக வரைந்து, 20 ஆண்டுகளுக்கு முன் வம்பில் மாட்டிக் கொண்டவர். அம்மணமாக அனுமான், ஆடை இல்லாத சீதையை முதுகில் சுமந்து கொண்டு பறப்பதாக, ராமாயணத்தில் எங்கே ஐயா வருகிறது? எனினும், உசேனின் கற்பனை, அம்மாதிரி சித்திரத்தைத் தீட்டியுள்ளது. விளைவு, உசேனுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள், நீதிமன்றங்களில் வழக்குகள். ஓடிவிட்டார் ஓவியர் முஸ்லிம் நாடுகளுக்கு. தற்போது, "கத்தாரில்' தங்கியுள்ளார். அந்நாடு அவருக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அரபுமொழி தெரிந்தவர்களுக்கு, அங்கு குடியுரிமை வழங்கப்படுவது எளிது என்கின்றனர். இந்த குடியுரிமையை ஏற்றுக் கொண்ட ஹுசேன் , தோகாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தன் இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். இருந்தாலும், தன் தாய் நாடான இந்தியாவுடன் உள்ள தொடர்பை துண்டிக்க விரும்பாத அவர், வெளிநாட்டு இந்தியருக்கான குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

கருத்து மற்றும் படைப்புச் சுதந்திரம் ஒரு கலைஞனுக்கு உண்டு என்பது இவர்களது வாதம். ஒரு கலைஞனின் வரம்பு மீறிய சிந்தனைச் சுதந்திரம், ஒரு மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கக்கூடாது என்பதை இவர்கள் வலியுறுத்துவதில்லை. தற்சமயம், "ஓவியர் உசேனை, நமது நாட்டிற்குத் திரும்ப அழைத்து, அவருக்கு தகுந்த பாதுகாப்பளிக்க வேண்டும்” என்று, சில அறிவு ஜீவிகளும், அரசியல்வாதிகளும் குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர். இந்தியாவில் இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதி கிடையாது. எனவே, பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைப்பது தவிர வேறு வழியில்லை என்பதால், அதற்கான நடைமுறைகளை அவர் பின்பற்றியிருக்கிறார்.

முஸ்லிம்களை தாஜா செய்வதே, மதச்சார்பின்மைக்கு அடையாளம் என்று கருதிடும் நமது மத்திய அரசும், அவர் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று, அவருக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு தர யோசித்து வருகிறது. இது ஆபத்தான போக்கு. வீண் வம்பை வரவேற்பதாக முடியும். உசேன் சாகேப், முஸ்லிம் நாடுகளிலேயே சந்தோஷமாக இருக்கட்டுமே?

No comments:

Post a Comment